|
||||||||
மௌலிவாக்க சமாதிகள்-பிரணவன் |
||||||||
கற்பனை எல்லாம் வடிவங்களாக்கி
கடல் மணலில் வீடு கட்டியது
குழந்தை
புதரிடுக்கில் புகுந்து
ஒரு செடியை கொண்டுவந்து நட்டியது
வீட்டுக்கு ஒரு
மரம் வளர்க்க வேண்டும் என்றது
கழிப்பறை கட்டவும் மறக்கவில்லை
சுத்தத்தை நோக்கி ஒரு
மேலும் ஒரு அடி என்றது
யாரோ ஒரு சிறுவனோ சிறுமியோ
கைவிட்டிருந்த மணல்வீட்டை
அபகரிக்கவோ ஆக்கிரமிக்கவோ விரும்பவில்லை
தனது எல்லைகளை தானே சுறுக்கிக்கொண்டது
தடுமாறிவந்த சவாரிக்குதிரையொன்று
அவள் கனவு இல்லத்தை கலைத்துவிட்டுப்போக
இரண்டுநாளாய் அடங்கவில்லை
அழுகையும் கதறலும்
தன் கையிருப்பையும் கனவுகளையும் புதைத்த
காங்கிரீட் சமாதியாய்
அந்த மௌலிவாக்க வளாகத்தை
நித்தம் நித்தம்
ஏக்கமாய் கடக்கும் அவள் அப்பனால்
வெளிப்படையாய் முடியவில்லை
அது |
||||||||
by Pranavan on 03 Oct 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|