லாலிகா ஸ்பானிஷ் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், ரியல் பெடிஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.இந்த லீக் ஆட்டத்தில் அபாரமாக விளையாடி 2 கோல் அடித்த அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி ஒரே வருடத்தில் அதிக கோல் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன் 1972ம் ஆண்டில் ஜெர்மனி வீரர் ஜெர்ட் முல்லர் 85 கோல் போட்டு சாதனையை படைத்தார்.சுமார் 40 ஆண்டுகாலமாக யாராலும் முறியடிக்காத இந்த சாதனையை படைத்த சாதனையை மெஸ்ஸி முறியடித்திருப்பது அர்ஜென்டினா மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.கடந்த ஸ்பானிஷ் லீக் சீசனில் 50 கோல் போட்டு அசத்திய மெஸ்ஸி 19040,50களில்ரோட்ரிகியூஸ் 232 கோல் அடித்து படைத்த சாதனையும் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ‘பிபா’ சார்பில் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த வீரர் விருதை அவர் தொடர்ந்து நான்காவது முறையாக வெல்வார் என கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
|