LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை: கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

மத்திய அரசு முடிவுக்கு தமிழக அரசு, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அனுமதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நீர் பங்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, மத்திய அரசு ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ அமைத்துள்ளது.

மேலும், ‘தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகியவை தங்கள் மாநிலத்தில் புதிய அணையை கட்டுவதாக இருந்தால், அதை பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது’ என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டு உள்ளது.

இந்த நிலையில், தனது மாநிலத்தில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது. தமிழக எல்லைக்கு அருகே கட்ட திட்டமிட்டுள்ள அணையின் மூலம் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும், 400 மெகாவாட் நீர்மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கவும் அது முடிவு செய்துள்ளது. இந்த அணை திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதை பொருட்படுத்தாமல், புதிய அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்து விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. 

உடனே, கர்நாடகாவின் திட்டத்தை நிராகரிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 4ம் தேதி கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து, டெல்லி சென்ற கர்நாடக முதல்வர் குமாரசாமி, தனது மாநில எம்பி.க்களுடன் பிரதமரை செப். 10ம் தேதி சந்தித்தார்.

அப்போது, மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்கக்கோரி மனு கொடுத்தார். அதில், ‘காவிரியின் குறுக்கே மேகதாதுவில் ரூ.5,912 கோடியில் அணை கட்டும் கர்நாடகா அரசு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.  

இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த உடனடியாக தமிழகம் - கர்நாடகா - மத்திய அரசு பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’ என கோரப்பட்டது. இந்த சந்திப்புக்குப் பிறகு, மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு வேகமாக செய்தது. 

அதே நேரம்,  ‘மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டறிந்து மத்திய அரசு செயல்படலாம்’ என சுப்ரீம் கோர்ட்டும் கருத்து தெரிவித்தது.

இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள, கர்நாடகா அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த மாதம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, அசுர வேகத்தில் ஆய்வு பணிகளை செய்து முடித்த கர்நாடக அரசு, அணைக்கான முதல் வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.

இதற்கு அனுமதி வழங்குவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அதிரடியாக அறிவித்தது. மேலும், ‘அணை கட்டுவதற்கு தேவையான மின்சாரம், கட்டுமான பொருட்கள் எடுத்து செல்வது உட்பட பல்வேறு பணிகளை எப்படி கையாள உள்ளீர்கள்?’ என்பதற்கான வரைவு திட்டத்தை விரைவில் தாக்கல் செய்யும்படியும் கேட்டு உள்ளது.

இதனால், மேகதாது அணை திட்டத்தில் கர்நாடக அரசு மீண்டும் வேகம் எடுப்பது உறுதியாகி விட்டது. புதிய அணை கட்டும் வரைவுத் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக அரசும், தமிழக கட்சித் தலைவர்களும், விவசாய சங்கங்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்வது பற்றி சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

by Mani Bharathi   on 29 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.