LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

அன்னையர் தினம் - தாய்மை - வித்யாசாகர்

சொட்டுச் சொட்டாய் உறிஞ்சும் பாலில்

இனிக்கிறது தாய்மை;

விட்டுவந்த முதியோரில்லத்தில்தான்

வலிக்கிறது தாய்மை!

 

கற்றதில், கண்டதில், வாழ்ந்ததில் 

மெத்த உயர்ந்தது தாய்மை,

சுற்றத்தில், பக்கத்தில், வீட்டில் 

இன்றும் மனதால் அழுகிறது தாய்மை!

 

அப்பா அடித்தால் ஒளிய முந்தானை

ஆசிரியர் அடித்தால் வடியக் கண்ணீராய்த் தாய்மை,

அம்மாவிற்கே கோபம் வந்தாலும் - அதையும் 

தனக்குள்ளேயே செரித்துக்கொள்ளும் தாய்மை!

 

மகனுக்கு கோபமென்று 

மனதுக்குள் நோகும் தாய்மை,

மகளுக்கு வலிக்குமோன்னு பேசாமல்

மனதுக்குள் புழுங்கும் தாய்மை!

 

மெத்தையில், மண்படுக்கையில், முட்களின்

மீதுவிழுந்தாலும்; பிள்ளைகளுக்குக் குத்தாதத் தாய்மை,

முதுமையில், இயலாமையில், பொறுமையின்மையில்

பிள்ளைகளால் குத்தப்படும் தாய்மை!

 

இரத்தத்துள் தாய்ப்பாலாய்

உணர்வுள் தாய்ப்பாலாய்

பேச்சில் தாய்ப்பாலாய் 

சுடாது வேகிறது தாய்மை!

 

இன்னும் மதிக்கவேண்டி 

இன்னும் அணைக்கவேண்டி 

இன்னும் அன்பு வேண்டி 

இன்னும் புகைப்படத்தில்தான் சிரிக்கிறது தாய்மை!

 

எச்சிலிலூறி 

முத்தத்தில் நனைந்து

நம்பிக்கையில்

நமைப் பெற்றது தாய்மை,

 

ஒரு சொல்லில்

ஒரு பார்வையில் 

ஒரு அருகாமைப் பொழுதுள் தான் 

இன்று உயிர்த்துக்கிடக்கிறது தாய்மை; 

 

தாய்மை

நமை தாலாட்டுவதற்கு மட்டுமல்ல

நாம் தாலாட்டவும்தான்!!

 

-வித்யாசாகர்

by Swathi   on 09 May 2015  0 Comments
Tags: அன்னையர் தினம்   Mothers Day   Annaiyar Dhinam   Amma Day   அம்மா தினம்        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.