ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்யும் சோதனையில், மும்பையைச் சேர்ந்த பிரான்சிஸ்கோஸ் பிட்சாரியா என்ற நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.
வாகன நெரிசல் மிகுந்த மும்பை நகரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவை டெலிவரி செய்வதற்கான மாற்று வழியை சிந்தித்த இந்த நிறுவனம் அதை திறம்பட செய்துகாட்டியும் உள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மைக்கேல் ரஜனி கூறியதாவது,
சமீபத்தில், ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தும் அமேசான் திட்டங்களை நாங்கள் படித்திருக்கிறோம். அதன்படி, சோதனை முறையில், மும்பையில் உள்ள எங்கள் உணவகத்தில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு 11-ம் தேதி பீட்சாவை வெற்றிகரமாக அனுப்பியுள்ளோம். சில ஆண்டுகளில் இந்த ஆளில்லா விமானங்கள் வழக்கமான பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆளில்லா விமானங்களின் விலை சுமார் 2000 டாலர்களாம்.
|