LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பத்துப்பாட்டு

முல்லைப்பாட்டு

 

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது. 
நூல்
நல்லோர் விரிச்சி கேட்டல்
நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல், போல,
பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி 5
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை,
அருங் கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது, 10
பெரு முது பெண்டிர், விரிச்சி நிற்ப  
தலைவியைத் தேற்றுதல்
சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், கைய
கொடுங் கோற் கோவலர் பின் நின்று உய்த்தர, 15
இன்னே வருகுவர், தாயர் என்போள்
நன்னர் நல் மொழி கேட்டனம்; அதனால்,
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல், தலைவர், வாய்வது; நீ நின் 20
பருவரல் எவ்வம் களை, மாயோய்! என,
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து,
பூப் போல் உண் கண் புலம்பு முத்து உறைப்ப  
பாசறையின் இயல்பு
கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில்,
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி, 25
வேட்டுப் புழை அருப்பம் மாட்டி, காட்ட
இடு முள் புரிசை ஏமுற வளைஇ,
படு நீர்ப் புணரியின் பரந்த பாடி  
யானைப் பாகரது செயல்
உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,
கவலை முற்றம் காவல் நின்ற 30
தேம் படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,
வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,
கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி, 35
கல்லா இளைஞர், கவளம் கைப்ப  
வீரர்கள் தங்கும் படைவீடுகள்
கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக் கோல் அசைநிலை கடுப்ப, நல் போர்
ஓடா வல் வில் தூணி நாற்றி
கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கை 40
பூந் தலைக் குந்தம் குத்தி, கிடுகு நிரைத்து,
வாங்கு வில் அரணம் அரணம் ஆக,  
அரசனுக்கு அமைத்த பாசறை
வேறு பல் பெரும் படை நாப்பண், வேறு ஓர்,
நெடுங் காழ்க் கண்டம் கோலி, அகம் நேர்பு,  
மங்கையர் விளக்குகளை ஏந்துதல்
குறுந்தொடி முன்கை, கூந்தல் அம் சிறு புறத்து, 45
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரிவு வரிக் கச்சின் பூண்ட, மங்கையர்
நெய் உமிழ் சுரையர் நெடுந் திரிக் கொளீஇ,
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட,  
மெய்காப்பாளர் காவல்புரிதல்
நெடு நா ஒள் மணி நிழத்திய நடு நாள், 50
அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்
சிதர் வரல் அசைவளிக்கு அசைவந்தாங்கு,
துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்
பெரு மூதாளர் ஏமம் சூழ  
நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல்
பொழுது அளந்து அறியும், பொய்யா மாக்கள், 55
தொழுது காண் கையர், தோன்ற வாழ்த்தி,
எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின்
குறு நீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப  
அரசன் படுக்கையில் கண்பொருந்தாது சிந்தனையில் ஆழ்தல்
மத்திகை வளைஇய, மறிந்து வீங்கு செறிவு உடை,
மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து, 60
வலி புணர் யாக்கை, வன்கண் யவனர்
புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்,
திரு மணி விளக்கம் காட்டி, திண் ஞாண்
எழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள்
உடம்பின் உரைக்கும், உரையா நாவின், 65
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக, 
மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது,  
அரசனது சிந்தனை
எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து,
பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய, 70
தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி,
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு
வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து,
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; 
ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை 75
முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து  
பாசறையில் வெற்றி முழக்கம்
பகைவர்ச் சுட்டிய படை கொள் நோன் விரல்,
நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி,
அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை  
தலைவனது பிரிவினால் தலைவி பெற்ற துயரம்
இன் துயில் வதியுநன் காணாள். துயர் உழந்து, 80
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு,
நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து,
பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல, 85
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து,
முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி
இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்
அஞ்செவி நிறைய ஆலின  
அரசன் வெற்றியுடன் மீண்டு வருதல்
வென்று, பிறர்
வேண்டு புலம் கவர்ந்த, ஈண்டு பெருந் தானையொடு, 90
விசயம், வெல் கொடி உயரி, வலன் ஏர்பு,
வயிரும் வளையும் ஆர்ப்ப,  
மழையினால் செழித்த முல்லை நிலம் காணுதல்
அயிர
செறி இலைக் காயா அஞ்சனம் மலர,
முறி இணர்க் கொன்றை நன் பொன் கால,
கோடல் குவி முகை அங்கை அவிழ, 95
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந் நிலப் பெரு வழி,
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்,
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள,
எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில், 100
அரசனது தேரின் வருகை
முதிர் காய் வள்ளிஅம் காடு பிறக்கு ஒழிய,
துனை பரி துரக்கும் செலவினர்
வினை விளங்கு நெடுந் தேர் பூண்ட மாவே.  
முல்லைப் பாட்டு முற்றிற்று
தனிப் பாடல்கள்
வண்டு அடைந்த கண்ணி வளர் ஆய்ச்சி வால் நெடுங் கண்
சென்று அடைந்த நோக்கம் இனிப் பெறுவது - என்றுகொல்
கன்று எடுத்து ஓச்சி, கனி விளவின் காய் உகுத்து,
குன்று எடுத்து நின்ற நிலை? 1
புனையும் பொலம் படைப் பொங்கு உளை மான் திண் தேர்
துனையும் துனைபடைத் துன்னார் - முனையுள்
அடல் முகந்த தானை அவர் வாராமுன்னம்,
கடல் முகந்து வந்தன்று, கார்! 2

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது. 
நூல்

நல்லோர் விரிச்சி கேட்டல்

நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடுவலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கைநீர் செல, நிமிர்ந்த மாஅல், போல,பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு,கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி 5பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை,அருங் கடி மூதூர் மருங்கில் போகி,யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,நாழி கொண்ட, நறு வீ முல்லைஅரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது, 10பெரு முது பெண்டிர், விரிச்சி நிற்ப  

தலைவியைத் தேற்றுதல்

சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்நடுங்கு சுவல் அசைத்த கையள், கையகொடுங் கோற் கோவலர் பின் நின்று உய்த்தர, 15இன்னே வருகுவர், தாயர் என்போள்நன்னர் நல் மொழி கேட்டனம்; அதனால்,நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்துவருதல், தலைவர், வாய்வது; நீ நின் 20பருவரல் எவ்வம் களை, மாயோய்! என,காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து,பூப் போல் உண் கண் புலம்பு முத்து உறைப்ப  

பாசறையின் இயல்பு

கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில்,சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி, 25வேட்டுப் புழை அருப்பம் மாட்டி, காட்டஇடு முள் புரிசை ஏமுற வளைஇ,படு நீர்ப் புணரியின் பரந்த பாடி  

யானைப் பாகரது செயல்

உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,கவலை முற்றம் காவல் நின்ற 30தேம் படு கவுள சிறு கண் யானைஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி, 35கல்லா இளைஞர், கவளம் கைப்ப  

வீரர்கள் தங்கும் படைவீடுகள்

கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்முக் கோல் அசைநிலை கடுப்ப, நல் போர்ஓடா வல் வில் தூணி நாற்றிகூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கை 40பூந் தலைக் குந்தம் குத்தி, கிடுகு நிரைத்து,வாங்கு வில் அரணம் அரணம் ஆக,  

அரசனுக்கு அமைத்த பாசறை

வேறு பல் பெரும் படை நாப்பண், வேறு ஓர்,நெடுங் காழ்க் கண்டம் கோலி, அகம் நேர்பு,  

மங்கையர் விளக்குகளை ஏந்துதல்

குறுந்தொடி முன்கை, கூந்தல் அம் சிறு புறத்து, 45இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்விரிவு வரிக் கச்சின் பூண்ட, மங்கையர்நெய் உமிழ் சுரையர் நெடுந் திரிக் கொளீஇ,கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட,  

மெய்காப்பாளர் காவல்புரிதல்

நெடு நா ஒள் மணி நிழத்திய நடு நாள், 50அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்சிதர் வரல் அசைவளிக்கு அசைவந்தாங்கு,துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்பெரு மூதாளர் ஏமம் சூழ  

நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல்

பொழுது அளந்து அறியும், பொய்யா மாக்கள், 55தொழுது காண் கையர், தோன்ற வாழ்த்தி,எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின்குறு நீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப  

அரசன் படுக்கையில் கண்பொருந்தாது சிந்தனையில் ஆழ்தல்

மத்திகை வளைஇய, மறிந்து வீங்கு செறிவு உடை,மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து, 60வலி புணர் யாக்கை, வன்கண் யவனர்புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்,திரு மணி விளக்கம் காட்டி, திண் ஞாண்எழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள்உடம்பின் உரைக்கும், உரையா நாவின், 65படம் புகு மிலேச்சர் உழையர் ஆக, மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது,  

அரசனது சிந்தனை

எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து,பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப்பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய, 70தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி,சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபுவைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து,உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை 75முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து  

பாசறையில் வெற்றி முழக்கம்

பகைவர்ச் சுட்டிய படை கொள் நோன் விரல்,நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி,அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை  

தலைவனது பிரிவினால் தலைவி பெற்ற துயரம்

இன் துயில் வதியுநன் காணாள். துயர் உழந்து, 80நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு,நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும்,மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து,பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல, 85இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து,முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவிஇன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்அஞ்செவி நிறைய ஆலின  

அரசன் வெற்றியுடன் மீண்டு வருதல்

வென்று, பிறர்வேண்டு புலம் கவர்ந்த, ஈண்டு பெருந் தானையொடு, 90விசயம், வெல் கொடி உயரி, வலன் ஏர்பு,வயிரும் வளையும் ஆர்ப்ப,  

மழையினால் செழித்த முல்லை நிலம் காணுதல்

அயிரசெறி இலைக் காயா அஞ்சனம் மலர,முறி இணர்க் கொன்றை நன் பொன் கால,கோடல் குவி முகை அங்கை அவிழ, 95தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப,கானம் நந்திய செந் நிலப் பெரு வழி,வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்,திரி மருப்பு இரலையொடு மட மான் உகள,எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில், 100

அரசனது தேரின் வருகை

முதிர் காய் வள்ளிஅம் காடு பிறக்கு ஒழிய,துனை பரி துரக்கும் செலவினர்வினை விளங்கு நெடுந் தேர் பூண்ட மாவே.  

முல்லைப் பாட்டு முற்றிற்று



தனிப் பாடல்கள்

வண்டு அடைந்த கண்ணி வளர் ஆய்ச்சி வால் நெடுங் கண்சென்று அடைந்த நோக்கம் இனிப் பெறுவது - என்றுகொல்கன்று எடுத்து ஓச்சி, கனி விளவின் காய் உகுத்து,குன்று எடுத்து நின்ற நிலை? 1
புனையும் பொலம் படைப் பொங்கு உளை மான் திண் தேர்துனையும் துனைபடைத் துன்னார் - முனையுள்அடல் முகந்த தானை அவர் வாராமுன்னம்,கடல் முகந்து வந்தன்று, கார்! 2

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.