கருங்குழற் செவ்வாய்ச் சிற்றிடை மடந்தைக்கு உளத்துயர் ஈந்து கண்துயில் வாங்கிய ஆனா இன்னல் அழிபடக் காண்பான் விரிபொரி சிந்தி மணமலர் பரப்பி தெய்வக் குலப்பகை விண்ணொடும் விம்ம (5)
இருநால் திசையும் உண்பலி தூவி நன்னூல் மாக்கள் நணிக்குறி சொற்று பக்கம் சூழ்ந்த நெடுநகர் முன்றில் கோடகழ்ந் தெடுத்த மறிநீர்க் காலும் வெங்கள் பெய்து நாள்குறித்து உழுநரும் (10)
சூல்நிறைந் துளையும் சுரிவளைச் சாத்தும் இனக்கயல் உண்ணும் களிக்குரு கினமும் வரைப்பறை அரிந்த வாசவன் தொழுது நிரைநிரை லிளம்பி வழிமுடி நடுநரும் நாறு கழிதுற்ற சககு ஈர்க்குநரும் (15)
தாமரை பாடும் அறுகால் கீளையும் உறைத்தெழு கம்பலை உம்பரைத் தாவி முடித்தலை திமிர்ப்ப அடிக்கடி கொடுக்கும் அள்ளற் பழனத்து அணிநகர்க் கூடல் நீங்காது உறையும் நிமிர்கடைப் பெருமான் (20)
உரகன் வாய்கீண்ட மாதவன் போல மண்ணகழ்ந் தெடுத்து வருபுனல் வையைக் கூலம் சுமக்கக் கொற்றாள் ஆகி நரைத்தலை முதியோள் இடித்தடு கூலிகொண்டு அடைப்பது போல உடைப்பது நோக்கி (25)
கோமகன் அடிக்க அவனடி வாங்கி எவ்வுயிர் எவ்வுலகு எத்துறைக் கெல்லாம் அவ்வடி கொடுத்த அருள்நிறை நாயகன் திருமிடற் றிருளெனச் செறிதரும் மாமுகில் எனதுகண் கடந்து நீங்கித் துனைவுடன் செல்லல் ஒருங்குபு புரிந்தே. (31)
|