LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலித்தொகை

மூன்றாவது : மருதக்கலி

 

66 வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட
ஞாங்கர் மலர் சூழ்தந்து, ஊர் புகுந்த வரி வண்டு,
ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம்
ஆங்கு அவை விருந்து ஆற்றப், பகல் அல்கிக், கங்குலான், 
வீங்கு இறை வடுக் கொள, வீழுநர்ப் புணர்ந்தவர்
தேம் கமழ் கதுப்பின் உள் அரும்பு அவிழ் நறு முல்லைப் 
பாய்ந்து ஊதிப் படர் தீர்ந்து, பண்டு தாம் மரீஇய
பூம் பொய்கை மறந்து உள்ளாப் புனல் அணி நல் ஊர! 
அணை மென் தோள் யாம் வாட, அமர் துணை புணர்ந்து நீ,
'மண மனையாய்!' என வந்த மல்லலின் மாண்பு அன்றோ -
பொதுக் கொண்ட கவ்வையுள் பூ அணிப் பொலிந்த நின்
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை;
கனலும் நோய்த் தலையும், 'நீ கனம் குழை அவரொடு 
புனல் உளாய்' என வந்த பூசலின் பெரிது அன்றோ - 
தார் கொண்டாள் தலைக் கோதை தடுமாறிப் பூண்ட நின்
ஈர் அணி சிதையாது, எம் இல் வந்து நின்றதை;
தணந்ததன் தலையும், 'நீ தளர் இயல் அவரொடு
துணங்கையாய்' என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ - 
ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணிப் பொலிந்த நின் 
களி தட்ப வந்த இக் கவின் காண இயைந்ததை;
என ஆங்கு,
அளி பெற்றேம், எம்மை நீ அருளினை; விளியாது
வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்
'நீட்டித்தாய்' என்று, கடாஅம், கடும் திண் தேர்,
பூட்டு விடாஅ நிறுத்து.
67 கார் முற்றி, இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து,
சீர் முற்றிப், புலவர் வாய்ச் சிறப்பு எய்தி, இரு நிலம் 
தார் முற்றியது போலத், தகை பூத்த வையை தன் 
நீர் முற்றி, மதில் பொரூஉம் பகை அல்லால், நேராதார் 
போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன் -
நலம் தகை, எழில் உண் கண் நல்லார் தம் கோதையால்
அலைத்த, புண், வடுக் காட்டி, அன்பு இன்றி வரின் - எல்லா! - 
புலப்பேன் யான் என்பேன்மன்? அந்நிலையே, அவன் காணின், 
கலப்பேன் என்னும், இக் கையறு நெஞ்சே;
கோடு எழில் அகல் அல்குல் கொடி அன்னார் முலை மூழ்கப் 
பாடு அழி சாந்தினன், பண்பு இன்றி வரின் - எல்லா! - 
ஊடுவேன் என்பேன்மன்? அந்நிலையே அவன் காணின் 
கூடுவேன் என்னும், இக் கொள்கை இல் நெஞ்சே;
இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின், 
நனிச் சிவந்த வடுக் காட்டி, நாண் இன்றி வரின்- எல்லா! -
துனிப்பேன் யான் என்பேன்மன்? அந்நிலையே, அவன் காணின், 
தனித்தே தாழும், இத் தனி இல் நெஞ்சே;
என ஆங்கு,
பிறை புரை ஏர் நுதால்! தாம் எண்ணியவை எல்லாம் 
துறைபோதல் ஒல்லுமோ - தூ ஆகாது ஆங்கே
அறைபோகு நெஞ்சு உடையார்க்கு?
68 பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர்
செது மொழி சீத்த செவி செறு ஆக,
முது மொழி நீராப், புலன் நா உழவர்
புது மொழி கூட்டுண்ணும், புரிசை சூழ், புனல் ஊர!
'ஊரன்மன் உரன் அல்லன், நமக்கு' என்ன, உடன் வாளாது,
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகிக்,
களையா நின் குறி வந்து, எம் கதவம் சேர்ந்து அசைத்த கை 
வளையின் வாய்விடல் மாலை மகளிரை நோவேமோ -
'கேள் அலன், நமக்கு அவன், குறுகன்மின்' என, மற்று எம்
தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்?
'ஊடியார் நலம் தேம்ப, ஒடியெறிந்து, அவர் வயின்
மால் தீர்க்கும் அவன் மார்பு' என்று எழுந்த சொல் நோவேமோ - 
முகை வாய்த்த முலை பாயக் குழைந்த நின் தார் எள்ள,
வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்?
சேரியால் சென்று, நீ சேர்ந்த இல் வினாயினன்,
தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ -
ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து, எம் இல்
'பொலிக' எனப் புகுந்த நின் புலையனைக் கண்ட யாம்?
என ஆங்கு;
நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம் -
மனை வரின், பெற்று உவந்து, மற்று எம் தோள் வாட, 
'இனையர்' என உணர்ந்தார் என்று ஏக்கற்று, ஆங்குக் 
கனவினான் எய்திய செல்வத்து அனையதே -
ஐய! எமக்கு நின் மார்பு.
69 போது அவிழ் பனிப் பொய்கைப், புதுவது தளைவிட்ட 
தாது சூழ் தாமரைத் தனி மலர் புறம் சேர்பு -
காதல் கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய 
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக,
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல், 
ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு - 
மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர!
தெள் அரிச் சிலம்பு ஆர்ப்பத், தெருவின் கண் தாக்கி, நின்
உள்ளம் கொண்டு, ஒழித்தாளைக் குறை கூறிக் கொள நின்றாய்; 
துணிந்தது பிறிது ஆகத், 'துணிவு இலள் இவள்' எனப்,
பணிந்தாய் போல் வந்து, ஈண்டுப், பயன் இல மொழிவாயோ?
பட்டுழி அறியாது, பாகனைத் தேரொடும்
விட்டு, அவள் வரல் நோக்கி, விருந்து ஏற்றுக்கொள நின்றாய்; 
நெஞ்சத்த பிற ஆக, 'நிறை இலள் இவள்' என,
வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்து ஈவாயோ?
இணர் ததை தண் காவின், இயன்ற நின் குறி வந்தாள் 
புணர்வினில் புகன்று, ஆங்கே புனல் ஆடப் பண்ணியாய்; 
தருக்கிய பிற ஆகத், 'தன் இலள் இவள்' எனச்
செருக்கினால் வந்து, ஈங்குச் சொல் உகுத்து ஈவாயோ?
என ஆங்கு,
தருக்கேம் பெரும! நின் நல்கல் விருப்புற்றுத்
தாழ்ந்தாய் போல் வந்து, தகவு இல செய்யாது,
சூழ்ந்தவை செய்து, மற்று எம்மையும் உள்ளுவாய் - 
வீழ்ந்தார் விருப்பு அற்றக் கால்.
70 மணி நிற மலர்ப் பொய்கை, மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தெனக்
கதுமெனக், காணாது, கலங்கி, அம் மடப் பெடை 
மதி நிழல் நீர் உள் கண்டு, அது என உவந்து ஓடித், 
துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு, மிக நாணிப்,
பல் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊ! கேள்;
நலம் நீப்பத் துறந்து, எம்மை நல்காய் நீ விடுதலின்,
பல நாளும் படாத கண், பாயல் கொண்டு, இயைபவால்;
துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட,
மண மனைத் ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே! 
அகல நீ துறத்தலின், அழுது ஓவா உண் கண், எம் 
புதல்வனை மெய் தீண்டப், பொருந்துதல் இயைபவால்; 
நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர்த் தந்து, நின் 
தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே! 
வாராய் நீ துறத்தலின், வருந்திய எமக்கு, ஆங்கே 
நீர் இதழ் புலராக் கண் இமை கூம்ப இயைபவால்; 
நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தேர் பூண்ட நெடு நல் மான் தெள் மணி வந்து எடுப்புமே!
என ஆங்கு,
மெல்லியான் செவி முதல், மேல்வந்தான் காலை போல்,
எல்லாம் துயிலோ எடுப்புக; நின் பெண்டிர்,
இல்லின் எழீஇய யாழ் தழீஇ கல்லா வாய்ப்
பாணன் புகுதராக் கால்!
71 விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தரப்
புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி, 
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் - 
துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார, 
இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு, 
நனி விரைந்து அளித்தலின், நகுபவள் முகம் போலப் -
பனி ஒரு திறம் வாரப், பாசடைத் தாமரைத்
தனி மலர் தளை விடூஉம் தண் துறை நல் ஊர!
'ஒரு நீ, பிறர் இல்லை, அவன் பெண்டிர்' என உரைத்துத்,
தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான் கொல் -
ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் 
பாரித்துப் புணர்ந்த நின் பரத்தைமை காணிய?
'மடுத்து அவன் புகு வழி மறையேன்' என்று, யாழொடும்
எடுத்துச் சூள் பல உற்ற பாணன் வந்தீயான் கொல் -
அடுத்துத் தன் பொய் உண்டார்ப் புணர்ந்த நின் எருத்தின் கண் 
எடுத்துக் கொள்வது போலும் தொடி வடு காணிய?
'தணந்தனை' எனக் கேட்டுத், தவறு ஓராது, எமக்கு நின்
குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான் கொல் - 
கணம் குழை நல்லவர் கதுப்பு அறல் அணைத் துஞ்சி, 
அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய? 
என்று நின்,
தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர்
யார்? - நீ வரு நாள் போல் அமைகுவம் யாம்; புக்கீமோ! - 
மாரிக்கு அவாவுற்றுப் பீள் வாடும் நெல்லிற்கு, ஆங்கு 
ஆராத் துவலை அளித்தது போலும், நீ
ஓர் யாட்டு ஒரு கால் வரவு.
72 'இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்,
துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇச், 
சேடு இயல் வள்ளத்துப் பெய்த பால் சில காட்டி,
ஊடும் மெல் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போலப் , 
புது நீர புதல் ஒற்றப், புணர் திரைப் பிதிர் மல்க,
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணிக்,
கடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின்
வடி தீண்ட, வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர!
கண்ணி, நீ கடி கொண்டார்க் கனைதொறும், யாம் அழப்,
பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ - 
'பேணான்' என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான்,
மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை?
நாடி நின் தூது ஆடித், துறைச் செல்லாள், ஊரவர்
ஆடை கொண்டு, ஒலிக்கும், நின் புலைத்தி காட்டு என்றாளோ - 
கூடியார் புனல் ஆடப் புணை ஆய மார்பினில்,
ஊடியார் எறிதர ஒளி விட்ட அரக்கினை?
வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் 
அறிவு உடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோ - 
களி பட்டார் கமழ் கோதை கயம்பட்ட உருவின் மேல் 
குறி பெற்றார் குரல் கூந்தல் கோடு உளர்ந்த துகளினை?
என ஆங்கு,
செறிவுற்றேம்; எம்மை நீ செறிய, அறிவுற்று,
அழிந்து உகு நெஞ்சத்தேம், அல்லல் உழப்பக்
கழிந்தவை உள்ளாது, கண்ட இடத்தே,
அழிந்து நின் பேணிக் கொளலின் இழிந்ததோ -
இந் நோய் உழத்தல் எமக்கு?
73 அகல் துறை அணிபெறப், புதலொடு தாழ்ந்த
பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை,
கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தால்
தண் கமழ் நறும் தேறல் உண்பவள் முகம் போல,
வண் பிணி தளை விடூஉம் வயல் அணி நல் ஊர!
'நோதக்காய்' என நின்னை நொந்தீவார் இல் வழித்,
'தீது இலேன் யான்' எனத் தேற்றிய வருதிமன் -
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலைத் தாது சோர்ந்து,
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையாக்கால்?
கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்வழி,
'மனத்தில் தீது இலன்' என மயக்கிய வருதிமன் -
அலமரல் உண் கண்ணார் ஆய் கோதை குழைத்த நின் 
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால்?
என்னை நீ செய்யினும், உரைத்தீவார் இல் வழி,
முன் அடிப் பணிந்து, எம்மை உணர்த்திய வருதிமன் - 
நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக் கொள்ளக், 
கரை இடைக் கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால்? 
என ஆங்கு,
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின்
தண்டாப் பரத்தை தலைக் கொள்ள, நாளும்
புலத் தகைப் பெண்டிரைத் தேற்ற; மற்று யாம் எனின், 
தோலாமோ நின் பொய் மருண்டு?
74 பொய்கைப் பூ புதிது உண்ட வரி வண்டு கழி பூத்த 
நெய்தல் தாது அமர்ந்து ஆடிப், பாசடைச் சேப்பினுள் 
செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை,
மை தபு, கிளர் கொட்டை மாண் பதி படர்தரூஉம், 
கொய்குழை அகை காஞ்சித் துறை அணி நல் ஊர! 
'அன்பு இலன், அறன் இலன், எனப்படான்' என ஏத்தி, 
நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்;
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளி இன்மை
கண்டுநின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்.
முன்பகல் தலைக்கூடி, நன்பகல் அவள் நீத்துப்,
பின்பகல் பிறர்த் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்;
என ஆங்கு;
'கிண்கிணி மணித் தாரொடு ஒலித்து ஆர்ப்ப, ஒண் தொடிப் 
பேர் அமர்க் கண்ணார்க்கும் படு வலை இது' என, 
ஊரவர் உடன் நகத் திரிதரும்
தேர் ஏமுற்றன்று, நின்னினும் பெரிதே!
75 நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார்,
சீர் ஆர் சே இழை ஒலிப்ப, ஓடும்
ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து,
ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி
உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி,
அமர்க்கண் மகளிர் அலப்பிய அந் நோய் ,
தமர்க்கு உரைப்பன போல், பல் குரல் பயிற்றும், 
உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன்
புதுவோர் புணர்தல் வெய்யன் ஆயின்,
வதுவை நாளால் வைகலும், அ·து யான்
நோவேன், தோழி! நோவாய் நீ, என
என் பார்த்து உறுவோய்! கேள், இனித் தெற்றென; 
'எல்லினை வருதி, எவன் குறித்தனை?' எனச்
சொல்லாதிருப்பேன் ஆயின், ஒல்லென,
விரி உளைக் கலி மான் தேரொடு வந்த
விருந்து எதிர்கோடலின், மறப்பல், என்றும்;
'வாடிய பூவொடு வாரல், எம்மனை' என
ஊடி இருப்பேன் ஆயின், நீடாது,
அச்சு ஆறு ஆக உணரிய வருபவன்
பொய்ச் சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல்;
'பகல் ஆண்டு அல்கினை, பரத்த' என்று யான்
இகலியிருப்பேன் ஆயின், தான் தன்
முதல்வன் பெரும் பெயர் முறை உளிப் பெற்ற
புதல்வன் புல்லிப் பொய் துயில் துஞ்சும்;
ஆங்க , 
விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச் சூள் அஞ்சவும், 
அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும்,
ஆங்கு அவிந்து ஒழியும், என் புலவி தாங்காது,
அவ் அவ் இடத்தான் அவை அவை காணப் -
பூங் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும்
மாய மகிழ்நன் பரத்தைமை
நோவென், தோழி! கடன் நமக்கு எனவே.
76 புனை இழை நோக்கியும், புனல் ஆடப் புறம் சூழ்ந்தும், 
அணி வரி தைஇயும், நம் இல் வந்து வணங்கியும், 
நினையுபு வருந்தும் இந் நெடுந்தகை திறத்து, இவ் ஊர் 
'இனையள்' என்று எடுத்து ஓதற்கு அனையையோ, நீ? என
வினவுதி ஆயின், விளங்கு இழாய்! கேள், இனி;
'செவ் விரல் சிவப்பு ஊரச், சேண் சென்றாய்' என்று, அவன் 
பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்தற்கே - 
'கௌவை நோய் உற்றவர், காணாது கடுத்த சொல் 
ஒவ்வா' என்று உணராய், நீ ஒரு நிலையே உரைத்ததை?
ஒடுங்கி, யாம் புகல் ஒல்லேம் பெயர்தர, அவன் கண்டு,
நெடும் கய மலர் வாங்கி, நெறித்துத் தந்தனைத்தற்கோ - 
விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய் ஆகக் 
கடிந்ததும் இலையாய், நீ கழறிய வந்ததை?
'வரி தேற்றாய், நீ' என, வணங்கு இறை அவன் பற்றித்,
தெரி வேய்த் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தனைத்தற்கோ -
புரிபு நம் ஆயத்தார் பொய் ஆக எடுத்த சொல்
உரிது என உணராய், நீ உலமந்தாய் போன்றதை?
என ஆங்கு,
அரிது இனி, ஆய் இழாய்! அது தேற்றல், புரிபு ஒருங்கு,
அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று, ஈங்கே, 
தான் நயந்து இருந்தது இவ் ஊர் ஆயின், எவன் கொலோ -
நாம் செயற்பாலது இனி?
77 இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண், பிறிது யாதும் 
துணை இன்றித் தளை விட்ட, தாமரை தனி மலர்,
திரு முகம் இறைஞ்சினள், வீழ்பவற்கு, இனைபவள்
அரி மதர் மழைக் கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல், 
தகை மலர்ப் பழனத்த புள் ஒற்ற, ஒசிந்து ஒல்கி,
மிக நனி சேர்ந்த அம் முகை மிசை அம் மலர்
அக இதழ்த் தண் பனி உறைத்தரும் ஊர! கேள்:
தண் தளிர்த் தகை பூத்த தாது எழில் நலம் செலக் 
கொண்டு, நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்மன் - 
உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து, 'நின் 
பெண்டு' எனப் பிறர் கூறும் பழி மாறப் பெறுகற்பின்? 
பொன் எனப் பசந்த, கண் போது எழில் நலம் செலத், 
தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்மன் - 
நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள் 
என் உழை வந்து, நொந்து உரையாமை பெறுகற்பின்?; 
மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங் கூந்தல்
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்மன் - 
நோய் சேர்ந்த திறம் பண்ணி, நின் பாணன், எம்மனை
நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின்?
ஆங்க,
'கடைஇய நின் மார்பு தோயலம்' என்னும்,
இடையும், நிறையும் எளிதோ - நின் காணின்
கடவுபு, கை தங்கா, நெஞ்சு என்னும் தம்மோடு
உடன் வாழ் பகை உடையார்க்கு?
78 பல் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை
இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இரும் தும்ப, 
உண் துறை உடைந்த பூப் புனல் சாய்ப்பப், புலந்து ஊடிப் 
பண்பு உடை நல் நாட்டுப் பகை தலை வந்தென,
அது கைவிட்டு அகன்று ஒரீஇக், காக்கிற்பான் குடை நீழல் 
பதி படர்ந்து, இறைகொள்ளும் குடி போலப் - பிறிதும் ஒரு 
பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான், மொய் தப
இறை பகை தணிப்ப அக் குடி பதிப் பெயர்ந்தாங்கு, 
நிறை புனல் நீங்க வந்து, அத்தும்பி அம் மலர்ப்
பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர!
'நீக்கும்கால் நிறம் சாய்ந்து, புணரும்கால் புகழ் பூத்து
நாம் கொண்ட குறிப்பு, இவள் நலம்' என்னும் தகையோ தான் - 
எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார்ப் புணர்ந்தமை
கரி கூறும் கண்ணியை, ஈங்கு எம் இல் வருவதை?
'சுடர் நோக்கி மலர்ந்து, ஆங்கே படின் கூம்பும் மலர் போல், என் 
தொடர் நீப்பின், தொகும், இவள் நலம்' என்னும் தகையோ தான் - 
அலர் நாணிக் கரந்த நோய் கைம்மிகப், பிறர் கூந்தல்
மலர் நாறும் மார்பினை, ஈங்கு எம் இல் வருவதை?
'பெயின் நந்தி, வறப்பின் சாம், புலத்திற்குப் பெயல் போல் யான் 
செலின் நந்திச், செறின் சாம்பும், இவள்' என்னும் தகையோ தான்-
முடி உற்ற கோதை போல் யாம் வாட, ஏதிலார்
தொடி உற்ற வடுக் காட்டி, ஈங்கு எம் இல் வருவதை? 
ஆங்க,
ஐய! அமைந்தன்று; அனைத்து ஆகப் புக்கீமோ,
வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆகக், கையின்
முகை மலர்ந்தன்ன முயக்கில் தகை இன்றே,
தண் பனி வைகல் எமக்கு?
79 புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த 
முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன்
வள் இதழ் உற நீடி, வயங்கிய ஒரு கதிர்,
அவை புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் அணி நுதல் 
வகை பெற செரீஇய வயந்தகம் போல், தோன்றும் 
தகைபெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்:
அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி; 
மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்,
'தோய்ந்தாரை அறிகுவேன், யான்' எனக், கமழும் நின்
சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ? 
புல்லல் எம் புதல்வனைப்; புகல் அகல் நின் மார்பில் 
பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால், 
மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில் 
பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ? 
கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி; நின் சென்னி 
வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால், 
'நண்ணியார்க் காட்டுவது இது' எனக் கமழும் நின் 
கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ? 
என ஆங்கு,
பூங் கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி,
நீங்காய் இகவாய் நெடும் கடை நில்லாதி;
ஆங்கே அவர் வயின் சென்றீ - அணி சிதைப்பான் - 
ஈங்கு எம் புதல்வனைத் தந்து.
80 நயம் தலை மாறுவார் மாறுக; மாறாக்,
கயம் தலை மின்னும் கதிர் விடு முக் காழ்ப்,
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கித் -
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆகத் தைஇப்
பவழம் புனைந்த பருதி சுமப்பக்
கவழம் அறியா நின் கை புனை வேழம்
புரி புனை பூங் கயிற்றின் பைபய வாங்கி,
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து, ஈங்கே
வருக! - எம் பாக மகன்!
கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும்
தளர் நடை காண்டல் இனிது; மற்று இன்னாதே,
'உளம்' என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார்
வளை நெகிழ்பு யாம் காணும் கால்;
ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா, என்னும் நின் 
தே மொழி கேட்டல் இனிது; மற்று இன்னாதே,
உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார் 
எவ்வ நோய் யாம் காணும் கால்;
ஐய! 'திங்கள் குழவி! வருக!' என, யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது; மற்று இன்னாதே,
நல்காது, நுந்தை புறம் மாறப்பட்டவர்
அல்குல் வரி யாம் காணும் கால்;
ஐய! எம் காதில் கனம் குழை வாங்கிப், பெயர்தொறும்,
போது இல் வறும் கூந்தல், கொள்வதை, நின்னை யாம் -
ஏதிலார் கண் சாய - நுந்தை வியல் மார்பில்
தாது தேர் வண்டின் கிளை பாடத், தைஇய
கோதை பரிபு ஆடக், காண்கும்.
81 மை அற விளங்கிய மணி மருள் அவ் வாய் தன்
மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தரப், 
பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன், 
நலம்பெறு கமழ் சென்னி, நகையொடு துயல்வர,
உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில், 
அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்பப், 
பாலோடு அலர்ந்த முலை மறந்து, முற்றத்துக்
கால் வல் தேர் கையின் இயக்க, நடை பயிற்றா,
ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல்
போல, வரும் என் உயிர்!
பெரும! விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய்; 
பெருந் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்றத்,
திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப,
மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்றாப் 
பெருந்தகாய்! கூறு சில.
எல் இழாய்! சேய் நின்று, நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து, ஆங்கே 
வாய் ஓடி, 'ஏனாதிப்பாடியம்' என்றற்றா,
'நோய் நாம் தணிக்கும் மருந்து' எனப் பாராட்ட,
ஓவாது அடுத்து அடுத்து, 'அத்தத்தா!' என்பான் மாண 
வேய் மென் தோள் வேய்த் திறம் சேர்த்தலும், மற்று இவன்
வாய் உள்ளின் போகான் அரோ!
உள்ளி, உழையே ஒருங்கு படை விடக்
கள்ளர் படர்தந்தது போலத், தாம் எம்மை
எள்ளுமார் வந்தாரே, ஈங்கு!
ஏதப்பாடு எண்ணிப், புரிசை வியல் உள்ளோர்
கள்வரைக் காணாது, 'கண்டேம்' என்பார் போலச் 
சேய் நின்று, செய்யாத சொல்லிச் சினவல்; நின்
ஆணை கடக்கிற்பார் யார்?
அதிர்வு இல் படிறு எருக்கி, வந்து என் மகன் மேல், 
முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி
உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப,
எதிர் வளி நின்றாய், நீ செல்;
இனி! 'எல்லா! யாம், தீது இலேம்' என்று தெளிப்பவும், கைந் நீவி 
யாது ஒன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின்,
மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம்,
தாவா விருப்பொடு கன்று யாத்த உழிச் செல்லும்
ஆ போல் படர் தக நாம்!
82 ஞாலம் வறம் தீரப் பெய்யக், குணக்கு ஏர்பு
காலத்தில் தோன்றிய கொண்மூ போல், எம் முலை 
பாலொடு வீங்கத் தவ நெடிது ஆயினை,
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்க வழி எல்லாம் கூறு;
கூறுவேன்; மேயாயே போல வினவி, வழிமுறைக்
காயாமை வேண்டுவல் யான்;
காயேம்;
மடக் குறு மாக்களோடு ஓரை அயரும்
அடக்கம் இல் போழ்தின் கண், தந்தை காமுற்ற
தொடக்கத்துத் தாய் உழை புக்காற்கு, அவளும்
மருப்புப் பூண் கையுறை ஆக அணிந்து -
'பெருமான்! நகை முகம் காட்டு' என்பாள், கண்ணீர் 
சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன; மற்றும்,
வழிமுறைத் தாய் உழைப் புக்காற்கு, அவளும்
மயங்கு நோய் தாங்கி, மகன் எதிர் வந்து,
முயங்கினள் முத்தினள் நோக்கி, நினைந்தே,
'நினக்கு யாம் யாரேம் ஆகுதும்?' என்று,
வனப்பு உறக் கொள்வன நாடி அணிந்தனள்,
ஆங்கே, 'அரி மதர் உண் கண் பசப்ப நோய் செய்யும் 
பெருமான் பரத்தைமை ஒவ்வாத' என்றாள்;
அவட்கு இனிது ஆகி விடுத்தனன் போகித்
தலைக் கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்
புலத் தகை புத்தேள் இல் புக்கான்- அலைக்கு ஒரு 
கோல் தா; நினக்கு அவள் யார் ஆகும்? - எல்லா! 
வருந்தி யாம் நோய் கூர, நுந்தையை என்றும்
பருந்து எறிந்தற்று ஆகக் கொள்ளும்; கொண்டாங்கே 
தொடியும் உகிரும் படை ஆக நுந்தை
கடி உடை மார்பின் சிறு கண்ணும் உட்காள்,
வடுவும் குறித்தாங்கே செய்யும்; விடு, இனி;
அன்ன பிறவும், பெருமான் அவள் வயின்
துன்னுதல் ஓம்பித், திறவது இல் முன்னி, நீ
ஐயம் இல்லாதவர் இல் ஒழிய, எம் போலக்
கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்;
அமைந்தது; இனி நின் தொழில்.
83 பெரு திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனைப், 
பொருந்து நோன் கதவு ஒற்றிப் புலம்பி, யாம் உலமர
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் 
விளையாட்டிக் கொண்டு வரற்கு எனச் சென்றாய்,
உளைவு இலை; ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம் 
நீட்டித்த காரணம் என்?
கேட்டீ -
பெரு மடல் பெண்ணைப் பிணர்த் தோட்டுப் பைங் குரும்பைக்
குட வாய்க் கொடிப் பின்னல் வாங்கித், தளரும்
பெரு மணித் திண் தேர்க் குறுமக்கள் நாப்பண்,
அகல் நகர் மீள்தருவான் ஆகப், புரி ஞெகிழ்பு
நீல நிரைப் போது உறு காற்கு உலைவன போல், 
சாலகத்து ஒல்கிய கண்ணர், 'உயர் சீர்த்தி
ஆல் அமர் செல்வன் அணி சால் மகன் விழாக்
கால்கோள்' என்று ஊக்கிக், கதுமென நோக்கித், 
திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி, விருப்பினால் 
'கண்ணும், நுதலும், கவுளும், கவவியார்க்கு,
ஒண்மை எதிரிய அம் கையும், தண் எனச்
செய்வன சிறப்பின் சிறப்புச் செய்து, இவ் இரா
எம்மொடு சேர்ந்து சென்றீவாயால்; செம்மால்!
நலம் புதிது உண்டு உள்ளா நாண் இலி செய்த
புலம்பு எலாம் தீர்க்குவேம்மன், என்று இரங்குபு,
வேற்று ஆனாத் தாயர் எதிர்கொள்ள, மாற்றாத
கள்வனால் தங்கியது, அல்லால், கதியாதி,
ஒள் இழாய்! யான் தீது இலேன்;
எள்ளலான், அம் மென் பணை தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு 
எம் இல் வருதியோ? எல்லா! நீ; தன் மெய்க் கண்
அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி,
முந்தை இருந்து மகன் செய்த நோய்த் தலை,
'வெந்த புண் வேல் எறிந்தற்றால்' வடுவொடு
தந்தையும் வந்து நிலை.
84 உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்
நறு வடி ஆர் இற்றவை போல் அழியக்,
கரந்து யான் அரக்கவும், கை நில்லா வீங்கிச்,
சுரந்த என் மெல் முலைப் பால் பழுது ஆக - நீ
நல் வாயில் போத்தந்த பொழுதினான், 'எல்லா!
கடவுள் கடி நகர் தோறும் இவனை
வலம் கொளீஇ வா' எனச், சென்றாய், விலங்கினை 
ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள்
யார் இல் தவிர்ந்தனை? கூறு;
நீருள் அடை மறை ஆய் இதழ்ப் போது போல் கொண்ட 
குடை நிழல் தோன்றும் நின் செம்மலைக் காணூஉ 
'இவன் மன்ற, யான் நோவ உள்ளம் கொண்டு, உள்ளா 
மகன் அல்லான் பெற்ற மகன்' என்று அகல் நகர்
வாயில் வரை இறந்து போத்தந்து, தாயர்
தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன்; மற்று, அவர்
தம் தம் கலங்களுள், 'கையுறை' என்று இவற்கு,
ஒத்தவை ஆராய்ந்து, அணிந்தார்; 'பிறன் பெண்டிர் 
ஈத்தவை கொள்வான் ஆம், இ·து ஒத்தன்; சீத்தை! 
செறு தக்கான் மன்ற பெரிது';
சிறு பட்டி! ஏதிலார் கை, எம்மை எள்ளுபு நீ தொட்ட
மோதிரம் யாவோ? யாம் காண்கு;
அவற்றுள், நறா இதழ் கண்டன்ன செவ் விரற்கு ஏற்பச் 
சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்;
குறி அறிந்தேன்; 'காமன் கொடி எழுதி, என்றும்
செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில்
பொறி ஒற்றிக் கொண்டு ஆள்வல்' என்பது தன்னை 
அறீஇய செய்த வினை;
அன்னையோ? இ·து ஒன்று;
முந்தைய கண்டும் எழுகல்லாத என் முன்னர்
வெந்த புண் வேல் எறிந்தற்றா, இ·து ஒன்று;
தந்தை இறைத் தொடி மற்று இவன் தன் கைக் கண் 
தந்தார் யார், எல்லாஅ! இது?
இ·து ஒன்று, என் ஒத்துக் காண்க, பிறரும் இவற்கு என்னும்
தன் நலம் பாடுவி, தந்தாளா? நின்னை,
இது தொடுக என்றவர் யார்?
அஞ்சாதி; நீயும் தவறு இலை; நின் கை இது தந்த 
பூ எழில் உண் கண் அவளும் தவறு இலள்!
வேனில் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்?
மேல் நின்றும் எள்ளி, இது இவன் கைத் தந்தாள் - 
தான் யாரோ? என்று வினவிய, நோய்ப்பாலேன்
யானே தவறு உடையேன்!
85 காலவை, சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு 
பொடி அழல் புறம் தந்த செய்வுறு கிண்கிணி;
உடுத்தவை கைவினைப் பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல் 
மை இல் செந் துகிர்க் கோவை அவற்றின் மேல்
தைஇய பூந் துகில் ஐது கழல் ஒரு திரை
கையதை, அலவன் கண் பெற அடங்கச் சுற்றிய
பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி;
பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும்
செறியக் கட்டி ஈர் இடைத் தாழ்ந்த
பெய் புல மூதாய்ப் புகர் நிறத் துகிரின்
மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண்;
சூடின, இரும் கடல் முத்தமும் பல் மணி பிறவும் ஆங்கு 
ஒருங்கு உடன் கோத்த உருள் அமை மூக் காழ் மேல் 
சுரும்பு ஆர் கண்ணிக்குச் சூழ் நூல் ஆக
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாணச்
சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை;
ஆங்க, அவ்வும் பிறவும் அணிக்கு அணி ஆக நின் 
செல்வு உறு திண் தேர் கொடும் சினை கைப் பற்றிப் 
பைபயத் தூங்கும் நின் மெல் விரல் சீறடி
நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ
செம்மால் நின் பால் உண்ணிய;
பொய் போர்த்துப், பாண் தலை இட்ட பல வல் புலையனைத்
தூண்டிலா விட்டுத் துடக்கித் தான் வேண்டியார்
நெஞ்சம் பிணித்தல் தொழிலாத் திரிதரும்
நுந்தை பால் உண்டி சில;
நுந்தை வாய், மாயச் சூள் தேறி மயங்கு நோய் கைமிகப்
பூ எழில் உண் கண் பனி பரப்பக் கண் படா
ஞாயர் பால் உண்டி சில;
அன்னையோ, யாம் எம் மகனைப் பாராட்ட கதுமெனத் 
தாம் வந்தார் தம் பால் அவரொடு தம்மை
வருக என்றார் யார் கொல்லோ ஈங்கு;
என் பாலல், பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என் 
பாராட்டைப் பாலோ சில;
செரு குறித்தாரை உவகைக் கூத்தாட்டும்
வரிசைப் பெரு பாட்டொடு எல்லாம் பருகீத்தை
தண்டுவென் ஞாயர் மாட்டைப் பால்.
86 மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்,
கை புனை முக் காழ் கயம் தலைத் தாழப்,
பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட
நலம் கிளர் ஒள் பூண் நனைத்தரும் அவ் வாய்
கலந்து கண் நோக்கு ஆரக், காண்பு இன் துகிர் மேல் 86-5
பொலம் புனை செம் பாகம் போர் கொண்டு இமைப்பக்,
கடி அரணம் பாயா நின் கை புனை வேழம்,
தொடியோர் மணலின் உழக்கி, அடி ஆர்ந்த
தேரை வாய்க் கிண்கிணி ஆர்ப்ப, இயலும் என்
போர் யானை, வந்தீக, ஈங்கு;
செம்மால்! வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும், நுந்தை
நிலைப் பாலுள் ஒத்த குறி என் வாய்க் கேட்டு ஒத்தி;
கன்றிய தெவ்வர்க் கடந்து களம் கொள்ளும்
வென்றி மாட்டு ஒத்தி; பெரும! - மற்று ஒவ்வாதி,
'ஒன்றினேம் யாம்' என்று உணர்ந்தாரை, நுந்தை போல்,
மென் தோள் நெகிழ விடல்;
பால் கொளல் இன்றிப், பகல் போல் முறைக்கு ஒல்கா 
கோல் செம்மை ஒத்தி, பெரும! - மற்று ஒவ்வாதி
கால் பொரு பூவின் கவின் வாட, நுந்தை போல்,
சால்பு ஆய்ந்தார் சாய விடல்;
வீதல் அறியா விழுப் பொருள் நச்சியார்க்கு
ஈதல் மாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி,
மாதர் மெல் நோக்கின் மகளிரை, நுந்தை போல். 86-23
நோய் கூர நோக்காய் விடல்;
ஆங்க,
திறன் அல்ல யாம் கழற, யாரை நகும், இம்
மகன் அல்லான் பெற்ற மகன்;
மறை நின்று, தாம் மன்ற வந்தீத்தனர்;
'ஆய் இழாய்! தாவாத எனக்குத் தவறு உண்டோ காவாது ஈங்கு 
ஈத்தை, இவனை யாம் கோடற்குச், சீத்தை, யாம்
கன்றி அதனைக் கடியவும், கை நீவிக்,
குன்ற இறுவரைக் கோண்மா இவர்ந்தாங்குத்,
தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் - அறன் இல்லா 
அன்பு இலி பெற்ற மகன்.
87 ஒரூஉ நீ; எம் கூந்தல் கொள்ளல் - யாம் நின்னை 
வெரூஉதும், காணும் கடை;
தெரி இழாய்! செய் தவறு இல் வழி, யாங்குச் சினவுவாய், 
மெய் பிரிந்தன்னவர் மாட்டு?
ஏடா! நினக்குத் தவறு உண்டோ? நீ வீடு பெற்றாய்; 
இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி;
நிலைப் பால் அறியினும், நின் நொந்து நின்னைப் 
புலப்பார் உடையர் தவறு;
அணைத் தோளாய்! தீயாரைப் போலத் திறன் இன்று உடற்றுதி; 
காயும் தவறு இலேன் யான்;
மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது
நாண் இலன் ஆயின், நலிதந்து அவன் வயின்
ஊடுதல் என்னோ, இனி?
'இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம்' என்னும்
தகையது காண்டைப்பாய், நெஞ்சே! பனி ஆனாப் 
பாடு இல் கண் பாயல் கொள!
88 ஒரூஉக்! கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற 
முடி உதிர் பூந் தாது மொய்ம்பின ஆகத்,
தொடிய, எமக்கு நீ யாரை? பெரியார்க்கு
அடியரோ, ஆற்றாதவர்?
கடியர் தமக்கு, யார் சொல்லத் தக்கார் மாற்று?
வினை கெட்டு, வாய் அல்லா வெண்மை உரையாது, கூறு நின் 
மாயம், மருள்வார் அகத்து;
ஆய் இழாய்! நின் கண் பெறின் அல்லால், இன் உயிர் வாழ்கல்லா 
என் கண் எவனோ, தவறு? 
இ·து ஒத்தன்! புள்ளிக் களவன் புனல் சேர் பொதுக்கம் போல் 
வள் உகிர் போழ்ந்தனவும், வாள் எயிறு உற்றனவும்,
ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும், நல்லார்
சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பும்,
தவறு ஆதல் சாலாவோ? கூறு;
அது தக்கது; வேற்றுமை என் கண்ணோ ஓராதி; தீது இன்மை 
தேற்றக் கண்டீயாய்; தெளிக்கு;
இனி தேற்றேம் யாம்;
தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார்
தார் மயங்கி வந்த தவறு அஞ்சிப், போர் மயங்கி,
நீ உறும் பொய்ச் சூள் அணங்கு ஆகின், மற்று இனி
யார் மேல் விளியுமோ? கூறு.
89 யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர் 
ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து; எம் மனை
வாரல் நீ; வந்தாங்கே மாறு;
என் இவை; ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று 
போர் எதிர்ந்தற்றாப் புலவல்; நீ கூறின், என்
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது?
ஏஎ! தெளிந்தேம் யாம்; காயாதி - எல்லாம் வல் - எல்லா! 
பெரும் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு, 
வருந்தல் நின் வஞ்சம் உரைத்து;
மருந்து இன்று - மன்னவன் சீறின், தவறு உண்டோ? நீ நயந்த 
இன் நகை! தீதோ இலேன்;
மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இப் போர்
புறம் சாய்ந்து காண்டைப்பாய் - நெஞ்சே! உறழ்ந்து இவனைப் 
பொய்ப்ப விடேஎம் என நெருங்கின், தப்பினேன்
என்று அடி சேர்தலும் உண்டு.
90 கண்டேன், நின் மாயம் களவு ஆதல்; பொய்ந் நகா,
மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய நின்
பெண்டிர் உளர் மன்னோ, ஈங்கு?
ஒண் தொடி! நீ கண்டது எவனோ தவறு?
கண்டது நோயும் வடுவும் கரந்து, மகிழ் செருக்கிப்,
பாடு பெயல் நின்ற பானாள் இரவில் -
தொடி பொலி தோளும், முலையும், கதுப்பும்,
வடிவு ஆர் குழையும், இழையும், பொறையா
ஒடிவது போலும் நுசுப்போடு, அடி தளரா
ஆராக் கவவின் ஒருத்தி வந்து - அல்கல் தன்
சீர் ஆர் ஞெகிழம் சிலம்பச், சிவந்து, நின்
போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ?
ஆய் இழை ஆர்க்கும் ஒலி கேளா, அவ் எதிர்
தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ?
மாறாள் சினைஇ, அவள் ஆங்கே, நின் மார்பில்
நாறு இணப் பைந் தார் பரிந்தது அமையுமோ?
'தேறு நீ; தீயேன் அலேன்' என்று மற்று அவள்
சீறு அடி தோயா இறுத்தது அமையுமோ?
கூறு இனிக், காயேமா யாம்;
தேறின், பிறவும் தவறு இலேன் யான்;
அல்கல் கனவு கொல் நீ கண்டது?
கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள்
கண்ட கனவு எனக், காணாது, மாறு உற்றுப் -
பண்டைய அல்ல, நின் பொய்ச் சூள், நினக்கு; எல்லா! -
நின்றாய், நின் புக்கில் பல;
மென் தோளாய்! நல்கு, நின் நல் எழில் உண்கு;
ஏடா! குறை உற்று நீ எம் உரையல் - நின் தீமை
பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ, யாழ
நிறை ஆற்றா நெஞ்சு உடையேம்?
91 அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம்,
புரி நெகிழ் முல்லை, நறவோடு அமைந்த
தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார்
பொரு முரண் சீறச் சிதைந்து, நெருநையின்
இன்று நன்று, என்னை அணி;
அணை மென் தோளாய்! செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்கு எவன்,
ஐயத்தால்? என்னை கதியாதி; தீது இன்மை
தெய்வத்தான் - கண்டீ தெளிக்கு;
மற்று அது, அறிவல், யான் நின் சூள்; அனைத்து ஆக நல்லார் 
செறி தொடி உற்ற வடுவும், குறி பொய்த்தார்
கூர் உகிர் சாடிய மார்பும், குழைந்த நின்
தாரும், ததர் பட்ட சாந்தமும், சேரி
அரி மதர் உண் கண்ணார், ஆராக் கவவின்
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு, யானும்
செரு ஒழிந்தேன்; சென்றீ, இனி;
தெரி இழாய்! தேற்றாய் சிவந்தனை - காண்பாய், நீ - தீது இன்மை 
ஆற்றின் நிறுப்பல் பணிந்து;
அன்னதேல், ஆற்றல் காண்;
வேறுபட்டாங்கே கலுழ்தி; அகப்படின்,
மாறுபட்டாங்கே மயங்குதி; யாது ஒன்றும்
கூறி உணர்த்தலும் வேண்டாது, மற்று நீ
மாணா செயினும், மறுத்து, ஆங்கே, நின் வயின்
காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின், என் உற்றாய் 
பேணாய் நீ பெட்பச் செயல்?
92 புன வளர் பூங் கொடி அன்னாய்! கழியக்
கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே!
முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி,
மயங்கி, மற்று ஆண்டு ஆண்டுச் சேறலும் செல்லாது, 
உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும்,
அரிதின் அறம் செய்யா, ஆன்றோர் உலகும்,
உரிதின் ஒருதலை எய்தலும் - வீழ்வார்ப்
பிரிதலும், ஆங்கே புணர்தலும், தம்மில்
தருதல் தகையாதால் மற்று;
நனவினால் போலும், நறு நுதால்! அல்கல்
கனவினால் சென்றேன் - கலி கெழு கூடல்
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையைக்
கரை அணி காவின் அகத்து;
உரை, இனி - தண்டாத் தீம் சாயல் நெடுந்தகாய்! அவ் வழிக் 
கண்டது எவன் மற்று நீ?
கண்டது - உடன் அமர் ஆயமொடு, அவ் விசும்பு ஆயும் 
மட நடை மா இனம், அந்தி அமையத்து,
இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால்,
இறைகொண்டு இருந்தன்ன - நல்லாரைக் கண்டேன்; 
துறை கொண்டு உயர் மணல் மேல் ஒன்றி நிறைவதை 
ஓர்த்தது இசைக்கும் பறை போல், நின் நெஞ்சத்து 
வேட்டதே கண்டாய் கனா;
கேட்டை, விரையல் நீ; மற்று வெகுள்வாய்! - உரை - ஆண்டு 
இது ஆகும், இன் நகை நல்லாய்! பொது ஆகத்,
தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர்
பூங் கொடி வாங்கி, இணர் கொய்ய, ஆங்கே
சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத
முனை அரண் போல உடைந்தன்று, அக் காவில்
துனை வரி வண்டின் இனம்;
மற்று ஆங்கே, நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அவ் வழிக் 
காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச, 
அவருள்,
ஒருத்தி, செயல் அமை கோதை நகை,
ஒருத்தி, இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப, 
ஒருத்தி, தெரி முத்தம் சேர்ந்த திலகம்,
ஒருத்தி, அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க, 
ஒருத்தி, வரி ஆர் அகல் அல்குல் காழகம்,
ஒருத்தி, அரி ஆர் ஞெகிழத்து அணி சுறாத் தட்ப, 
ஒருத்தி, புலவியால் புல்லாது இருந்தாள், அலவுற்று 
வண்டு இனம் ஆர்ப்ப, இடை விட்டுக் காதலன்
தண் தார் அகலம் புகும்;
ஒருத்தி, அடி தாழ் கலிங்கம் தழீஇ, ஒரு கை
முடி தாழ் இரும் கூந்தல் பற்றிப், பூ வேய்ந்த
கடி கயம் பாயும், அலந்து;
ஒருத்தி, கணம் கொண்டு அவை மூசக், கை ஆற்றாள், பூண்ட
மணம் கமழ் கோதை பரிபு கொண்டு, ஓச்சி
வணங்கு காழ் வங்கம் புகும்;
ஒருத்தி, இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள், 
பறந்தவை மூசக் கடிவாள், கடியும்
இடம் தேற்றாள் சோர்ந்தனள், கை;
ஆங்க, கடி காவில் கால் ஒற்ற, ஒல்கி ஒசியாக்
கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல்,
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார் வண்டிற்கு 
வண்டலவர்; கண்டேன், யான்;
நின்னை நின் பெண்டிர் புலந்தனவும், நீ அவர்
முன் அடி ஒல்கி உணர்த்தினவும், பல் மாண்
கனவின் தலையிட்டு உரையல்; சினைஇ யான்
செய்வது இல் என்பதோ? கூறு;
பொய் கூறேன் - அன்ன வகையால் யான் கண்ட கனவு தான் 
நல் வாயாக் காண்டை - நறு நுதால்! பல் மாணும்
கூடிப் புணர்ந்தீர்! பிரியன்மின்; நீடிப்
பிரிந்தீர்! புணர் தம்மின், என்பன போல
அரும்பு அவிழ் பூஞ் சினை தோறும் இரும் குயில் 
ஆனாது அகவும் பொழுதினான், மேவர,
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்
தேன் இமிர் காவில் புணர்ந்து இருந்து ஆடுமார்,
ஆனா விருப்போடு அணி அயர்ப, காமற்கு
வேனில் விருந்து எதிர்கொண்டு.
93 வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய,
தண்டாத் தீம் சாயல் பரத்தை, வியல் மார்ப!
பண்டு, இன்னை அல்லைமன்; ஈங்கு எல்லி வந்தீயக், 
கண்டது எவன்? மற்று உரை;
நன்றும், தடைஇய மென் தோளாய்! கேட்டீவாய் ஆயின் -
உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும்
கடவுளர் கண் தங்கினேன்;
சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர், நீ
கடவுண்மை கொண்டு ஒழுகுவார்;
அவருள், எக் கடவுள்? மற்று அக் கடவுளைச் செப்பீமன்;
முத்து ஏர் முறுவலாய் நாம் மணம் புக்கக் கால்
இப் போழ்து போழ்து என்று அது வாய்ப்பக் கூறிய 
அக் கடவுள், மற்று அக் கடவுள்; - அது ஒக்கும்
நாவுள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும்
மாயமோ; கைப்படுக்கப்பட்டாய், நீ; கண்டாரை
வாய் ஆக யாம் கூற வேட்டீவாய்! கேள் இனி;
பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்பப்,
பறி முறை நேர்ந்த நகார் ஆகக், கண்டார்க்கு
இறு முறை செய்யும் உருவொடு, நும் இல்,
செறி முறை வந்த கடவுளைக் கண்டாயோ?
நறும் தண் தகரமும் நானமும் நாறும்
நெறிந்த குரல் கூந்தல் நாள் அணிக்கு ஒப்ப,
நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு, மேல் நாள், நீ
பூப் பலி விட்ட கடவுளைக் கண்டாயோ?
ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச்
சூர் கொன்ற செவ்வேலான் பாடிப், பல நாளும்,
ஆராக் கனை காமம் குன்றத்து நின்னொடு
மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ?
கண்ட கடவுளர் தம் உள்ளும், நின்னை
வெறி கொள் வியல் மார்பு வேறு ஆகச் செய்து,
குறி கொளச் செய்தார் யார்? செப்பு; மற்று, யாரும்
சிறு வரைத் தங்கின் வெகுள்வர்; செறு தக்காய்!
தேறினேன்; சென்றீ; நீ செல்லா விடுவாயேல்,
நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய
நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும்
முட்டுப்பாடு ஆகலும் உண்டு.
94 என் நோற்றனை கொல்லோ? -
நீர் உள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல்
ஈங்கு உருச் சுருங்கி
இயலுவாய்! நின்னோடு உசாவுவேன்; நின்றீத்தை;
அன்னையோ! காண் தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான் 
ஆண்டலைக்கு ஈன்ற பறழ் மகனே! நீ எம்மை
'வேண்டுவல்' என்று விலக்கினை; நின் போல்வார் 
தீண்டப் பெறுபவோ மற்று?
மாண்ட, எறித்த படை போல் முடங்கி மடங்கி,
நெறித்துவிட்டன்ன நிறை ஏரால், என்னைப்
பொறுக்கல்லா நோய் செய்தாய்; பொறீஇ நிறுக்கல்லேன்; 
நீ நல்கின் உண்டு, என் உயிர்;
குறிப்புக் காண் - வல்லுப்பலகை எடுத்து நிறுத்தன்ன 
கல்லாக் குறள! கடும் பகல் வந்து எம்மை,
'இல்லத்து வா' என, மெய் கொளீஇ, எல்லா! நின்
பெண்டிர் உளர் மன்னோ? கூறு;
நல்லாய் கேள்! உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய
கொக்கு உரித்தன்ன கொடு மடாய்! நின்னை யான் 
புக்கு அகலம் புல்லின், நெஞ்சு ஊன்றும்; புறம் புல்லின் 
அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன்; அருளீமோ.
பக்கத்துப் புல்லச் சிறிது;
போ, சீத்தை! மக்கள் முரியே! நீ மாறு, இனித், தொக்க 
மரக் கோட்டம் சேர்ந்து எழுந்த பூங் கொடி போல, 
நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர், எம்மைப்,
புரப்பேம் என்பாரும் பலரால்; பரத்தை, என்
பக்கத்துப் புல்லீயாய் என்னுமால்; தொக்க
உழுந்தினும் துவ்வாக், குறு வட்டா! நின்னின்
இழிந்ததோ, கூனின் பிறப்பு? - கழிந்து ஆங்கே,
'யாம் வீழ்தும்' என்று தன் பின் செலவும், உற்றீயாக்
கூனி குழையும் குழைவு காண்;
யாமை எடுத்து நிறுத்தற்றால், தோள் இரண்டும் வீசி, 
யாம் வேண்டேம் என்று விலக்கவும், எம் வீழும்
காமர் நடக்கும் நடை காண் - கவர் கணைச்
சாமனார் தம் முன் செலவு காண்;
ஓஒ! காண், நம்முள் நகுதல் தொடீஇயர், நம்முள் நாம் 
உசாவுவம்; கோன் அடி தொட்டேன்;
ஆங்கு ஆக! சாயல் இன் மார்ப! அடங்கினேன்; ஏஎ! 
பேயும் பேயும் துள்ளல் உறும் எனக்
கோயில் உள் கண்டார் நகாமை வேண்டுவல்;
தண்டாத் தகடு உருவ! வேறு ஆகக் காவின் கீழ்ப் 
போதர்; அகடு ஆரப் புல்லி முயங்குவேம் -
துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை
முகடு காப்பு யாத்துவிட்டாங்கு.
95 நில், ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல் - எல்லா! நீ
நாறு இரும் கூந்தலார் இல் செல்வாய், இவ் வழி
ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே
மாறு; இனி நின் ஆங்கே நின், சே அடி சிவப்பச், 
செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த 
குறும்பூழ் போர் கண்டேம்; அனைத்தல்லது, யாதும் 
அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது;
குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன், நீ என்றும்; 
புதுவன ஈகை வளம் பாடிக், காலின்
பிரியாக் கவி கை புலையன் தன் யாழின்
இகுத்த செவி சாய்த்து, இனி இனிப் பட்டன
ஈகைப் போர் கண்டாயும் போறி; மெய் எண்ணின், 
தபுத்த புலர்வு இல புண்;
ஊரவர் கவ்வை உளைந்து ஈயாய், அல்கல் நின்
தாரின் வாய்க் கொண்டு முயங்கிப், பிடி மாண்டு,
போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டு, ஆடும் 
பார்வைப் போர் கண்டாயும் போறி; நின் தோள் மேலாம் 
ஈரம் ஆய் விட்டன புண்;
கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம் முழுதும் கையின் 
துடைத்து, நீ வேண்டினும் வெல்லாது கொண்டு, ஆடும் 
ஒட்டிய போர் கண்டாயும் போறி; முகம் தானே
கொட்டிக் கொடுக்கும் குறிப்பு;
ஆயின், ஆய் இழாய்! அன்னவை யான் ஆங்கு அறியாமை 
போற்றிய, நின் மெய் தொடுகு;
அன்னையோ! மெய்யைp பொய் என்று மயங்கிய, கை ஒன்று, 
அறிகல்லாய் போறி காண், நீ; 95-26
நல்லாய்! பொய் எல்லாம் ஏற்றிt, தவறு தலைப்பெய்து,
கையொடு கண்டாய்; பிழைத்தேன்; அருள் இனி;
அருளுகம் யாம்; யாரேம்; எல்லா! தெருள?
அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் - இன்னும்
விளித்து, நின் பாணனோடு ஆடி, அளித்தி -
விடலை நீ நீத்தலின், நோய் பெரிது ஏய்க்கும்;
நடலைப்பட்டு, எல்லாம் நின் பூழ்.
96 ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல, நின் வாய் சொல்;
பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்து ஆனா மைந்தினை; 
சாந்து அழி வேரை; சுவல் தாழ்ந்த கண்ணியை;
யாங்குச் சென்று, ஈங்கு வந்தீத்தந்தாய்? கேள், இனி;
ஏந்தி, எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்! 
குதிரை வழங்கி வருவல்;
அறிந்தேன், குதிரை தான்!
பால் பிரியா ஐங்கூந்தல் பல் மயிர்க் கொய் சுவல், 
மேல் விரித்து யாத்த சிகழிகைச் செவ் உளை,
நீல மணிக் கடிகை வல்லிகை, யாப்பின் கீழ்
ஞால் இயல் மெல் காதின் புல்லிகைச் சாமரை,
மத்திகைக் கண்ணுறை ஆகக் கவின் பெற்ற
உத்தி ஒரு காழ், நூல் உத்தரியத் திண் பிடி,
நேர் மணி நேர் முக் காழ்ப் பல் பல கண்டிகைத்,
தார் மணி பூண்ட தமனிய மேகலை,
நூபுரப் புட்டில், அடியொடு அமைத்து யாத்த
வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி, நீ,
காதலித்து ஊர்ந்த நின் காமக் குதிரையை,
ஆய் சுதை மாடத்து, அணி நிலா முற்றத்துள்,
ஆதி கொளீஇய, அசையினை ஆகுவை,
வாதுவன்; வாழிய நீ;
சேகா! கதிர் விரி வைகலில், கை வாரூஉக் கொண்ட
மதுரைப் பெரு முற்றம் போல, நின் மெய்க் கண்
குதிரையோ, வீறியது?
கூர் உகிர் மாண்ட குளம்பின் அது; நன்றே
கோரமே - வாழி! - குதிரை;
வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்தக்
குதிரை உடல் அணி போல, நின் மெய்க் கண்
குதிரையோ, கவ்வியது?
சீத்தை! பயம் இன்றி ஈங்குக் கடித்தது; நன்றே
வியமமே வாழி! - குதிரை;
மிக நன்று; இனி அறிந்தேன், இன்று நீ ஊர்ந்த குதிரை; 
பெரு மணம் பண்ணி, அறத்தினில் கொண்ட
பருமக் குதிரையோ அன்று; பெரும! நின்
ஏதில் பெரும் பாணன் தூது ஆட, ஆங்கே ஓர்
வாதத்தான் வந்த வளிக் குதிரை; ஆதி
உரு அழிக்கும் அக் குதிரை ஊரல்; நீ ஊரின், பரத்தை
பரியாக, வாதுவனாய், என்றும் மற்று அச்சார்த்
திரி, குதிரை ஏறிய செல்.
97 அன்னை; கடுஞ் சொல் அறியாதாய் போல, நீ
என்னைப் புலப்பது, ஒறுக்குவென் மன் யான் -
சிறுகாலை இற்கடை வந்து, குறி செய்த
அவ் வழி என்றும் யான் காணேன் திரிதர,
எவ் வழிப் பட்டாய் சமன் ஆக, இவ் எள்ளல்;
முத்து ஏர் முறுவலாய்! நம் வலைப் பட்டது ஓர்
புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன்; 
ஒக்கும்;
அவ் யானை, வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன்; 
அவ் யானை தான் சுண்ண நீறு ஆடி, நறு நறா நீர் உண்டு - 
ஒள் நுதல் யாத்த திலக அவிர் ஓடைத்,
தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டுத்,
தொய்யகம் தோட்டிக், குழை தாழ் வடி மணி,
உத்தி பொறித்த புனை பூண் பருமத்து -
முத்து ஏய்க்கும் வெண் பல் நகை திறந்து,
நல் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து,
தன் நலம் காட்டித், தகையினால், கால் தட்டி வீழ்க்கும்,
தொடர் தொடர் ஆக வலந்து, படர் செய்யும்
மென் தோள் தடக் கையின் வாங்கித், தன் கண்டார் 
நலம் கவளம் கொள்ளும் நகை முக வேழத்தை,
இன்று கண்டாய் போல், எவன் எம்மைப் பொய்ப்பது, நீ?
எல்லா! கெழீஇத், தொடி செறித்த தோள் இணை, தத்திக் 
தழீஇ கொண்டு ஊர்ந்தாயும் நீ;
குழீஇ, அவாவினால் தேம்புவார் இல் கடை ஆறா, 
உவா அணி ஊர்ந்தாயும் நீ;
மிகாஅது, சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண் கண் 
நீர்க்கு விட்டு, ஊர்ந்தாயும் நீ;
சார்ச் சார் நெறி தாழ் இரும் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் 97-28
சிறு பாகர் ஆக சிரற்றாது, மெல்ல,
விடாஅது நீ எம் இல் வந்தாய்; அவ் யானை
கடாஅம் படும் இடத்து ஓம்பு.
98 யாரை நீ எம் இல் புகுதர்வாய்? ஓரும்
புதுவ மலர் தேரும் வண்டே போல் - யாழ
வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய் -
மாட்டு மாட்டு ஓடி, மகளிர் தரத் தரப்,
பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம்
பாட்டு ஆதல் சான்ற நின் மாயப் பரத்தைமை -
காட்டிய வந்தமை கைப்படுத்தேன் - பண்டு எலாம் 
கேட்டும் அறிவேன்மன், யான்;
தெரி கோதை அம் நல்லாய்! தேறீயல் வேண்டும் -
பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை
வரு புனல் ஆடத் தவிர்ந்தேன்; பெரிது என்னைச் 
செய்யா மொழிவது எவன்?
ஓஒ! புனல் ஆடினாய் எனவும் கேட்டேன்; புனல் ஆங்கே 
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக,
மாண் எழில் உண் கண், பிறழும் கயல் ஆகக்,
கார் மலர் வேய்ந்த கமழ் பூம் பரப்பு ஆக
நாணுச் சிறை அழித்து நன்பகல் வந்த அவ்
யாணர் புதுப் புனல் ஆடினாய், முன் மாலைப்
பாணன் புணை ஆகப் புக்கு;
ஆனாது, அளித்து அமர் காதலோடு அப் புனல் ஆடி, 
வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சிக்,
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன்; குளித்தாங்கே,
போர்த்த சினத்தான் புருவத் திரை இடா,
ஆர்க்கும் ஞெகிழத்தான் நன் நீர் நடை தட்பச்
சீர்த் தக வந்த புதுப் புனல் நின்னைக் கொண்டு
ஈர்த்து உய்ப்பக் கண்டார் உளர்;
ஈர்த்தது, உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்கப், 
புரை தீர் புதுப் புனல் வெள்ளத்தின் இன்னும்
கரை கண்டதூ உம் இலை;
நிரை தொடீஇ! பொய்யா வாள் தானைப், புனை கழல் கால் தென்னவன் 
வையைப் புதுப் புனல் ஆடத் தவிர்ந்ததைத்
தெய்வத்தின் தேற்றித் தெளிப்பேன்; பெரிது என்னைச்
செய்யா மொழிவது எவன்;
மெய்யதை, மல்கு மலர் வேய்ந்த மாயப் புதுப் புனல் 
பல் காலும் ஆடிய செல்வுழி, ஒல்கிக்
களைஞரும் இல் வழிக் கால் ஆழ்ந்து தேரோடு
இள மணலுள் படல் ஓம்பு - முளை நேர்
முறுவலார்க்கு ஓர் நகை செய்து.
99 நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும், அவை எடுத்து
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது,
குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து 
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் 
பிழையாது வருதல் நின் செம்மையின் தர, வாய்ந்த 
இழை அணி கொடித் திண் தேர் இன மணி யானையாய்!
அறன் நிழல் எனக் கொண்டாய், ஆய் குடை; அக் குடை 
புற நிழல் கீழ்ப் பட்டாளோ, இவள்? இவள் காண்டிகா-
பிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்பு உற்றாளை! 
பொய்யாமை நுவலும் நின் செங்கோல்; அச் செங்கோலின்
செய் தொழில் கீழ்ப் பட்டாளோ, இவள்? இவள் காண்டிகா- 
காம நோய் கடைக் கூட்ட வாழும் நாள் முனிந்தாளை! 
ஏமம் என்று இரங்கும், நின் எறி முரசம்; அம் முரசின்
ஏமத்து இகந்தாளோ, இவள்? இவள் காண்டிகா-
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை! 
ஆங்கு;
நெடிது சேண் இகந்தவை காணினும் தான் உற்ற
வடுக் காட்டக், கண் காணாதற்று ஆக, என் தோழி 
தொடி கொட்ப நீத்த கொடுமையைக்
கடிது என உணராமை கடிந்ததோ, நினக்கே?
100 ஈண்டு நீர் மிசைத் தோன்றி இருள் சீக்கும் சுடரே போல், 
வேண்டாதார் நெஞ்சு உட்க, வெரு வந்த கொடுமையும், 
நீண்டு தோன்று உயர் குடை நிழல் என சேர்ந்தார்க்குக்
காண்தகு மதி என்னக் கதிர் விடு தண்மையும்,
மாண்ட நின் ஒழுக்கத்தால் மறு இன்றி, வியன் ஞாலத்து
யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்!
'ஐயம் தீர்ந்து யார் கண்ணும் அரும் தவ முதல்வன் போல்
பொய் கூறாய்' என நின்னைப் புகழ்வது கெடாதோ தான்-
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள்
பல் இதழ் மலர் உண் கண் பனி மல்கக் காணும் கால்! 
'சுரந்த வான் பொழிந்தற்றாச் சூழ நின்று யாவர்க்கும்
இரந்தது நசை வாட்டாய்' என்பது கெடாதோ தான்- 
கலங்கு அஞர் உற்று, நின் கமழ் மார்பு நசைஇயாள் 
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணும் கால்!
'உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல், 
முறை செய்தி' என நின்னை மொழிவது கெடாதோ தான்- 
அழி படர் வருத்த நின் அளி வேண்டிக் கலங்கியாள் 
பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணும் கால்!
ஆங்கு; 
தொல் நலம் இழந்தோள், நீ துணை எனப் புணர்ந்தவள்;
இன் உறல் வியன் மார்ப! 'இனையையால் கொடிது' என
நின்னை யான் கழறுதல் வேண்டுமோ,
என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே! 

 

66 வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட

ஞாங்கர் மலர் சூழ்தந்து, ஊர் புகுந்த வரி வண்டு,

ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம்

ஆங்கு அவை விருந்து ஆற்றப், பகல் அல்கிக், கங்குலான், 

வீங்கு இறை வடுக் கொள, வீழுநர்ப் புணர்ந்தவர்

தேம் கமழ் கதுப்பின் உள் அரும்பு அவிழ் நறு முல்லைப் 

பாய்ந்து ஊதிப் படர் தீர்ந்து, பண்டு தாம் மரீஇய

பூம் பொய்கை மறந்து உள்ளாப் புனல் அணி நல் ஊர! 

 

அணை மென் தோள் யாம் வாட, அமர் துணை புணர்ந்து நீ,

'மண மனையாய்!' என வந்த மல்லலின் மாண்பு அன்றோ -

பொதுக் கொண்ட கவ்வையுள் பூ அணிப் பொலிந்த நின்

வதுவை அம் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை;

 

கனலும் நோய்த் தலையும், 'நீ கனம் குழை அவரொடு 

புனல் உளாய்' என வந்த பூசலின் பெரிது அன்றோ - 

தார் கொண்டாள் தலைக் கோதை தடுமாறிப் பூண்ட நின்

ஈர் அணி சிதையாது, எம் இல் வந்து நின்றதை;

 

தணந்ததன் தலையும், 'நீ தளர் இயல் அவரொடு

துணங்கையாய்' என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ - 

ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணிப் பொலிந்த நின் 

களி தட்ப வந்த இக் கவின் காண இயைந்ததை;

 

என ஆங்கு,

அளி பெற்றேம், எம்மை நீ அருளினை; விளியாது

வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்

'நீட்டித்தாய்' என்று, கடாஅம், கடும் திண் தேர்,

பூட்டு விடாஅ நிறுத்து.

 

67 கார் முற்றி, இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து,

சீர் முற்றிப், புலவர் வாய்ச் சிறப்பு எய்தி, இரு நிலம் 

தார் முற்றியது போலத், தகை பூத்த வையை தன் 

நீர் முற்றி, மதில் பொரூஉம் பகை அல்லால், நேராதார் 

போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன் -

 

நலம் தகை, எழில் உண் கண் நல்லார் தம் கோதையால்

அலைத்த, புண், வடுக் காட்டி, அன்பு இன்றி வரின் - எல்லா! - 

புலப்பேன் யான் என்பேன்மன்? அந்நிலையே, அவன் காணின், 

கலப்பேன் என்னும், இக் கையறு நெஞ்சே;

 

கோடு எழில் அகல் அல்குல் கொடி அன்னார் முலை மூழ்கப் 

பாடு அழி சாந்தினன், பண்பு இன்றி வரின் - எல்லா! - 

ஊடுவேன் என்பேன்மன்? அந்நிலையே அவன் காணின் 

கூடுவேன் என்னும், இக் கொள்கை இல் நெஞ்சே;

 

இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின், 

நனிச் சிவந்த வடுக் காட்டி, நாண் இன்றி வரின்- எல்லா! -

துனிப்பேன் யான் என்பேன்மன்? அந்நிலையே, அவன் காணின், 

தனித்தே தாழும், இத் தனி இல் நெஞ்சே;

 

என ஆங்கு,

பிறை புரை ஏர் நுதால்! தாம் எண்ணியவை எல்லாம் 

துறைபோதல் ஒல்லுமோ - தூ ஆகாது ஆங்கே

அறைபோகு நெஞ்சு உடையார்க்கு?

 

68 பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு

மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர்

செது மொழி சீத்த செவி செறு ஆக,

முது மொழி நீராப், புலன் நா உழவர்

புது மொழி கூட்டுண்ணும், புரிசை சூழ், புனல் ஊர!

 

'ஊரன்மன் உரன் அல்லன், நமக்கு' என்ன, உடன் வாளாது,

ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகிக்,

களையா நின் குறி வந்து, எம் கதவம் சேர்ந்து அசைத்த கை 

வளையின் வாய்விடல் மாலை மகளிரை நோவேமோ -

'கேள் அலன், நமக்கு அவன், குறுகன்மின்' என, மற்று எம்

தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்?

 

'ஊடியார் நலம் தேம்ப, ஒடியெறிந்து, அவர் வயின்

மால் தீர்க்கும் அவன் மார்பு' என்று எழுந்த சொல் நோவேமோ - 

முகை வாய்த்த முலை பாயக் குழைந்த நின் தார் எள்ள,

வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்?

 

சேரியால் சென்று, நீ சேர்ந்த இல் வினாயினன்,

தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ -

ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து, எம் இல்

'பொலிக' எனப் புகுந்த நின் புலையனைக் கண்ட யாம்?

 

என ஆங்கு;

நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம் -

மனை வரின், பெற்று உவந்து, மற்று எம் தோள் வாட, 

'இனையர்' என உணர்ந்தார் என்று ஏக்கற்று, ஆங்குக் 

கனவினான் எய்திய செல்வத்து அனையதே -

ஐய! எமக்கு நின் மார்பு.

 

69 போது அவிழ் பனிப் பொய்கைப், புதுவது தளைவிட்ட 

தாது சூழ் தாமரைத் தனி மலர் புறம் சேர்பு -

காதல் கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய 

மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக,

ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல், 

ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு - 

மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர!

 

தெள் அரிச் சிலம்பு ஆர்ப்பத், தெருவின் கண் தாக்கி, நின்

உள்ளம் கொண்டு, ஒழித்தாளைக் குறை கூறிக் கொள நின்றாய்; 

துணிந்தது பிறிது ஆகத், 'துணிவு இலள் இவள்' எனப்,

பணிந்தாய் போல் வந்து, ஈண்டுப், பயன் இல மொழிவாயோ?

 

பட்டுழி அறியாது, பாகனைத் தேரொடும்

விட்டு, அவள் வரல் நோக்கி, விருந்து ஏற்றுக்கொள நின்றாய்; 

நெஞ்சத்த பிற ஆக, 'நிறை இலள் இவள்' என,

வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்து ஈவாயோ?

 

இணர் ததை தண் காவின், இயன்ற நின் குறி வந்தாள் 

புணர்வினில் புகன்று, ஆங்கே புனல் ஆடப் பண்ணியாய்; 

தருக்கிய பிற ஆகத், 'தன் இலள் இவள்' எனச்

செருக்கினால் வந்து, ஈங்குச் சொல் உகுத்து ஈவாயோ?

 

என ஆங்கு,

தருக்கேம் பெரும! நின் நல்கல் விருப்புற்றுத்

தாழ்ந்தாய் போல் வந்து, தகவு இல செய்யாது,

சூழ்ந்தவை செய்து, மற்று எம்மையும் உள்ளுவாய் - 

வீழ்ந்தார் விருப்பு அற்றக் கால்.

 

70 மணி நிற மலர்ப் பொய்கை, மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்

அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தெனக்

கதுமெனக், காணாது, கலங்கி, அம் மடப் பெடை 

மதி நிழல் நீர் உள் கண்டு, அது என உவந்து ஓடித், 

துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு, மிக நாணிப்,

பல் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊ! கேள்;

 

நலம் நீப்பத் துறந்து, எம்மை நல்காய் நீ விடுதலின்,

பல நாளும் படாத கண், பாயல் கொண்டு, இயைபவால்;

துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட,

மண மனைத் ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே! 

 

அகல நீ துறத்தலின், அழுது ஓவா உண் கண், எம் 

புதல்வனை மெய் தீண்டப், பொருந்துதல் இயைபவால்; 

நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர்த் தந்து, நின் 

தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே! 

 

வாராய் நீ துறத்தலின், வருந்திய எமக்கு, ஆங்கே 

நீர் இதழ் புலராக் கண் இமை கூம்ப இயைபவால்; 

நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்

தேர் பூண்ட நெடு நல் மான் தெள் மணி வந்து எடுப்புமே!

 

என ஆங்கு,

மெல்லியான் செவி முதல், மேல்வந்தான் காலை போல்,

எல்லாம் துயிலோ எடுப்புக; நின் பெண்டிர்,

இல்லின் எழீஇய யாழ் தழீஇ கல்லா வாய்ப்

பாணன் புகுதராக் கால்!

 

71 விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தரப்

புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி, 

வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் - 

துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார, 

இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு, 

நனி விரைந்து அளித்தலின், நகுபவள் முகம் போலப் -

பனி ஒரு திறம் வாரப், பாசடைத் தாமரைத்

தனி மலர் தளை விடூஉம் தண் துறை நல் ஊர!

 

'ஒரு நீ, பிறர் இல்லை, அவன் பெண்டிர்' என உரைத்துத்,

தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான் கொல் -

ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் 

பாரித்துப் புணர்ந்த நின் பரத்தைமை காணிய?

 

'மடுத்து அவன் புகு வழி மறையேன்' என்று, யாழொடும்

எடுத்துச் சூள் பல உற்ற பாணன் வந்தீயான் கொல் -

அடுத்துத் தன் பொய் உண்டார்ப் புணர்ந்த நின் எருத்தின் கண் 

எடுத்துக் கொள்வது போலும் தொடி வடு காணிய?

 

'தணந்தனை' எனக் கேட்டுத், தவறு ஓராது, எமக்கு நின்

குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான் கொல் - 

கணம் குழை நல்லவர் கதுப்பு அறல் அணைத் துஞ்சி, 

அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய? 

 

என்று நின்,

தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர்

யார்? - நீ வரு நாள் போல் அமைகுவம் யாம்; புக்கீமோ! - 

மாரிக்கு அவாவுற்றுப் பீள் வாடும் நெல்லிற்கு, ஆங்கு 

ஆராத் துவலை அளித்தது போலும், நீ

ஓர் யாட்டு ஒரு கால் வரவு.

 

72 'இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்,

துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇச், 

சேடு இயல் வள்ளத்துப் பெய்த பால் சில காட்டி,

ஊடும் மெல் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போலப் , 

புது நீர புதல் ஒற்றப், புணர் திரைப் பிதிர் மல்க,

மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணிக்,

கடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின்

வடி தீண்ட, வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர!

 

கண்ணி, நீ கடி கொண்டார்க் கனைதொறும், யாம் அழப்,

பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ - 

'பேணான்' என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான்,

மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை?

 

நாடி நின் தூது ஆடித், துறைச் செல்லாள், ஊரவர்

ஆடை கொண்டு, ஒலிக்கும், நின் புலைத்தி காட்டு என்றாளோ - 

கூடியார் புனல் ஆடப் புணை ஆய மார்பினில்,

ஊடியார் எறிதர ஒளி விட்ட அரக்கினை?

 

வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் 

அறிவு உடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோ - 

களி பட்டார் கமழ் கோதை கயம்பட்ட உருவின் மேல் 

குறி பெற்றார் குரல் கூந்தல் கோடு உளர்ந்த துகளினை?

 

என ஆங்கு,

செறிவுற்றேம்; எம்மை நீ செறிய, அறிவுற்று,

அழிந்து உகு நெஞ்சத்தேம், அல்லல் உழப்பக்

கழிந்தவை உள்ளாது, கண்ட இடத்தே,

அழிந்து நின் பேணிக் கொளலின் இழிந்ததோ -

இந் நோய் உழத்தல் எமக்கு?

 

73 அகல் துறை அணிபெறப், புதலொடு தாழ்ந்த

பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை,

கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தால்

தண் கமழ் நறும் தேறல் உண்பவள் முகம் போல,

வண் பிணி தளை விடூஉம் வயல் அணி நல் ஊர!

 

'நோதக்காய்' என நின்னை நொந்தீவார் இல் வழித்,

'தீது இலேன் யான்' எனத் தேற்றிய வருதிமன் -

ஞெகிழ் தொடி இளையவர் இடை முலைத் தாது சோர்ந்து,

இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையாக்கால்?

 

கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்வழி,

'மனத்தில் தீது இலன்' என மயக்கிய வருதிமன் -

அலமரல் உண் கண்ணார் ஆய் கோதை குழைத்த நின் 

மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால்?

 

என்னை நீ செய்யினும், உரைத்தீவார் இல் வழி,

முன் அடிப் பணிந்து, எம்மை உணர்த்திய வருதிமன் - 

நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக் கொள்ளக், 

கரை இடைக் கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால்? 

 

என ஆங்கு,

மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின்

தண்டாப் பரத்தை தலைக் கொள்ள, நாளும்

புலத் தகைப் பெண்டிரைத் தேற்ற; மற்று யாம் எனின், 

தோலாமோ நின் பொய் மருண்டு?

 

74 பொய்கைப் பூ புதிது உண்ட வரி வண்டு கழி பூத்த 

நெய்தல் தாது அமர்ந்து ஆடிப், பாசடைச் சேப்பினுள் 

செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை,

மை தபு, கிளர் கொட்டை மாண் பதி படர்தரூஉம், 

கொய்குழை அகை காஞ்சித் துறை அணி நல் ஊர! 

 

'அன்பு இலன், அறன் இலன், எனப்படான்' என ஏத்தி, 

நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்;

நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளி இன்மை

கண்டுநின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்.

 

முன்பகல் தலைக்கூடி, நன்பகல் அவள் நீத்துப்,

பின்பகல் பிறர்த் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்;

 

என ஆங்கு;

'கிண்கிணி மணித் தாரொடு ஒலித்து ஆர்ப்ப, ஒண் தொடிப் 

பேர் அமர்க் கண்ணார்க்கும் படு வலை இது' என, 

ஊரவர் உடன் நகத் திரிதரும்

தேர் ஏமுற்றன்று, நின்னினும் பெரிதே!

 

75 நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய

நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார்,

சீர் ஆர் சே இழை ஒலிப்ப, ஓடும்

ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து,

ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி

உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி,

அமர்க்கண் மகளிர் அலப்பிய அந் நோய் ,

தமர்க்கு உரைப்பன போல், பல் குரல் பயிற்றும், 

உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன்

புதுவோர் புணர்தல் வெய்யன் ஆயின்,

வதுவை நாளால் வைகலும், அ·து யான்

நோவேன், தோழி! நோவாய் நீ, என

என் பார்த்து உறுவோய்! கேள், இனித் தெற்றென; 

 

'எல்லினை வருதி, எவன் குறித்தனை?' எனச்

சொல்லாதிருப்பேன் ஆயின், ஒல்லென,

விரி உளைக் கலி மான் தேரொடு வந்த

விருந்து எதிர்கோடலின், மறப்பல், என்றும்;

 

'வாடிய பூவொடு வாரல், எம்மனை' என

ஊடி இருப்பேன் ஆயின், நீடாது,

அச்சு ஆறு ஆக உணரிய வருபவன்

பொய்ச் சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல்;

 

'பகல் ஆண்டு அல்கினை, பரத்த' என்று யான்

இகலியிருப்பேன் ஆயின், தான் தன்

முதல்வன் பெரும் பெயர் முறை உளிப் பெற்ற

புதல்வன் புல்லிப் பொய் துயில் துஞ்சும்;

 

ஆங்க , 

விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச் சூள் அஞ்சவும், 

அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும்,

ஆங்கு அவிந்து ஒழியும், என் புலவி தாங்காது,

அவ் அவ் இடத்தான் அவை அவை காணப் -

பூங் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும்

மாய மகிழ்நன் பரத்தைமை

நோவென், தோழி! கடன் நமக்கு எனவே.

 

76 புனை இழை நோக்கியும், புனல் ஆடப் புறம் சூழ்ந்தும், 

அணி வரி தைஇயும், நம் இல் வந்து வணங்கியும், 

நினையுபு வருந்தும் இந் நெடுந்தகை திறத்து, இவ் ஊர் 

'இனையள்' என்று எடுத்து ஓதற்கு அனையையோ, நீ? என

வினவுதி ஆயின், விளங்கு இழாய்! கேள், இனி;

 

'செவ் விரல் சிவப்பு ஊரச், சேண் சென்றாய்' என்று, அவன் 

பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்தற்கே - 

'கௌவை நோய் உற்றவர், காணாது கடுத்த சொல் 

ஒவ்வா' என்று உணராய், நீ ஒரு நிலையே உரைத்ததை?

 

ஒடுங்கி, யாம் புகல் ஒல்லேம் பெயர்தர, அவன் கண்டு,

நெடும் கய மலர் வாங்கி, நெறித்துத் தந்தனைத்தற்கோ - 

விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய் ஆகக் 

கடிந்ததும் இலையாய், நீ கழறிய வந்ததை?

 

'வரி தேற்றாய், நீ' என, வணங்கு இறை அவன் பற்றித்,

தெரி வேய்த் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தனைத்தற்கோ -

புரிபு நம் ஆயத்தார் பொய் ஆக எடுத்த சொல்

உரிது என உணராய், நீ உலமந்தாய் போன்றதை?

 

என ஆங்கு,

அரிது இனி, ஆய் இழாய்! அது தேற்றல், புரிபு ஒருங்கு,

அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று, ஈங்கே, 

தான் நயந்து இருந்தது இவ் ஊர் ஆயின், எவன் கொலோ -

நாம் செயற்பாலது இனி?

 

77 இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண், பிறிது யாதும் 

துணை இன்றித் தளை விட்ட, தாமரை தனி மலர்,

திரு முகம் இறைஞ்சினள், வீழ்பவற்கு, இனைபவள்

அரி மதர் மழைக் கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல், 

தகை மலர்ப் பழனத்த புள் ஒற்ற, ஒசிந்து ஒல்கி,

மிக நனி சேர்ந்த அம் முகை மிசை அம் மலர்

அக இதழ்த் தண் பனி உறைத்தரும் ஊர! கேள்:

 

தண் தளிர்த் தகை பூத்த தாது எழில் நலம் செலக் 

கொண்டு, நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்மன் - 

உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து, 'நின் 

பெண்டு' எனப் பிறர் கூறும் பழி மாறப் பெறுகற்பின்? 

 

பொன் எனப் பசந்த, கண் போது எழில் நலம் செலத், 

தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்மன் - 

நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள் 

என் உழை வந்து, நொந்து உரையாமை பெறுகற்பின்?; 

 

மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங் கூந்தல்

வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்மன் - 

நோய் சேர்ந்த திறம் பண்ணி, நின் பாணன், எம்மனை

நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின்?

 

ஆங்க,

'கடைஇய நின் மார்பு தோயலம்' என்னும்,

இடையும், நிறையும் எளிதோ - நின் காணின்

கடவுபு, கை தங்கா, நெஞ்சு என்னும் தம்மோடு

உடன் வாழ் பகை உடையார்க்கு?

 

78 பல் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை

இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இரும் தும்ப, 

உண் துறை உடைந்த பூப் புனல் சாய்ப்பப், புலந்து ஊடிப் 

பண்பு உடை நல் நாட்டுப் பகை தலை வந்தென,

அது கைவிட்டு அகன்று ஒரீஇக், காக்கிற்பான் குடை நீழல் 

பதி படர்ந்து, இறைகொள்ளும் குடி போலப் - பிறிதும் ஒரு 

பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான், மொய் தப

இறை பகை தணிப்ப அக் குடி பதிப் பெயர்ந்தாங்கு, 

நிறை புனல் நீங்க வந்து, அத்தும்பி அம் மலர்ப்

பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர!

 

'நீக்கும்கால் நிறம் சாய்ந்து, புணரும்கால் புகழ் பூத்து

நாம் கொண்ட குறிப்பு, இவள் நலம்' என்னும் தகையோ தான் - 

எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார்ப் புணர்ந்தமை

கரி கூறும் கண்ணியை, ஈங்கு எம் இல் வருவதை?

 

'சுடர் நோக்கி மலர்ந்து, ஆங்கே படின் கூம்பும் மலர் போல், என் 

தொடர் நீப்பின், தொகும், இவள் நலம்' என்னும் தகையோ தான் - 

அலர் நாணிக் கரந்த நோய் கைம்மிகப், பிறர் கூந்தல்

மலர் நாறும் மார்பினை, ஈங்கு எம் இல் வருவதை?

 

'பெயின் நந்தி, வறப்பின் சாம், புலத்திற்குப் பெயல் போல் யான் 

செலின் நந்திச், செறின் சாம்பும், இவள்' என்னும் தகையோ தான்-

முடி உற்ற கோதை போல் யாம் வாட, ஏதிலார்

தொடி உற்ற வடுக் காட்டி, ஈங்கு எம் இல் வருவதை? 

 

ஆங்க,

ஐய! அமைந்தன்று; அனைத்து ஆகப் புக்கீமோ,

வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆகக், கையின்

முகை மலர்ந்தன்ன முயக்கில் தகை இன்றே,

தண் பனி வைகல் எமக்கு?

 

79 புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த 

முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன்

வள் இதழ் உற நீடி, வயங்கிய ஒரு கதிர்,

அவை புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் அணி நுதல் 

வகை பெற செரீஇய வயந்தகம் போல், தோன்றும் 

தகைபெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்:

 

அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி; 

மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்,

'தோய்ந்தாரை அறிகுவேன், யான்' எனக், கமழும் நின்

சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ? 

 

புல்லல் எம் புதல்வனைப்; புகல் அகல் நின் மார்பில் 

பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால், 

மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில் 

பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ? 

 

கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி; நின் சென்னி 

வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால், 

'நண்ணியார்க் காட்டுவது இது' எனக் கமழும் நின் 

கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ? 

 

என ஆங்கு,

பூங் கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி,

நீங்காய் இகவாய் நெடும் கடை நில்லாதி;

ஆங்கே அவர் வயின் சென்றீ - அணி சிதைப்பான் - 

ஈங்கு எம் புதல்வனைத் தந்து.

 

80 நயம் தலை மாறுவார் மாறுக; மாறாக்,

கயம் தலை மின்னும் கதிர் விடு முக் காழ்ப்,

பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கித் -

திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆகத் தைஇப்

பவழம் புனைந்த பருதி சுமப்பக்

கவழம் அறியா நின் கை புனை வேழம்

புரி புனை பூங் கயிற்றின் பைபய வாங்கி,

அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து, ஈங்கே

வருக! - எம் பாக மகன்!

 

கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும்

தளர் நடை காண்டல் இனிது; மற்று இன்னாதே,

'உளம்' என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார்

வளை நெகிழ்பு யாம் காணும் கால்;

 

ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா, என்னும் நின் 

தே மொழி கேட்டல் இனிது; மற்று இன்னாதே,

உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார் 

எவ்வ நோய் யாம் காணும் கால்;

 

ஐய! 'திங்கள் குழவி! வருக!' என, யான் நின்னை

அம்புலி காட்டல் இனிது; மற்று இன்னாதே,

நல்காது, நுந்தை புறம் மாறப்பட்டவர்

அல்குல் வரி யாம் காணும் கால்;

 

ஐய! எம் காதில் கனம் குழை வாங்கிப், பெயர்தொறும்,

போது இல் வறும் கூந்தல், கொள்வதை, நின்னை யாம் -

ஏதிலார் கண் சாய - நுந்தை வியல் மார்பில்

தாது தேர் வண்டின் கிளை பாடத், தைஇய

கோதை பரிபு ஆடக், காண்கும்.

 

81 மை அற விளங்கிய மணி மருள் அவ் வாய் தன்

மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தரப், 

பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன், 

நலம்பெறு கமழ் சென்னி, நகையொடு துயல்வர,

உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில், 

அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்பப், 

பாலோடு அலர்ந்த முலை மறந்து, முற்றத்துக்

கால் வல் தேர் கையின் இயக்க, நடை பயிற்றா,

ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல்

போல, வரும் என் உயிர்!

 

பெரும! விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய்; 

பெருந் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்றத்,

திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப,

மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்றாப் 

பெருந்தகாய்! கூறு சில.

 

எல் இழாய்! சேய் நின்று, நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து, ஆங்கே 

வாய் ஓடி, 'ஏனாதிப்பாடியம்' என்றற்றா,

'நோய் நாம் தணிக்கும் மருந்து' எனப் பாராட்ட,

ஓவாது அடுத்து அடுத்து, 'அத்தத்தா!' என்பான் மாண 

வேய் மென் தோள் வேய்த் திறம் சேர்த்தலும், மற்று இவன்

வாய் உள்ளின் போகான் அரோ!

 

உள்ளி, உழையே ஒருங்கு படை விடக்

கள்ளர் படர்தந்தது போலத், தாம் எம்மை

எள்ளுமார் வந்தாரே, ஈங்கு!

 

ஏதப்பாடு எண்ணிப், புரிசை வியல் உள்ளோர்

கள்வரைக் காணாது, 'கண்டேம்' என்பார் போலச் 

சேய் நின்று, செய்யாத சொல்லிச் சினவல்; நின்

ஆணை கடக்கிற்பார் யார்?

 

அதிர்வு இல் படிறு எருக்கி, வந்து என் மகன் மேல், 

முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி

உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப,

எதிர் வளி நின்றாய், நீ செல்;

 

இனி! 'எல்லா! யாம், தீது இலேம்' என்று தெளிப்பவும், கைந் நீவி 

யாது ஒன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின்,

மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம்,

தாவா விருப்பொடு கன்று யாத்த உழிச் செல்லும்

ஆ போல் படர் தக நாம்!

 

82 ஞாலம் வறம் தீரப் பெய்யக், குணக்கு ஏர்பு

காலத்தில் தோன்றிய கொண்மூ போல், எம் முலை 

பாலொடு வீங்கத் தவ நெடிது ஆயினை,

புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு

புக்க வழி எல்லாம் கூறு;

 

கூறுவேன்; மேயாயே போல வினவி, வழிமுறைக்

காயாமை வேண்டுவல் யான்;

 

காயேம்;

மடக் குறு மாக்களோடு ஓரை அயரும்

அடக்கம் இல் போழ்தின் கண், தந்தை காமுற்ற

தொடக்கத்துத் தாய் உழை புக்காற்கு, அவளும்

மருப்புப் பூண் கையுறை ஆக அணிந்து -

'பெருமான்! நகை முகம் காட்டு' என்பாள், கண்ணீர் 

சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன; மற்றும்,

வழிமுறைத் தாய் உழைப் புக்காற்கு, அவளும்

மயங்கு நோய் தாங்கி, மகன் எதிர் வந்து,

முயங்கினள் முத்தினள் நோக்கி, நினைந்தே,

'நினக்கு யாம் யாரேம் ஆகுதும்?' என்று,

வனப்பு உறக் கொள்வன நாடி அணிந்தனள்,

ஆங்கே, 'அரி மதர் உண் கண் பசப்ப நோய் செய்யும் 

பெருமான் பரத்தைமை ஒவ்வாத' என்றாள்;

அவட்கு இனிது ஆகி விடுத்தனன் போகித்

தலைக் கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்

புலத் தகை புத்தேள் இல் புக்கான்- அலைக்கு ஒரு 

கோல் தா; நினக்கு அவள் யார் ஆகும்? - எல்லா! 

வருந்தி யாம் நோய் கூர, நுந்தையை என்றும்

பருந்து எறிந்தற்று ஆகக் கொள்ளும்; கொண்டாங்கே 

தொடியும் உகிரும் படை ஆக நுந்தை

கடி உடை மார்பின் சிறு கண்ணும் உட்காள்,

வடுவும் குறித்தாங்கே செய்யும்; விடு, இனி;

அன்ன பிறவும், பெருமான் அவள் வயின்

துன்னுதல் ஓம்பித், திறவது இல் முன்னி, நீ

ஐயம் இல்லாதவர் இல் ஒழிய, எம் போலக்

கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்;

அமைந்தது; இனி நின் தொழில்.

 

83 பெரு திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனைப், 

பொருந்து நோன் கதவு ஒற்றிப் புலம்பி, யாம் உலமர

இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் 

விளையாட்டிக் கொண்டு வரற்கு எனச் சென்றாய்,

உளைவு இலை; ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம் 

நீட்டித்த காரணம் என்?

 

கேட்டீ -

பெரு மடல் பெண்ணைப் பிணர்த் தோட்டுப் பைங் குரும்பைக்

குட வாய்க் கொடிப் பின்னல் வாங்கித், தளரும்

பெரு மணித் திண் தேர்க் குறுமக்கள் நாப்பண்,

அகல் நகர் மீள்தருவான் ஆகப், புரி ஞெகிழ்பு

நீல நிரைப் போது உறு காற்கு உலைவன போல், 

சாலகத்து ஒல்கிய கண்ணர், 'உயர் சீர்த்தி

ஆல் அமர் செல்வன் அணி சால் மகன் விழாக்

கால்கோள்' என்று ஊக்கிக், கதுமென நோக்கித், 

திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி, விருப்பினால் 

'கண்ணும், நுதலும், கவுளும், கவவியார்க்கு,

ஒண்மை எதிரிய அம் கையும், தண் எனச்

செய்வன சிறப்பின் சிறப்புச் செய்து, இவ் இரா

எம்மொடு சேர்ந்து சென்றீவாயால்; செம்மால்!

நலம் புதிது உண்டு உள்ளா நாண் இலி செய்த

புலம்பு எலாம் தீர்க்குவேம்மன், என்று இரங்குபு,

வேற்று ஆனாத் தாயர் எதிர்கொள்ள, மாற்றாத

கள்வனால் தங்கியது, அல்லால், கதியாதி,

ஒள் இழாய்! யான் தீது இலேன்;

 

எள்ளலான், அம் மென் பணை தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு 

எம் இல் வருதியோ? எல்லா! நீ; தன் மெய்க் கண்

அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி,

முந்தை இருந்து மகன் செய்த நோய்த் தலை,

'வெந்த புண் வேல் எறிந்தற்றால்' வடுவொடு

தந்தையும் வந்து நிலை.

 

84 உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்

நறு வடி ஆர் இற்றவை போல் அழியக்,

கரந்து யான் அரக்கவும், கை நில்லா வீங்கிச்,

சுரந்த என் மெல் முலைப் பால் பழுது ஆக - நீ

நல் வாயில் போத்தந்த பொழுதினான், 'எல்லா!

கடவுள் கடி நகர் தோறும் இவனை

வலம் கொளீஇ வா' எனச், சென்றாய், விலங்கினை 

ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள்

யார் இல் தவிர்ந்தனை? கூறு;

 

நீருள் அடை மறை ஆய் இதழ்ப் போது போல் கொண்ட 

குடை நிழல் தோன்றும் நின் செம்மலைக் காணூஉ 

'இவன் மன்ற, யான் நோவ உள்ளம் கொண்டு, உள்ளா 

மகன் அல்லான் பெற்ற மகன்' என்று அகல் நகர்

வாயில் வரை இறந்து போத்தந்து, தாயர்

தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன்; மற்று, அவர்

தம் தம் கலங்களுள், 'கையுறை' என்று இவற்கு,

ஒத்தவை ஆராய்ந்து, அணிந்தார்; 'பிறன் பெண்டிர் 

ஈத்தவை கொள்வான் ஆம், இ·து ஒத்தன்; சீத்தை! 

செறு தக்கான் மன்ற பெரிது';

 

சிறு பட்டி! ஏதிலார் கை, எம்மை எள்ளுபு நீ தொட்ட

மோதிரம் யாவோ? யாம் காண்கு;

அவற்றுள், நறா இதழ் கண்டன்ன செவ் விரற்கு ஏற்பச் 

சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்;

குறி அறிந்தேன்; 'காமன் கொடி எழுதி, என்றும்

செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில்

பொறி ஒற்றிக் கொண்டு ஆள்வல்' என்பது தன்னை 

அறீஇய செய்த வினை;

 

அன்னையோ? இ·து ஒன்று;

முந்தைய கண்டும் எழுகல்லாத என் முன்னர்

வெந்த புண் வேல் எறிந்தற்றா, இ·து ஒன்று;

தந்தை இறைத் தொடி மற்று இவன் தன் கைக் கண் 

தந்தார் யார், எல்லாஅ! இது?

 

இ·து ஒன்று, என் ஒத்துக் காண்க, பிறரும் இவற்கு என்னும்

தன் நலம் பாடுவி, தந்தாளா? நின்னை,

இது தொடுக என்றவர் யார்?

 

அஞ்சாதி; நீயும் தவறு இலை; நின் கை இது தந்த 

பூ எழில் உண் கண் அவளும் தவறு இலள்!

வேனில் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்?

மேல் நின்றும் எள்ளி, இது இவன் கைத் தந்தாள் - 

தான் யாரோ? என்று வினவிய, நோய்ப்பாலேன்

யானே தவறு உடையேன்!

 

85 காலவை, சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு 

பொடி அழல் புறம் தந்த செய்வுறு கிண்கிணி;

உடுத்தவை கைவினைப் பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல் 

மை இல் செந் துகிர்க் கோவை அவற்றின் மேல்

தைஇய பூந் துகில் ஐது கழல் ஒரு திரை

கையதை, அலவன் கண் பெற அடங்கச் சுற்றிய

பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி;

 

பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும்

செறியக் கட்டி ஈர் இடைத் தாழ்ந்த

பெய் புல மூதாய்ப் புகர் நிறத் துகிரின்

மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண்;

 

சூடின, இரும் கடல் முத்தமும் பல் மணி பிறவும் ஆங்கு 

ஒருங்கு உடன் கோத்த உருள் அமை மூக் காழ் மேல் 

சுரும்பு ஆர் கண்ணிக்குச் சூழ் நூல் ஆக

அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாணச்

சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை;

 

ஆங்க, அவ்வும் பிறவும் அணிக்கு அணி ஆக நின் 

செல்வு உறு திண் தேர் கொடும் சினை கைப் பற்றிப் 

பைபயத் தூங்கும் நின் மெல் விரல் சீறடி

நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ

செம்மால் நின் பால் உண்ணிய;

 

பொய் போர்த்துப், பாண் தலை இட்ட பல வல் புலையனைத்

தூண்டிலா விட்டுத் துடக்கித் தான் வேண்டியார்

நெஞ்சம் பிணித்தல் தொழிலாத் திரிதரும்

நுந்தை பால் உண்டி சில;

 

நுந்தை வாய், மாயச் சூள் தேறி மயங்கு நோய் கைமிகப்

பூ எழில் உண் கண் பனி பரப்பக் கண் படா

ஞாயர் பால் உண்டி சில;

 

அன்னையோ, யாம் எம் மகனைப் பாராட்ட கதுமெனத் 

தாம் வந்தார் தம் பால் அவரொடு தம்மை

வருக என்றார் யார் கொல்லோ ஈங்கு;

 

என் பாலல், பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என் 

பாராட்டைப் பாலோ சில;

 

செரு குறித்தாரை உவகைக் கூத்தாட்டும்

வரிசைப் பெரு பாட்டொடு எல்லாம் பருகீத்தை

தண்டுவென் ஞாயர் மாட்டைப் பால்.

 

86 மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்,

கை புனை முக் காழ் கயம் தலைத் தாழப்,

பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட

நலம் கிளர் ஒள் பூண் நனைத்தரும் அவ் வாய்

கலந்து கண் நோக்கு ஆரக், காண்பு இன் துகிர் மேல் 86-5

பொலம் புனை செம் பாகம் போர் கொண்டு இமைப்பக்,

கடி அரணம் பாயா நின் கை புனை வேழம்,

தொடியோர் மணலின் உழக்கி, அடி ஆர்ந்த

தேரை வாய்க் கிண்கிணி ஆர்ப்ப, இயலும் என்

போர் யானை, வந்தீக, ஈங்கு;

 

செம்மால்! வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும், நுந்தை

நிலைப் பாலுள் ஒத்த குறி என் வாய்க் கேட்டு ஒத்தி;

 

கன்றிய தெவ்வர்க் கடந்து களம் கொள்ளும்

வென்றி மாட்டு ஒத்தி; பெரும! - மற்று ஒவ்வாதி,

'ஒன்றினேம் யாம்' என்று உணர்ந்தாரை, நுந்தை போல்,

மென் தோள் நெகிழ விடல்;

 

பால் கொளல் இன்றிப், பகல் போல் முறைக்கு ஒல்கா 

கோல் செம்மை ஒத்தி, பெரும! - மற்று ஒவ்வாதி

கால் பொரு பூவின் கவின் வாட, நுந்தை போல்,

சால்பு ஆய்ந்தார் சாய விடல்;

 

வீதல் அறியா விழுப் பொருள் நச்சியார்க்கு

ஈதல் மாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி,

மாதர் மெல் நோக்கின் மகளிரை, நுந்தை போல். 86-23

நோய் கூர நோக்காய் விடல்;

 

ஆங்க,

திறன் அல்ல யாம் கழற, யாரை நகும், இம்

மகன் அல்லான் பெற்ற மகன்;

 

மறை நின்று, தாம் மன்ற வந்தீத்தனர்;

'ஆய் இழாய்! தாவாத எனக்குத் தவறு உண்டோ காவாது ஈங்கு 

ஈத்தை, இவனை யாம் கோடற்குச், சீத்தை, யாம்

கன்றி அதனைக் கடியவும், கை நீவிக்,

குன்ற இறுவரைக் கோண்மா இவர்ந்தாங்குத்,

தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் - அறன் இல்லா 

அன்பு இலி பெற்ற மகன்.

 

87 ஒரூஉ நீ; எம் கூந்தல் கொள்ளல் - யாம் நின்னை 

வெரூஉதும், காணும் கடை;

 

தெரி இழாய்! செய் தவறு இல் வழி, யாங்குச் சினவுவாய், 

மெய் பிரிந்தன்னவர் மாட்டு?

 

ஏடா! நினக்குத் தவறு உண்டோ? நீ வீடு பெற்றாய்; 

இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி;

நிலைப் பால் அறியினும், நின் நொந்து நின்னைப் 

புலப்பார் உடையர் தவறு;

 

அணைத் தோளாய்! தீயாரைப் போலத் திறன் இன்று உடற்றுதி; 

காயும் தவறு இலேன் யான்;

 

மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது

நாண் இலன் ஆயின், நலிதந்து அவன் வயின்

ஊடுதல் என்னோ, இனி?

 

'இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம்' என்னும்

தகையது காண்டைப்பாய், நெஞ்சே! பனி ஆனாப் 

பாடு இல் கண் பாயல் கொள!

 

88 ஒரூஉக்! கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற 

முடி உதிர் பூந் தாது மொய்ம்பின ஆகத்,

தொடிய, எமக்கு நீ யாரை? பெரியார்க்கு

அடியரோ, ஆற்றாதவர்?

 

கடியர் தமக்கு, யார் சொல்லத் தக்கார் மாற்று?

 

வினை கெட்டு, வாய் அல்லா வெண்மை உரையாது, கூறு நின் 

மாயம், மருள்வார் அகத்து;

 

ஆய் இழாய்! நின் கண் பெறின் அல்லால், இன் உயிர் வாழ்கல்லா 

என் கண் எவனோ, தவறு? 

 

இ·து ஒத்தன்! புள்ளிக் களவன் புனல் சேர் பொதுக்கம் போல் 

வள் உகிர் போழ்ந்தனவும், வாள் எயிறு உற்றனவும்,

ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும், நல்லார்

சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பும்,

தவறு ஆதல் சாலாவோ? கூறு;

 

அது தக்கது; வேற்றுமை என் கண்ணோ ஓராதி; தீது இன்மை 

தேற்றக் கண்டீயாய்; தெளிக்கு;

 

இனி தேற்றேம் யாம்;

தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார்

தார் மயங்கி வந்த தவறு அஞ்சிப், போர் மயங்கி,

நீ உறும் பொய்ச் சூள் அணங்கு ஆகின், மற்று இனி

யார் மேல் விளியுமோ? கூறு.

 

89 யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர் 

ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து; எம் மனை

வாரல் நீ; வந்தாங்கே மாறு;

 

என் இவை; ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று 

போர் எதிர்ந்தற்றாப் புலவல்; நீ கூறின், என்

ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது?

 

ஏஎ! தெளிந்தேம் யாம்; காயாதி - எல்லாம் வல் - எல்லா! 

பெரும் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு, 

வருந்தல் நின் வஞ்சம் உரைத்து;

 

மருந்து இன்று - மன்னவன் சீறின், தவறு உண்டோ? நீ நயந்த 

இன் நகை! தீதோ இலேன்;

 

மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இப் போர்

புறம் சாய்ந்து காண்டைப்பாய் - நெஞ்சே! உறழ்ந்து இவனைப் 

பொய்ப்ப விடேஎம் என நெருங்கின், தப்பினேன்

என்று அடி சேர்தலும் உண்டு.

 

90 கண்டேன், நின் மாயம் களவு ஆதல்; பொய்ந் நகா,

மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய நின்

பெண்டிர் உளர் மன்னோ, ஈங்கு?

 

ஒண் தொடி! நீ கண்டது எவனோ தவறு?

 

கண்டது நோயும் வடுவும் கரந்து, மகிழ் செருக்கிப்,

பாடு பெயல் நின்ற பானாள் இரவில் -

தொடி பொலி தோளும், முலையும், கதுப்பும்,

வடிவு ஆர் குழையும், இழையும், பொறையா

ஒடிவது போலும் நுசுப்போடு, அடி தளரா

ஆராக் கவவின் ஒருத்தி வந்து - அல்கல் தன்

சீர் ஆர் ஞெகிழம் சிலம்பச், சிவந்து, நின்

போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ?

ஆய் இழை ஆர்க்கும் ஒலி கேளா, அவ் எதிர்

தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ?

மாறாள் சினைஇ, அவள் ஆங்கே, நின் மார்பில்

நாறு இணப் பைந் தார் பரிந்தது அமையுமோ?

'தேறு நீ; தீயேன் அலேன்' என்று மற்று அவள்

சீறு அடி தோயா இறுத்தது அமையுமோ?

கூறு இனிக், காயேமா யாம்;

 

தேறின், பிறவும் தவறு இலேன் யான்;

அல்கல் கனவு கொல் நீ கண்டது?

 

கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள்

கண்ட கனவு எனக், காணாது, மாறு உற்றுப் -

பண்டைய அல்ல, நின் பொய்ச் சூள், நினக்கு; எல்லா! -

நின்றாய், நின் புக்கில் பல;

 

மென் தோளாய்! நல்கு, நின் நல் எழில் உண்கு;

 

ஏடா! குறை உற்று நீ எம் உரையல் - நின் தீமை

பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ, யாழ

நிறை ஆற்றா நெஞ்சு உடையேம்?

 

91 அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம்,

புரி நெகிழ் முல்லை, நறவோடு அமைந்த

தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார்

பொரு முரண் சீறச் சிதைந்து, நெருநையின்

இன்று நன்று, என்னை அணி;

 

அணை மென் தோளாய்! செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்கு எவன்,

ஐயத்தால்? என்னை கதியாதி; தீது இன்மை

தெய்வத்தான் - கண்டீ தெளிக்கு;

 

மற்று அது, அறிவல், யான் நின் சூள்; அனைத்து ஆக நல்லார் 

செறி தொடி உற்ற வடுவும், குறி பொய்த்தார்

கூர் உகிர் சாடிய மார்பும், குழைந்த நின்

தாரும், ததர் பட்ட சாந்தமும், சேரி

அரி மதர் உண் கண்ணார், ஆராக் கவவின்

பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு, யானும்

செரு ஒழிந்தேன்; சென்றீ, இனி;

 

தெரி இழாய்! தேற்றாய் சிவந்தனை - காண்பாய், நீ - தீது இன்மை 

ஆற்றின் நிறுப்பல் பணிந்து;

 

அன்னதேல், ஆற்றல் காண்;

வேறுபட்டாங்கே கலுழ்தி; அகப்படின்,

மாறுபட்டாங்கே மயங்குதி; யாது ஒன்றும்

கூறி உணர்த்தலும் வேண்டாது, மற்று நீ

மாணா செயினும், மறுத்து, ஆங்கே, நின் வயின்

காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின், என் உற்றாய் 

பேணாய் நீ பெட்பச் செயல்?

 

92 புன வளர் பூங் கொடி அன்னாய்! கழியக்

கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே!

முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி,

மயங்கி, மற்று ஆண்டு ஆண்டுச் சேறலும் செல்லாது, 

உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும்,

அரிதின் அறம் செய்யா, ஆன்றோர் உலகும்,

உரிதின் ஒருதலை எய்தலும் - வீழ்வார்ப்

பிரிதலும், ஆங்கே புணர்தலும், தம்மில்

தருதல் தகையாதால் மற்று;

 

நனவினால் போலும், நறு நுதால்! அல்கல்

கனவினால் சென்றேன் - கலி கெழு கூடல்

வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையைக்

கரை அணி காவின் அகத்து;

 

உரை, இனி - தண்டாத் தீம் சாயல் நெடுந்தகாய்! அவ் வழிக் 

கண்டது எவன் மற்று நீ?

 

கண்டது - உடன் அமர் ஆயமொடு, அவ் விசும்பு ஆயும் 

மட நடை மா இனம், அந்தி அமையத்து,

இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால்,

இறைகொண்டு இருந்தன்ன - நல்லாரைக் கண்டேன்; 

 

துறை கொண்டு உயர் மணல் மேல் ஒன்றி நிறைவதை 

ஓர்த்தது இசைக்கும் பறை போல், நின் நெஞ்சத்து 

வேட்டதே கண்டாய் கனா;

 

கேட்டை, விரையல் நீ; மற்று வெகுள்வாய்! - உரை - ஆண்டு 

இது ஆகும், இன் நகை நல்லாய்! பொது ஆகத்,

தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர்

பூங் கொடி வாங்கி, இணர் கொய்ய, ஆங்கே

சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத

முனை அரண் போல உடைந்தன்று, அக் காவில்

துனை வரி வண்டின் இனம்;

 

மற்று ஆங்கே, நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அவ் வழிக் 

காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச, 

அவருள்,

ஒருத்தி, செயல் அமை கோதை நகை,

ஒருத்தி, இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப, 

ஒருத்தி, தெரி முத்தம் சேர்ந்த திலகம்,

ஒருத்தி, அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க, 

ஒருத்தி, வரி ஆர் அகல் அல்குல் காழகம்,

ஒருத்தி, அரி ஆர் ஞெகிழத்து அணி சுறாத் தட்ப, 

ஒருத்தி, புலவியால் புல்லாது இருந்தாள், அலவுற்று 

வண்டு இனம் ஆர்ப்ப, இடை விட்டுக் காதலன்

தண் தார் அகலம் புகும்;

 

ஒருத்தி, அடி தாழ் கலிங்கம் தழீஇ, ஒரு கை

முடி தாழ் இரும் கூந்தல் பற்றிப், பூ வேய்ந்த

கடி கயம் பாயும், அலந்து;

 

ஒருத்தி, கணம் கொண்டு அவை மூசக், கை ஆற்றாள், பூண்ட

மணம் கமழ் கோதை பரிபு கொண்டு, ஓச்சி

வணங்கு காழ் வங்கம் புகும்;

 

ஒருத்தி, இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள், 

பறந்தவை மூசக் கடிவாள், கடியும்

இடம் தேற்றாள் சோர்ந்தனள், கை;

 

ஆங்க, கடி காவில் கால் ஒற்ற, ஒல்கி ஒசியாக்

கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல்,

தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார் வண்டிற்கு 

வண்டலவர்; கண்டேன், யான்;

 

நின்னை நின் பெண்டிர் புலந்தனவும், நீ அவர்

முன் அடி ஒல்கி உணர்த்தினவும், பல் மாண்

கனவின் தலையிட்டு உரையல்; சினைஇ யான்

செய்வது இல் என்பதோ? கூறு;

 

பொய் கூறேன் - அன்ன வகையால் யான் கண்ட கனவு தான் 

நல் வாயாக் காண்டை - நறு நுதால்! பல் மாணும்

கூடிப் புணர்ந்தீர்! பிரியன்மின்; நீடிப்

பிரிந்தீர்! புணர் தம்மின், என்பன போல

அரும்பு அவிழ் பூஞ் சினை தோறும் இரும் குயில் 

ஆனாது அகவும் பொழுதினான், மேவர,

நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்

தேன் இமிர் காவில் புணர்ந்து இருந்து ஆடுமார்,

ஆனா விருப்போடு அணி அயர்ப, காமற்கு

வேனில் விருந்து எதிர்கொண்டு.

 

93 வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய,

தண்டாத் தீம் சாயல் பரத்தை, வியல் மார்ப!

பண்டு, இன்னை அல்லைமன்; ஈங்கு எல்லி வந்தீயக், 

கண்டது எவன்? மற்று உரை;

 

நன்றும், தடைஇய மென் தோளாய்! கேட்டீவாய் ஆயின் -

உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும்

கடவுளர் கண் தங்கினேன்;

 

சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர், நீ

கடவுண்மை கொண்டு ஒழுகுவார்;

அவருள், எக் கடவுள்? மற்று அக் கடவுளைச் செப்பீமன்;

முத்து ஏர் முறுவலாய் நாம் மணம் புக்கக் கால்

இப் போழ்து போழ்து என்று அது வாய்ப்பக் கூறிய 

அக் கடவுள், மற்று அக் கடவுள்; - அது ஒக்கும்

நாவுள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும்

மாயமோ; கைப்படுக்கப்பட்டாய், நீ; கண்டாரை

வாய் ஆக யாம் கூற வேட்டீவாய்! கேள் இனி;

 

பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்பப்,

பறி முறை நேர்ந்த நகார் ஆகக், கண்டார்க்கு

இறு முறை செய்யும் உருவொடு, நும் இல்,

செறி முறை வந்த கடவுளைக் கண்டாயோ?

 

நறும் தண் தகரமும் நானமும் நாறும்

நெறிந்த குரல் கூந்தல் நாள் அணிக்கு ஒப்ப,

நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு, மேல் நாள், நீ

பூப் பலி விட்ட கடவுளைக் கண்டாயோ?

 

ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச்

சூர் கொன்ற செவ்வேலான் பாடிப், பல நாளும்,

ஆராக் கனை காமம் குன்றத்து நின்னொடு

மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ?

 

கண்ட கடவுளர் தம் உள்ளும், நின்னை

வெறி கொள் வியல் மார்பு வேறு ஆகச் செய்து,

குறி கொளச் செய்தார் யார்? செப்பு; மற்று, யாரும்

சிறு வரைத் தங்கின் வெகுள்வர்; செறு தக்காய்!

தேறினேன்; சென்றீ; நீ செல்லா விடுவாயேல்,

நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய

நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும்

முட்டுப்பாடு ஆகலும் உண்டு.

 

94 என் நோற்றனை கொல்லோ? -

நீர் உள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல்

ஈங்கு உருச் சுருங்கி

இயலுவாய்! நின்னோடு உசாவுவேன்; நின்றீத்தை;

 

அன்னையோ! காண் தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான் 

ஆண்டலைக்கு ஈன்ற பறழ் மகனே! நீ எம்மை

'வேண்டுவல்' என்று விலக்கினை; நின் போல்வார் 

தீண்டப் பெறுபவோ மற்று?

 

மாண்ட, எறித்த படை போல் முடங்கி மடங்கி,

நெறித்துவிட்டன்ன நிறை ஏரால், என்னைப்

பொறுக்கல்லா நோய் செய்தாய்; பொறீஇ நிறுக்கல்லேன்; 

நீ நல்கின் உண்டு, என் உயிர்;

 

குறிப்புக் காண் - வல்லுப்பலகை எடுத்து நிறுத்தன்ன 

கல்லாக் குறள! கடும் பகல் வந்து எம்மை,

'இல்லத்து வா' என, மெய் கொளீஇ, எல்லா! நின்

பெண்டிர் உளர் மன்னோ? கூறு;

 

நல்லாய் கேள்! உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய

கொக்கு உரித்தன்ன கொடு மடாய்! நின்னை யான் 

புக்கு அகலம் புல்லின், நெஞ்சு ஊன்றும்; புறம் புல்லின் 

அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன்; அருளீமோ.

பக்கத்துப் புல்லச் சிறிது;

 

போ, சீத்தை! மக்கள் முரியே! நீ மாறு, இனித், தொக்க 

மரக் கோட்டம் சேர்ந்து எழுந்த பூங் கொடி போல, 

நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர், எம்மைப்,

புரப்பேம் என்பாரும் பலரால்; பரத்தை, என்

பக்கத்துப் புல்லீயாய் என்னுமால்; தொக்க

உழுந்தினும் துவ்வாக், குறு வட்டா! நின்னின்

இழிந்ததோ, கூனின் பிறப்பு? - கழிந்து ஆங்கே,

'யாம் வீழ்தும்' என்று தன் பின் செலவும், உற்றீயாக்

கூனி குழையும் குழைவு காண்;

 

யாமை எடுத்து நிறுத்தற்றால், தோள் இரண்டும் வீசி, 

யாம் வேண்டேம் என்று விலக்கவும், எம் வீழும்

காமர் நடக்கும் நடை காண் - கவர் கணைச்

சாமனார் தம் முன் செலவு காண்;

 

ஓஒ! காண், நம்முள் நகுதல் தொடீஇயர், நம்முள் நாம் 

உசாவுவம்; கோன் அடி தொட்டேன்;

 

ஆங்கு ஆக! சாயல் இன் மார்ப! அடங்கினேன்; ஏஎ! 

பேயும் பேயும் துள்ளல் உறும் எனக்

கோயில் உள் கண்டார் நகாமை வேண்டுவல்;

தண்டாத் தகடு உருவ! வேறு ஆகக் காவின் கீழ்ப் 

போதர்; அகடு ஆரப் புல்லி முயங்குவேம் -

துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை

முகடு காப்பு யாத்துவிட்டாங்கு.

 

95 நில், ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல் - எல்லா! நீ

நாறு இரும் கூந்தலார் இல் செல்வாய், இவ் வழி

ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே

மாறு; இனி நின் ஆங்கே நின், சே அடி சிவப்பச், 

செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த 

குறும்பூழ் போர் கண்டேம்; அனைத்தல்லது, யாதும் 

அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது;

 

குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன், நீ என்றும்; 

புதுவன ஈகை வளம் பாடிக், காலின்

பிரியாக் கவி கை புலையன் தன் யாழின்

இகுத்த செவி சாய்த்து, இனி இனிப் பட்டன

ஈகைப் போர் கண்டாயும் போறி; மெய் எண்ணின், 

தபுத்த புலர்வு இல புண்;

 

ஊரவர் கவ்வை உளைந்து ஈயாய், அல்கல் நின்

தாரின் வாய்க் கொண்டு முயங்கிப், பிடி மாண்டு,

போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டு, ஆடும் 

பார்வைப் போர் கண்டாயும் போறி; நின் தோள் மேலாம் 

ஈரம் ஆய் விட்டன புண்;

 

கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம் முழுதும் கையின் 

துடைத்து, நீ வேண்டினும் வெல்லாது கொண்டு, ஆடும் 

ஒட்டிய போர் கண்டாயும் போறி; முகம் தானே

கொட்டிக் கொடுக்கும் குறிப்பு;

 

ஆயின், ஆய் இழாய்! அன்னவை யான் ஆங்கு அறியாமை 

போற்றிய, நின் மெய் தொடுகு;

 

அன்னையோ! மெய்யைp பொய் என்று மயங்கிய, கை ஒன்று, 

அறிகல்லாய் போறி காண், நீ; 95-26

 

நல்லாய்! பொய் எல்லாம் ஏற்றிt, தவறு தலைப்பெய்து,

கையொடு கண்டாய்; பிழைத்தேன்; அருள் இனி;

 

அருளுகம் யாம்; யாரேம்; எல்லா! தெருள?

அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் - இன்னும்

விளித்து, நின் பாணனோடு ஆடி, அளித்தி -

விடலை நீ நீத்தலின், நோய் பெரிது ஏய்க்கும்;

நடலைப்பட்டு, எல்லாம் நின் பூழ்.

 

96 ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல, நின் வாய் சொல்;

பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்து ஆனா மைந்தினை; 

சாந்து அழி வேரை; சுவல் தாழ்ந்த கண்ணியை;

யாங்குச் சென்று, ஈங்கு வந்தீத்தந்தாய்? கேள், இனி;

 

ஏந்தி, எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்! 

குதிரை வழங்கி வருவல்;

 

அறிந்தேன், குதிரை தான்!

பால் பிரியா ஐங்கூந்தல் பல் மயிர்க் கொய் சுவல், 

மேல் விரித்து யாத்த சிகழிகைச் செவ் உளை,

நீல மணிக் கடிகை வல்லிகை, யாப்பின் கீழ்

ஞால் இயல் மெல் காதின் புல்லிகைச் சாமரை,

மத்திகைக் கண்ணுறை ஆகக் கவின் பெற்ற

உத்தி ஒரு காழ், நூல் உத்தரியத் திண் பிடி,

நேர் மணி நேர் முக் காழ்ப் பல் பல கண்டிகைத்,

தார் மணி பூண்ட தமனிய மேகலை,

நூபுரப் புட்டில், அடியொடு அமைத்து யாத்த

வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி, நீ,

காதலித்து ஊர்ந்த நின் காமக் குதிரையை,

ஆய் சுதை மாடத்து, அணி நிலா முற்றத்துள்,

ஆதி கொளீஇய, அசையினை ஆகுவை,

வாதுவன்; வாழிய நீ;

 

சேகா! கதிர் விரி வைகலில், கை வாரூஉக் கொண்ட

மதுரைப் பெரு முற்றம் போல, நின் மெய்க் கண்

குதிரையோ, வீறியது?

 

கூர் உகிர் மாண்ட குளம்பின் அது; நன்றே

கோரமே - வாழி! - குதிரை;

 

வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்தக்

குதிரை உடல் அணி போல, நின் மெய்க் கண்

குதிரையோ, கவ்வியது?

 

சீத்தை! பயம் இன்றி ஈங்குக் கடித்தது; நன்றே

வியமமே வாழி! - குதிரை;

 

மிக நன்று; இனி அறிந்தேன், இன்று நீ ஊர்ந்த குதிரை; 

பெரு மணம் பண்ணி, அறத்தினில் கொண்ட

பருமக் குதிரையோ அன்று; பெரும! நின்

ஏதில் பெரும் பாணன் தூது ஆட, ஆங்கே ஓர்

வாதத்தான் வந்த வளிக் குதிரை; ஆதி

உரு அழிக்கும் அக் குதிரை ஊரல்; நீ ஊரின், பரத்தை

பரியாக, வாதுவனாய், என்றும் மற்று அச்சார்த்

திரி, குதிரை ஏறிய செல்.

 

97 அன்னை; கடுஞ் சொல் அறியாதாய் போல, நீ

என்னைப் புலப்பது, ஒறுக்குவென் மன் யான் -

சிறுகாலை இற்கடை வந்து, குறி செய்த

அவ் வழி என்றும் யான் காணேன் திரிதர,

எவ் வழிப் பட்டாய் சமன் ஆக, இவ் எள்ளல்;

 

முத்து ஏர் முறுவலாய்! நம் வலைப் பட்டது ஓர்

புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன்; 

 

ஒக்கும்;

அவ் யானை, வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன்; 

அவ் யானை தான் சுண்ண நீறு ஆடி, நறு நறா நீர் உண்டு - 

ஒள் நுதல் யாத்த திலக அவிர் ஓடைத்,

தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டுத்,

தொய்யகம் தோட்டிக், குழை தாழ் வடி மணி,

உத்தி பொறித்த புனை பூண் பருமத்து -

முத்து ஏய்க்கும் வெண் பல் நகை திறந்து,

நல் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து,

தன் நலம் காட்டித், தகையினால், கால் தட்டி வீழ்க்கும்,

தொடர் தொடர் ஆக வலந்து, படர் செய்யும்

மென் தோள் தடக் கையின் வாங்கித், தன் கண்டார் 

நலம் கவளம் கொள்ளும் நகை முக வேழத்தை,

இன்று கண்டாய் போல், எவன் எம்மைப் பொய்ப்பது, நீ?

 

எல்லா! கெழீஇத், தொடி செறித்த தோள் இணை, தத்திக் 

தழீஇ கொண்டு ஊர்ந்தாயும் நீ;

 

குழீஇ, அவாவினால் தேம்புவார் இல் கடை ஆறா, 

உவா அணி ஊர்ந்தாயும் நீ;

 

மிகாஅது, சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண் கண் 

நீர்க்கு விட்டு, ஊர்ந்தாயும் நீ;

 

சார்ச் சார் நெறி தாழ் இரும் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் 97-28

சிறு பாகர் ஆக சிரற்றாது, மெல்ல,

விடாஅது நீ எம் இல் வந்தாய்; அவ் யானை

கடாஅம் படும் இடத்து ஓம்பு.

 

98 யாரை நீ எம் இல் புகுதர்வாய்? ஓரும்

புதுவ மலர் தேரும் வண்டே போல் - யாழ

வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய் -

மாட்டு மாட்டு ஓடி, மகளிர் தரத் தரப்,

பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம்

பாட்டு ஆதல் சான்ற நின் மாயப் பரத்தைமை -

காட்டிய வந்தமை கைப்படுத்தேன் - பண்டு எலாம் 

கேட்டும் அறிவேன்மன், யான்;

 

தெரி கோதை அம் நல்லாய்! தேறீயல் வேண்டும் -

பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை

வரு புனல் ஆடத் தவிர்ந்தேன்; பெரிது என்னைச் 

செய்யா மொழிவது எவன்?

 

ஓஒ! புனல் ஆடினாய் எனவும் கேட்டேன்; புனல் ஆங்கே 

நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக,

மாண் எழில் உண் கண், பிறழும் கயல் ஆகக்,

கார் மலர் வேய்ந்த கமழ் பூம் பரப்பு ஆக

நாணுச் சிறை அழித்து நன்பகல் வந்த அவ்

யாணர் புதுப் புனல் ஆடினாய், முன் மாலைப்

பாணன் புணை ஆகப் புக்கு;

 

ஆனாது, அளித்து அமர் காதலோடு அப் புனல் ஆடி, 

வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சிக்,

குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன்; குளித்தாங்கே,

போர்த்த சினத்தான் புருவத் திரை இடா,

ஆர்க்கும் ஞெகிழத்தான் நன் நீர் நடை தட்பச்

சீர்த் தக வந்த புதுப் புனல் நின்னைக் கொண்டு

ஈர்த்து உய்ப்பக் கண்டார் உளர்;

 

ஈர்த்தது, உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்கப், 

புரை தீர் புதுப் புனல் வெள்ளத்தின் இன்னும்

கரை கண்டதூ உம் இலை;

 

நிரை தொடீஇ! பொய்யா வாள் தானைப், புனை கழல் கால் தென்னவன் 

வையைப் புதுப் புனல் ஆடத் தவிர்ந்ததைத்

தெய்வத்தின் தேற்றித் தெளிப்பேன்; பெரிது என்னைச்

செய்யா மொழிவது எவன்;

 

மெய்யதை, மல்கு மலர் வேய்ந்த மாயப் புதுப் புனல் 

பல் காலும் ஆடிய செல்வுழி, ஒல்கிக்

களைஞரும் இல் வழிக் கால் ஆழ்ந்து தேரோடு

இள மணலுள் படல் ஓம்பு - முளை நேர்

முறுவலார்க்கு ஓர் நகை செய்து.

 

99 நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும், அவை எடுத்து

அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்

திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது,

குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து 

மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் 

பிழையாது வருதல் நின் செம்மையின் தர, வாய்ந்த 

இழை அணி கொடித் திண் தேர் இன மணி யானையாய்!

 

அறன் நிழல் எனக் கொண்டாய், ஆய் குடை; அக் குடை 

புற நிழல் கீழ்ப் பட்டாளோ, இவள்? இவள் காண்டிகா-

பிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்பு உற்றாளை! 

 

பொய்யாமை நுவலும் நின் செங்கோல்; அச் செங்கோலின்

செய் தொழில் கீழ்ப் பட்டாளோ, இவள்? இவள் காண்டிகா- 

காம நோய் கடைக் கூட்ட வாழும் நாள் முனிந்தாளை! 

 

ஏமம் என்று இரங்கும், நின் எறி முரசம்; அம் முரசின்

ஏமத்து இகந்தாளோ, இவள்? இவள் காண்டிகா-

வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை! 

ஆங்கு;

நெடிது சேண் இகந்தவை காணினும் தான் உற்ற

வடுக் காட்டக், கண் காணாதற்று ஆக, என் தோழி 

தொடி கொட்ப நீத்த கொடுமையைக்

கடிது என உணராமை கடிந்ததோ, நினக்கே?

 

100 ஈண்டு நீர் மிசைத் தோன்றி இருள் சீக்கும் சுடரே போல், 

வேண்டாதார் நெஞ்சு உட்க, வெரு வந்த கொடுமையும், 

நீண்டு தோன்று உயர் குடை நிழல் என சேர்ந்தார்க்குக்

காண்தகு மதி என்னக் கதிர் விடு தண்மையும்,

மாண்ட நின் ஒழுக்கத்தால் மறு இன்றி, வியன் ஞாலத்து

யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்!

 

'ஐயம் தீர்ந்து யார் கண்ணும் அரும் தவ முதல்வன் போல்

பொய் கூறாய்' என நின்னைப் புகழ்வது கெடாதோ தான்-

நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள்

பல் இதழ் மலர் உண் கண் பனி மல்கக் காணும் கால்! 

 

'சுரந்த வான் பொழிந்தற்றாச் சூழ நின்று யாவர்க்கும்

இரந்தது நசை வாட்டாய்' என்பது கெடாதோ தான்- 

கலங்கு அஞர் உற்று, நின் கமழ் மார்பு நசைஇயாள் 

இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணும் கால்!

 

'உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல், 

முறை செய்தி' என நின்னை மொழிவது கெடாதோ தான்- 

அழி படர் வருத்த நின் அளி வேண்டிக் கலங்கியாள் 

பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணும் கால்!

ஆங்கு; 

தொல் நலம் இழந்தோள், நீ துணை எனப் புணர்ந்தவள்;

இன் உறல் வியன் மார்ப! 'இனையையால் கொடிது' என

நின்னை யான் கழறுதல் வேண்டுமோ,

என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே! 

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.