LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி காலமானார்!!

சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவருமான மேலாண்மை பொன்னுச்சாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.அவருக்கு வயது 66

கிராமப்புற எளிய மக்களின் வாழ்க்கைப் பாடுகளை தன்னுடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் உரத்துப் பேசும் குரலாகவே மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார். தமிழ் இலக்கியத்திலும் சரி, முற்போக்கு இலக்கியத்திலும் சரி, மேலாண்மை பொன்னுச்சாமியின் பங்களிப்பு அளப்பரியது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கிய 32 எழுத்தாளர்களில் ஒருவரான  இவர், விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்கிற கிராமத்தில் பிறந்தார். இவருக்கு 10 வயதாக இருக்கும்போது, தந்தையை இழந்தார். இளம் வயதிலேயே தாயையும் இழந்து, அவரும் அவருடைய தம்பி கரிகாலனும் வாழ்வோடு மல்லுக்கட்டி, வறுமையைத் தங்கள் மனபலத்தால் வென்று தம்மை நிலைநிறுத்திக்கொண்டவர்கள்.

கல்வி மறுக்கப்பட்ட குழந்தையாக வளர்ந்த  இவருக்கு, புத்தகங்களின்மீது தீராக் காதல் இருந்தது. அப்போது  இவர், கதைகளும் எழுதத் தொடங்கினார். 1972இல் ‘செம்மலர்’ இதழில் பரிசு என்ற சிறுகதையை முதலில் எழுதினார். இவர் 24 சிறுகதை தொகுப்புகள், 6 நாவல்கள், 5 குறுநாவல்கள், ஒரு கட்டுரை தொகுப்பை எழுதியுள்ளார்.

லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது, அமுதன் அடிகளார் விருது, வடஅமெரிக்க தமிழ்சங்க பேரவை விருது, 5 முறை ஸ்டேட் பாங்க் விருது, 8 முறை இலக்கிய சிந்தனை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இதுவரை பெற்றுள்ளார். கல்கி சிறுகதை போட்டியில் இரண்டு முறை இவரது சிறுகதைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய ‘மின்சார பூ’ என்ற சிறுகதை தொகுப்பிற்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது கடந்த 2007 ம் ஆண்டு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை உடல் நலக்குறைவால் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அவரது உயிர் உடலை விட்டு பிரிந்தது.

by Swathi   on 30 Oct 2017  0 Comments
Tags: பொன்னுச்சாமி காலமானார்   எழுத்தாளர்   சாகித்ய அகாடமி விருது   Melanmai Ponnusamy   Melanmai Ponnusamy Died        
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் இலக்கியத்தில் மேலாண்மையின் இடம் -இரா.தெ.முத்து தமிழ் இலக்கியத்தில் மேலாண்மையின் இடம் -இரா.தெ.முத்து
ஷார்ஜா புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வாசகர்களுடன் சிறப்பு சந்திப்பு!! ஷார்ஜா புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வாசகர்களுடன் சிறப்பு சந்திப்பு!!
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி காலமானார்!! சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி காலமானார்!!
பெயர் போன எழுத்தாளர் - நிர்மலா ராகவன் பெயர் போன எழுத்தாளர் - நிர்மலா ராகவன்
எழுத்தாளர் பூமணியின் அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு !! எழுத்தாளர் பூமணியின் அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு !!
2014-பாராளுமன்றத் தேர்தலில் எழுத்தாளர் ஞானி பெற்ற வாக்குகள் 2014-பாராளுமன்றத் தேர்தலில் எழுத்தாளர் ஞானி பெற்ற வாக்குகள்
இளைஞர்களுக்கு தங்கள் குடும்பத்தின் மீது பிடிப்பு ஏற்பட சுஜாதா கொடுக்கும் 10 ஆலோசனைகள் !! இளைஞர்களுக்கு தங்கள் குடும்பத்தின் மீது பிடிப்பு ஏற்பட சுஜாதா கொடுக்கும் 10 ஆலோசனைகள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.