LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- நினைவாற்றல் (Memory Power)

மனம் - சிந்தனை - மூளை - ஆயுர்வேதம்

 உணர்ச்சிக்கு மூல காரணமாக இருப்பது மூளை என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். இந்த உணர்வு பல காரணங்களால் மாறக்கூடும். உடலில் சில உறுப்புகளாகிய இதயம், மூச்சுக்காற்றை இயக்கும் நுரையீரல் தம் தம் வேலைகளை செய்துகொண்டிருந்த போதும் ஞானேந்திரியங்களாகிய கண், காது, மூக்கு போன்றவற்றின் செயல்கள் தடைப்பட்டிருக்கும் போது, மனிதன் உணர்வற்றவனாகிவிட்டான் என்று கூறுகிறோம். இந்நிலைமைதான் மதம் அல்லது மூர்ச்சை என்று சொல்கிறோம். இந்நிலைமை மது அருந்துவதாலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானாலும், அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்களைக் கேட்டாலோ, பார்ப்பதாலோ வரக்கூடும். ஆக, உடலுக்குத் தேவைப்படாத விஷவஸ்துக்கள் அதிகரித்தால் மூளை பாதிப்பு ஏற்பட்டு சுயநினைவை இழக்க நேரிடுகிறது. ரத்தத்திலும், பிற உடலின் திரவங்களிலும் இருக்கும் ரஸாயனப்பொருள்கள் மூளையை பாதிக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.

மூளையைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டேயிருந்தாலும் அதன் ஆளுமை சக்தி பற்றிய விபரங்கள் போதவில்லை. ஆனால் மூளை சதா உழைத்துக் கொண்டேதான் இருக்கிறது. தூக்கத்திலும் கூட அது உழைக்கிறது. அதற்கு ஓய்வு தேவையில்லை என்று விஞ்ஞானபூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். அதிலும் யோகிகளைத் தவிர மற்றவர்கள் அதன் தொழிலைத் தடுக்கவோ குறைக்கவோ முடியாதென்னும் தெரிவிக்கிறார்கள். அது எப்போதும் சர்வ ஜாக்கிரதையாக உடலை பாதுகாக்கிறது. சர்க்கரையின் அளவு ரத்தத்தில் கூடும் போது பேன்கிரியாஸ் எனும் கிரந்திக்குச் செய்திகளை அனுப்பி இன்சுலின் திரவத்தை அதிக அளவில் பெருக்கி சர்க்கரையின் அளவை அதிரடியாகக் குறைக்கச் செய்கிறது. சர்க்கரை அளவை மிகவும் குறைந்துவிட்டால் கல்லீரலுக்கு செய்தி அனுப்பி அதனிடமிருக்கிற சர்க்கரையின் மூலப் பொருளை அதிகரிக்கச் செய்கிறது. உடலுக்கு எது தேவையோ அதனிடத்தில் விருப்பம் உண்டாக்குகிறது. உடலுக்கு எது தேவையில்லையோ, எது இருந்தால் நோய்க்குக் காரணமாகிறதோ அதன் மேல் வெறுப்பை உண்டாக்குகிறது.

மூளையை சுற்றி பல வகைப்பட்ட திரவங்களும் ரத்தமும், கிரந்திகளும் அமைந்துள்ளன. மூளைக்கும் உடலுக்கும் இருவிதமான நரம்புத் தொடர்களால் சம்பந்தம் ஏற்படுகிறது. மூளையிலிருந்து உடலுக்குச் செல்லும் செய்தி மற்றும் செயல்கள் அனைத்தும் ஆஜ்ஞாவஹ நாடிகளில் நடை பெறுகின்றன. சம்ஜ்ஞாவஹ நாடிகள் செய்தி மற்றும் செயல்களை உடலிலிருந்து மூளைக்கு கொண்டு செல்கின்றன. மூளை தலைமை ஸ்தாபனமாகவும் அங்கிருந்த படியே பல பிரிவுகளை உடைய நரம்புக் கூட்டங்கள் மூலம் ஜாக்கிரதை உணர்வையும், வேலையை தடுக்கவோ, அதிகரிக்கவோ செய்கிறது.மூளையின் ஒவ்வொரு பாகமும் தனித் தனியே வேலை செய்கிறது. கைகளை இயக்க ஒரு பகுதி, கால்களை இயக்க மற்றொரு பகுதி, பார்வைக்கு ஒரு பகுதி, பேச்சிற்கு ஒரு பகுதி என்று, மூளையை செயல் இழப்பு அந்தந்த பகுதிகளை பாதிக்கிறது.ஒரு சிலர் அறிவாளியாக திகழ்வதற்குக் காரணம் மூளையின் மேற்புறத்தில் அநேக வளைவுகள் அளவு கூடுவதால்தான். இவ்வளைவுகளில் கோடிக்கணக்கான கோசாணுக்களிருக்கின்றன. ஒவ்வொரு கோசாணுவிற்கும் இரண்டிரண்டு படர் கொடிகளிருக்கின்றன. இவைகளின் மூலமாக ஒன்றிருந்து மற்றொரு கோசாணுவிற்கு மின் ரசாயனச் செய்திகள் பரவுகின்றன. இந்த வலி ஞாபகம் முதலியவைகள் இந்த அணுக்கள் மூலம் மின் ரசாயனச் செய்திகளால்தான் நடைபெறுகின்றன.உடல் பலத்திற்கு தேகப்பயிற்சி தேவை. அதுபோல அறிவு வளர்ச்சிக்குப் பயிற்சி தேவை. அறிவுக்கு எவ்வளவு பயிற்சி அளிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அது சிறப்பாகக் கூடும், பலம் பொருந்தியாதாகும். அறிவை தாய் தந்தையர் மூலம் ஓரளவுக்கு கிடைத்துள்ளது. அதைக் கொண்டு ஒருவன் மேதாவியாவது ஒருவனின் சூழ்நிலையும் பயிற்சியும் சிறப்பாக அமைவதில்தான் உள்ளது.

அறிவு வளர்ச்சிக்கு மூல காரணம் கவனித்தலும் சர்ச்சை செய்வதும் ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்குமிருக்கும் சம்பந்தா சம்பந்தத்தை அறிந்து கொள்வதும் ஆகும். அறிவு வளர்ச்சி, நேர்மையான சிநத்னையாலும், தர்க்க ரீதியாக பேசுவதாலும், மனதின் பண்பாட்டாலும் ஏற்படும். அறிவு வளர்ச்சிக்குப் பசுவின் நெய் உதவுகிறது. மூளையின் பெரும்பாகம் ஒரு வகை கொழுப்பு உள்ளதாகயிருக்கிறது. அதுவே ஆகாரமாகவுமாகிறது. அதற்கு வேண்டிய ஆகாரவஸ்து பசுவின் நெய்யிலிருந்து உண்டாகிறது. அதனால்தான் ஆயுர்வதேத்தில், பசு நெய்யின் குணங்களைச் சொல்லுமிடத்து புத்தி, ஞாபகசக்தி, தாரணாசக்தி முதலியவைகளுக்கு உதவும் என்று சொல்லப்படுகிறது. அதாவது விஷயங்களை அறிவதற்கும், அறிந்த பொருள்களை திரும்புவம் ஞாபகப்படுத்துவதற்கும், தெரிந்த விஷயங்களை மனத்திலேயே தேக்கி வைத்துக் கொள்வதற்கும் பசுவின் நெய் உதவுகிறது.

சிலருக்கு ஞாபக சக்தி குறைவதற்குக் காரணம் அறிகின்ற விஷயத்தைப் பற்றிய முழு உணர்வுடன் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் அறியத் தவறுவதால் மூளையில் பதிவுகள் குறைவதால்தான். வயதான காலத்தில் ஞாபக சக்தியோ தாரண சக்தியோ குறையக்கூடும் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லை. அறிவு வளர்ச்சிக்கு வயோதிகத் தன்மை கூடாது என்பதற்கும் தேவையான சான்றுகள் கிடையாது. மூளைக்குப் போகின்ற ரத்தக் குழாய்கள் சரியாக வேலை செய்தாலும் போதுமான ஆகார வகைகள் இருந்தாலும் மூளையின் வேலை சரியாகவே நடக்கும். சர்க்கரை நோய், பாண்டு, சோகை போன்றவற்றால் மூளையின் தொழில் குறையக்டும். கிழத்தன்மையில் இந்திரியங்கள் சரிவர வேலை செய்வதற்கென்றே சில 'ரசாயனங்கள்' என்கிற மருந்துகளை சாப்பிட வேண்டியுள்ளது. இவைகளால் ஓரளவு இழந்த சுறுசுறுப்பைத் திரும்பவும் பெற முடியும். மூளைக்கு அதிக ஓய்வு கொடுத்தால் அதை மறுபடியும் இயங்கச் செய்வது கடினமாகக்கூடும். உடலில் ஒரு அங்கத்தின் செயலை சிலகாலம் நிறுத்திவைத்தால் அதன் தசை நார்கள் வலுவிழப்பதுபோல் மூளையும் தூண்டுதல் சக்தியைக் கொடுக்காமலிருந்தால் மழுங்கி விடும் தன்மையை அடைந்துவிடும்.

by Swathi   on 10 Dec 2012  1 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
06-Jul-2013 10:21:25 THIRUNAVUKKARASU said : Report Abuse
நல்ல தகவல்களை தந்துள்ளமைக்கு நன்றிகள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.