LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

முகம் கொள்

இருள் பாய் சுருள்கின்றது
வேறெங்கோ விரிவதற்காய்.

நங்கூரம் தூக்குகின்றது
இராமானுஜம் கப்பல்.

இன்னமும் அணையாமல்
இராமேஸ்வரம் விளக்கு.

ஆழிக்குமரனும் நீந்திய
பாக்கு நீரிணை

சொற்பக் கடல்தான்
அப்பால் விரியும்
மகா சமுத்திரமாய்
விழிநீர் பெருக்குடனும்....

ஆழ்கடல் போர் முடித்து
அணி குலைந்து திரும்பும்
கடற்புரவிகள்.

கணக்கும் காயமும்
கரையினில் தொ஢யுமோ?

நானுமாய் வலை வீசிய
கடலிடம் ஏது?
கலைகள்தாம் எங்கே?

எனதரும் தோழர்
ஏலேலோ பாடகரை
உட்கொண்ட கடல்.

அடேய் மைக்கல்....
எதையெல்லாம் நான்....

கடுகின் காரம் நீ.
புரண்டெழும் அலைகளில்
எற்றுண்ணும் நீர்த்திவலைகள்

காற்று காவி வரும்.
கண்கள் கா஢க்கும்
அழுது விடுவேனோ?

சூரியன் எழுமுன்னால்
கரை கடந்தாயிற்று
நேசக் கடல் தாண்ட....

காற்றும் கடலுமாய்
தொடுத்த போரில்
அழிந்து போன கரையும்,
அழிந்த கரைமேல்
சவுக்கு மரத் தோப்பும்
கோட்டோ வியமென
மங்கித் தொலைவுறும்.

என்னைச் சூழவும்
நீலம் மிஞ்சும்.


2.

கனவுகள் மொட்டவிழும்
பயமறியாப் பருவம்.

முகில் பற்றைக் காட்டுக்குள்
பின்னிலவு புதைந்திருக்கும்.

அழிந்த கரை மேலே
கள்ளத் தோணியாலே
முன்னமொரு போதில் நான்.
அலைகளின் எக்களிப்பும்
காற்றின் பேச்சொலிப்பும்
ஈர மணற் சிலிர்ப்பின்
ஊதல் வெடடெப்பும்,
சவுக்கம் தோப்பசைவின்
கருநிழல் எச்சா஢ப்பும்,
கருங்கற் சுவர் ஒதுக்கால்
பவனி வரும் ராஜராஜன்
குதிரைக் குளம்பதிர்வும்....

நான் அப்போது அறிந்தேனா
இறங்கியது கரையல்ல
மானுடப் பேராழியென்று.

அச்சம் தவிரென்று
உச்சி முகர்ந்தும்,

செவிலியர் பண்புடன்
ஒத்தடம் தந்தும்

நெய்தல் மருதம்
குறிஞ்சி முல்லை
நிலங்கள் தோறும்
என்னுடன் நீங்கள்.

பாலை நிலத்திற்கும்
நீர் வார்க்கும் கனவுகள்.

மனங்களில் சுரக்கும்
சுனை நீர் ஊற்றுகள்.

நெஞ்சினில் நீர்மை
மிகுந்தனாலோ
நீர் வற்றிப் போயின
காவிரி, வைகை, பாலாறு....


3

பசியாறா வெறியுடன்
கடல்,
மெளன இருட்டாழம்
ஆர்ப்பா஢ப்பில் அமுங்கும்.

என்னையும் அழைக்கின்றதா?

வாலிப முறுக்கினில்
மிதப்புறும் வெண் நரையாய்
நுரை பொங்கும் அலைகள்.

அலை எங்கும் கரையேறும்,
மண்தனையும் மெல்லும்.

கடல்வாய் கொள்ளுண்ட
நிலம் போலாகுமோ
துப்பாக்கி வாய்ப்பட்ட
என் சிறு தேசம்.

வீரிய விதைகள்
இரத்தத்துள் அமிழும்,
பதர்கள் மிதக்கும்.

சிறு போகம், பெரும் போகம்
எல்லாமும் பொய்த்ததுவோ....?

அகதி முகம் பெறவா
உயிர்க் களையை
நான் இழந்தேன்?
தேசமெங்கும்
தீ விதைத்தேன்?

துறவறம் கொண்டதும்
கடுந்தவம் புரிந்ததும்
வரம் பல பெற்றதும்
வீரமும் களத்தே விட்டு
வெறுங்கையோடு இலங்கை புகும்
இராவணேஸ்வரனாகவா?

சிறகுகளைக் கூட
காவிச் செல்ல மாட்டாமல்...
சரணாலயம் நீங்கும்
ஏதிலிப் பறவை.


4.

ஒளிக் கதிரில் சூடேற்றி
சூரியன் எழுகின்றான்.

நீண்டும் கோணியும்
படியும் என் நிழல்....

மூத்தது கோணலென்றால்
பின்னால் பிறந்தவையும்....

இருக்கையும் அதட்டுகிறது.

"என்ன புலம்புகின்றாய்
நாடற்றவன் போல....
அகதி முகம் உள்ளதே
அப்புறம் என்ன?

நீங்கள் கையுயர்த்தி
முகமழித்த மனிதரை
நினைவுண்டோ ?

இந்த இருக்கைகளில்தான்
எத்தனை ஆயிரம்
துயர் கொண்டழுதிட்ட
என்புத் தோல் மனிதர்கள்.

மர இருக்கைகளை
பிளாஸ்டிக்காய் மாற்றியதே
அவர் உகுத்த கண்ணீர்தான்!

அலையின் சுழற்சியை
என்னென்பேன்
அவர்கள் வந்திறங்கிய
கரை இருந்து நீ.
வேடிக்கையாக இல்லை.

கவனத்தில் கொள்
உன் சந்ததியையும்
கேடு சூழும்
நாதியற்றவராய்....
நாடற்றவராய்...
அப்போது புலம்பு...."

இருப்பு கொள்ள
மனம் மறுக்கும்
காங்கேசன் துறை நோக்கும்
கப்பலின் அணியம்.

ஆபுத்திரன் கரையேறிய
மணிபல்லவம் தீவும்
மறைகின்றது.

விரிந்த வானத்தில்
வெண் முகில்கள்
இணைந்தும் கலைந்தும்
உருக்கொள்ளத் தவித்தும்,

என் முகம் போல....


5.

நான் எதையெல்லாம்
உங்களில் தொற்ற வைத்தேன்?

நீங்கள் எவற்றையெல்லாம்
எடுத்துக் கொண்டீர்?

நான் அறியேன்.

ஆனால் நான் கனிந்தேன்
உங்கள் தோளணைவால்
வெம்பலாகாமல்.

வேர் ஏன் அறுந்தது?

அத்தேசம் என்னை
உயிர்ப்பிக்கட்டும்.

என்னைத் தள்ளுங்கள்

தள்ள முடியாதவை
எல்லாவற்றையுமே
உரைத்துப் பாருங்கள்
நிறுத்துக் கொள்ளுங்கள்.

நிறுவைப் படிகள்
உங்கள் கைகளில்.

காவிரிப் படுகையிலும்
வைகைக் கரை நெடுகிலும்
கா஢சல் மண் காட்டிலும்
என்னுடன் அலைகையில்
எதை நீர் விதைத்தீர்?

பருத்தி வெடித்தால்
தறியினில் நெய்யலாம்,
கரும்பு விளைந்தால்
ஆலையில் பிழியலாம்,
கம்பு பயிரானால்
கூழ் காய்ச்சிக் குடிக்கலாம்,
கூட்டு நினைவினில்
பயிராகி வளர்ந்தவை
ஆறாத் துயரென்றால்....
கருத்துகள் பற்றிக் கொள்ளும்

சந்தேகம் கொள்ளற்க
கற்களின் உரசலில்
தீப்பொறி தெறிக்கும்.
பாறை இடுக்கிலும்
நீர்மை கசியும்.

சொர்க்க பூமியும்
கனவுத் தேசமும்
எங்குமே இல்லை.

இரத்தமும் சதையுமாய்த்தான்
பாதைகள் விரியும்
என் தேசம் போல
வெந்து தணியாக் காடாக....

நீலமலைத் தொடா஢னின்றும்
ராமர் அணை மேட்டிலிருந்தும்
எட்டிச் செல்லாப்
பாடமாக....

இன்றுபோய் நாளை வரும்.
உயிர்ப்பேன்
உங்களிடை இருப்பேன்.

கைகள் கொள்ளா
கலைச் செல்வங்கள் காவியும்
நெஞ்சு முட்ட
அன்புதனை நிறைத்தும்

நேசக் கடல் நாடி
வருவேன்-
முகம் பெற்றவனாக

1988 பாக்கு நீரிணை

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.