LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய நாவலுக்கு புதுமைப்பித்தன் இலக்கிய விருது

 வந்தவாசி. ஜன.31. எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில் ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் சிறந்த  நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் 2017-ஆம் ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் இலக்கிய விருது’க்கு வந்தவாசி அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ள டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., எழுதிய ‘வடகரை - ஒரு வம்சத்தின் வரலாறு’ நாவல் தேர்வாகி, விருதும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இவ்விழா எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பேரா. தி.பொ.கணேசன் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவனரும் வேந்தருமான பாரிவேந்தர் தலைமையேற்றார்.

விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.என்.பாஷா, ‘வடகரை - ஒரு வம்சத்தின் வரலாறு’ நாவலை எழுதிய  டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப.,-வுக்கு பரிசுத் தொகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை வழங்கி கெளரவித்தார். பாராட்டுக் கேடயத்தை

அமெரிக்க ஹார்வர்டு தமிழ் இருக்கை ஆட்சிக்குழு இயக்குநர் ஆறுமுகம் முருகையா வழங்கினார்.

நூலை வெளியிட்ட அகநி வெளியீட்டிற்கான ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையையும், பாராட்டுக் கேடயத்தையும் அகநி பதிப்பகத்தைச் சேர்ந்த மு.வெ.கவின்மொழி
பெற்றுக் கொண்டார்.

by Swathi   on 02 Feb 2018  0 Comments
Tags: புதுமைப்பித்தன் இலக்கிய விருது   மு.ராஜேந்திரன்   Mu Rajendran   2018 Puthumaipithan Literature Award           
 தொடர்புடையவை-Related Articles
டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய நாவலுக்கு புதுமைப்பித்தன் இலக்கிய விருது டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய நாவலுக்கு புதுமைப்பித்தன் இலக்கிய விருது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.