LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

மோகம்! - இல.பிரகாசம்

மணம் வீசாது செவ்வானம் மிடையில்
பிறைநுதல் அழகைக் காட்டி மயக்கும்
பெண்ணாளுக்கு பின்னே படர்ந்திருக்கும்
கரிய கூந்தலின் அழகில் மதிமயங்கி
மெல்ல மெல்ல தானாய் சராமகின்றன!
மின்னொளி வீசும் வெள்ளிப் பூக்கள்!

அவள் கூந்தலோ இப்பூக்கள் சூடியப்பின்
அர்த்த வானத்தின் இடையில் -தன்
அழகான கருங் குழலை கூட்டுகின்றன!

கருங் குழல் மெல்ல மெல்ல
கருமை சாயத்தை விரும்பி யேற்கின்றன!

அவள் முகப்பொலிவு மேன் மேலும்
ஆயிரம் மலர்சூடிய பெண்ணின் மிருதுவான
அழகு காட்சிப் படுத்தப் படுகின்றன.

மின்னும் பூக்கள் மேலும் அவள்மீது
மோகம் கொண்டு அவளின் மணம்
வீசாக் கூந்தலின் மீதில் படர்கின்றன!

இரவெல்லாம் மணமின்றி யுள்ளம் மகிழ்ந்தே
இன்பச் சொப்பன லீலைகளை வானில்
நிகழ்த்து கின்றன நட்சத்திர பூக்கள்!

நிகழ்த்தும் சொப்பனங்கள் யாவும் அவளுக்கு
இரவில் மட்டுமே கிடைக்கின்றதும் ஏனோ?

இரவில் மட்டும் இன்பத்தை அள்ளி
இறைக்கின்ற இளைய தாசியாய் என்றும்
நிலையாய் இருக்கும் மாயம் யாதோ?

என்றும் அவள் மடியில் - என்
ஏங்கங்கள் யாவையும் தீர்த்துக் கொள்ளவே
ஓராயிரம் ஆண்டாவது உயிரோடு இருக்க
நாடோறும் தனிமையில் தவம் செய்கிறேன்!

 

- இல.பிரகாசம்

by Swathi   on 09 May 2016  0 Comments
Tags: Mogam   Mogam Tamil Kavithai   மோகம்   மோகம் கவிதை           
 தொடர்புடையவை-Related Articles
மோகம்! - இல.பிரகாசம் மோகம்! - இல.பிரகாசம்
தமிழை சிதைக்கும்   காரணிகள்  ! தமிழை சிதைக்கும் காரணிகள் !
மோகம் - நிர்மலா ராகவன் மோகம் - நிர்மலா ராகவன்
“ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் !” “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் !”
மோகம் தீர்ந்ததும் காதல் முடிந்துவிடுமா? மோகம் தீர்ந்ததும் காதல் முடிந்துவிடுமா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.