|
||||||||
மோர் மிளகாய் (more chilli) |
||||||||
தேவையானவை : பச்சை மிளகாய் - 1/2 கி தயிர் - 2 லி எலுமிச்சை பழம் - 1/2 மூடி செய்முறை : 1.நீளமான பச்சை மிளகாய்களை நன்கு சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டவும்.அதை புளித்த தயிரில் ஊற வைக்கவும்.மேலும் அதனுடன் எலுமிச்சம் பழத்தை பிழியவும்,உப்பு சேர்த்து கிளறவும்.இந்த கலவையை 24 மணி நேரம் ஊற வைக்கவும். 2.இந்த மிளகாய்களை எடுத்து, நல்ல வெயிலில் ஒரு நாள் முழுதும் காய வைக்கவும்.மறுநாள் முழுதும் முன்பு உபயோகித்த தயிரில் 24 மணி நேரம் ஊற வைக்கவும்.அதற்கும் அடுத்த நாள் மிளகாய்களை நல்ல வெயிலில் காய விடவும்.தயிர் முழுவதும் வற்றும் வரை இந்த மிளகாயை ஊறவைக்கவும்.இந்த கலவையை வெயிலில் மட்டும் இன்னும் 6 தினங்களுக்கு காய விடவும். |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|