மொஹாலி டெஸ்டில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதன் முறையாக 3-0 என்ற புள்ளி கணக்கில் தொடரை வென்று, புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மொஹாலியில் கடந்த 14 ம் தேதி தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 408 ரன்களை எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி தவன் மற்றும் விஜயின் சதங்களால் 499 ரன்களை எடுத்தது, 91 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, இதனை அடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. தனது முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடி சதம் விளாசிய தவான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
|