குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க அரசு "விசா' வழங்கக் கூடாது என இந்திய எம்.பி.,க்கள் அனுப்பிய கடிதம் உண்மை தான் என்று அமெரிக்க தடய அறிவியல் வல்லுனர்கள் அறிக்கை அளித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க தடய அறிவியல் வல்லுனர்கள், கூறியிருப்பதாவது, கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள, எம்.பி.,க்கள் தெளிவான மனநிலையில், நிதானமாக பெயரை எழுதி கையெழுத்திட்டுள்ளனர். இதில் போலி என்பதற்கே இடமில்லை; எம்.பி.,க்கள் கையெழுத்திட்டது உண்மை தான் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, கடிதத்தில் கையெழுத்து போடவில்லை என கூறிய மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர், சீதாராம் யெச்சூரி,இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி., அச்சுதன், தி.மு.க.,வின் கே.பி.ராமலிங்கம் எம்.பிக்களின் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
|