LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழகத்தில் வாகன ஓட்டிகள் இனி ஒரிஜினல் சான்றுகள் கொண்டு போக வேண்டாம்!

தமிழகத்தில் வாகன ஓட்டிகள் இனி ஒரிஜினல் சான்றுகள் கொண்டு போக வேண்டியதில்லை. மின்னணு சான்றுகள் இருந்தால் போதுமானது.

இந்தியாவில் இரு, நான்கு சக்கரம் என எந்த வகையிலான வாகனங்களை ஓட்டும்போதும் அசல் சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். அதில் நிர்வாக பிரச்னை இருப்பதால் அதை தடுக்கும் விதமாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ‘டிஜிலாக்கர்’ ஆப்-ஐயும் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ‘எம்-பரிவாஹன்’ என்ற மொபைல் ஆப்-ஐயும் அறிமுகம் செய்தது.

இந்த ஆப்களின் மூலமாக வாகன ஓட்டிகள் தங்களது சான்றிதழ்களை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள முடியும். இந்த ஆப்பில் ஆவணங்கள், அசல் ஆவணங்களுக்கு இணையானது என்ற அங்கீகாரமும் உள்ளது.

இதையடுத்து வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட முறையில், தங்களது ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்திருந்தனர். ஆனால் போலீசார், அவ்வாறு மின்னணுவியல் முறையில் வைத்திருக்கும் ஆவணங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த விவகாரம் டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு புகாராக சென்றது. இதையடுத்து அவர் ‘டிஜிலாக்கர்’ மற்றும் ‘எம்-பரிவாஹன்’ முறையில் ஆவணங்களை வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அறிவித்ததை போலீசார் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துக்கு புகார் சென்றது.அதை ஆய்வு செய்த அமைச்சகம், அனைத்து டிஜிபி, போக்குவரத்து துறை செயலாளர்கள், நெடுஞ்சாலைத்துறை கமிஷனர்களுக்கு கடந்த, 19ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது.

அதில், ‘வாகன ஓட்டிகள் தங்களது லைசென்ஸ், இன்சூரன்ஸ், தகுதிச்சான்று, பர்மிட் ஆகியவற்றை ‘டிஜிலாக்கர்’ அல்லது ‘எம்-பரிவாஹன்’ முறையில் வைத்திருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ எனக்கூறியிருந்தது.

இதையடுத்து மின்னணு முறையில் சான்றிதழ்களை வைத்திருப்போரை அனுமதிக்க வேண்டும் என தமிழகத்திலுள்ள அனைத்து போலீசாருக்கும், அத்துறையின் உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர்.

அதேபோல் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குழப்பம் தீர்ந்தது. தற்போது மின்னணுமுறையில் ஆவணங்களை வைத்திருப்போரை போலீசார் அனுமதித்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

by Mani Bharathi   on 26 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.