இந்திய நாடாளமன்றத்தில் உறுப்பினர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் உரையாற்றுவதை தடை செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தாய்மொழியை பயன்படுத்திய நாடுகள்தான் உலகில் முன்னேறியுள்ளன. எனவே நமது நாடாளுமன்றத்தில் இந்தியை அறிமுகப்படுத்தி ஊக்குவி்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்தி குறித்து நாட்டுத் தலைவர்கள் இரட்டை நிலையைக் கையாளுகின்றனர். இந்தியில் அவர்கள் மக்களிடம் ஓட்டு வேட்டையாடுகின்றனர். ஆனால் நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசுகின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும். நாட்டின் இதர பகுதிகளில் வாழ்வோர், தங்களது பிராந்திய மொழிகளுடன் சேர்த்து இந்தியையும் பிரபலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் முலாயம்.
|