LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

மௌலிவாக்க சமாதிகள்-பிரணவன்

கற்பனை எல்லாம் வடிவங்களாக்கி

 

கடல் மணலில் வீடு கட்டியது

 

குழந்தை

 

புதரிடுக்கில் புகுந்து

 

ஒரு செடியை கொண்டுவந்து  நட்டியது

 

வீட்டுக்கு ஒரு

 

மரம் வளர்க்க வேண்டும் என்றது

 

கழிப்பறை கட்டவும் மறக்கவில்லை

 

சுத்தத்தை நோக்கி ஒரு

 

மேலும் ஒரு அடி என்றது

 

யாரோ ஒரு சிறுவனோ சிறுமியோ

 

கைவிட்டிருந்த மணல்வீட்டை

 

அபகரிக்கவோ ஆக்கிரமிக்கவோ விரும்பவில்லை

 

தனது எல்லைகளை தானே சுறுக்கிக்கொண்டது

 

தடுமாறிவந்த சவாரிக்குதிரையொன்று

 

அவள் கனவு இல்லத்தை கலைத்துவிட்டுப்போக

 

இரண்டுநாளாய் அடங்கவில்லை

 

அழுகையும் கதறலும்

 

தன் கையிருப்பையும் கனவுகளையும் புதைத்த

 

காங்கிரீட் சமாதியாய்

 

அந்த மௌலிவாக்க வளாகத்தை

 

நித்தம் நித்தம்

 

ஏக்கமாய் கடக்கும் அவள் அப்பனால்

 

வெளிப்படையாய் முடியவில்லை

 

அது

by Pranavan   on 03 Oct 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.