LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கருமலைத்தமிழாழன்

மூளியாக்கி வைத்தோம்!- பாவலர் கருமலைத்தமிழாழன்

நிமிர்ந்து நின்ற இராமநாதபுரத்தின் மன்னன்
நிறை நெஞ்ச சேதுபதிபாண்டித்தேவர்
தமிழ் வளர்த்த மதுரையிலே நான்காம் சங்கம்
தமிழுக்காய் தோற்று வித்த சகோதரர்கள்!
அமிழ்தொத்த சேதுபதி அந்தநாளில்
அமெரிக்க ஆன்மீகமாநாட்டிற்கே
திமிர்ந்த ஞானம் திகழ் விவேகானந்தர்தம்மைத்
திருமகனாய் அனுப்பி வைத்துப் புகழைக்கொண்டோன்!

பற்று மிகத் தமிழ் மீது கொண்ட மன்னன்
பாசுகர சேதுபதி ஒரு நாள் கங்குல்
சற்று மன அமைதிக்காய் அரண்மனையைச்
சார்ந்துள்ள மாடத்தில் தனியேநின்று
சுற்றிவரும் முழுநிலவின் அழகைக்கண்டு
சூழ்ந்தகுளிர் ஒளிதன்னில் திளைத்த போழ்தில்
ஒற்றின்மேல் உயிர்வந்தே ஒன்றல்போல
ஒண்டமிழ்ப்பா நுழைந்ததவர் காதில்வந்தே!

இனிமையான இசையோடு வந்த பாட்டில்
இருந்திட்ட கருத்தாழம் மனம்மயக்கத்
தனிமையிலே தனை மறந்து தாளம் போட்டே
தமிழ்ப்பாடல் மிதந்து வந்ததிசையைப் பார்த்தார்!
கனிபோன்ற கவிதைகளையாத்தளிக்கும்
கவிஞனவன் மனைவியவள் எதிர்த்தவீட்டில்
குனிந்தபடி தொட்டிலாட்டிக்குழந்தை தூங்கக்
குயில் குரலில் பாடுகின்ற காட்சிகண்டார்

பாட்டிற்குத் தாளமவர் போடும்போது
பளபளக்கும் விரல் வைரமோதிரத்தில்
காட்டு முக வெண்ணிலவின் ஒளிதான்பட்டு
கச்சிதமாய்ப் பாட்டு வரும் கவிஞர் தம்மின்
வீட்டிற்குள் எதிரொலிக்க; ஒளியைக்கண்டு
வியந்திட்ட பெண்மணியோ நிமிர்ந்து பார்க்கப்
பாட்டு தனைக் கேட்டு மன்னன் நிற்கக்கண்டு
பண்ணோடுமேலுமவள்பாடலானாள்!

தன் விரல்கள் மோதிரத்தின் ஒளியைக்கண்டு
தாவி வந்த பாட்டிற்குப் பெருமைசெய்ய
பொன் தட்டில் விரல் வைரமோதிரத்தைப்
பொலிகின்ற பட்டாடை மீது வைத்து
மன்னனவன் சேதுபதி பணியாள் மூலம்
மகிழ்வோடு பரிசாக அனுப்பிவைத்தார்
முன்னோர்கள் இது போலக்காத்த தமிழை
மூலையிலே மூளியாக்கி வைத்தோம் இன்று!


- பாவலர்  கருமலைத்தமிழாழன்

by Swathi   on 27 Mar 2015  0 Comments
Tags: தமிழ் வளர்ச்சி கவிதைகள்   தமிழ் கவிதைகள்   பாவலர் கருமலைத்தமிழாழன்   பாவலர் கருமலைத்தமிழாழன் கவிதைகள்   கருமலைத்தமிழாழன் கவிதைகள்   தமிழின் நிலை கவிதை   Today Status of Tamil Language  
 தொடர்புடையவை-Related Articles
மூளியாக்கி வைத்தோம்!- பாவலர்  கருமலைத்தமிழாழன் மூளியாக்கி வைத்தோம்!- பாவலர் கருமலைத்தமிழாழன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.