LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மகாராஷ்டிராவில் நடன விடுதிகள் செயல்பட உச்ச நீதிமன்றம் அனுமதி !

மகாராஷ்டிராவில் நடன விடுதிகள் வழக்கம் போல் செயல்படலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 


மகாராஷ்டிரா மாநிலத்திற்கு உட்பட்ட மும்பை மாநகரத்தில் ஏராளமான நடன விடுதிகள் செயல்பட்டு வந்தன. நடன விடுதி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த விடுதிகளில் ஆபாச நடனங்கள் ஆடப்படுவதாக கூறி கடந்த 2005ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு தடைவிதித்தது. இந்த தடையை எதிர்த்து, நடன விடுதிகள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பதிலுக்கு மாநில அரசுசம் மனு தாக்கல் செய்தது. 345 நடன விடுதிகள் இயங்க மட்டுமே உரிமம் இருந்தபோதும் மாநிலம் முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட விடுதிகள் செயல்பட்டதாகவும் இளைஞர்களின் மனதை 
கெடுக்கும் வகையில் ஆபாச நடனங்கள் நடப்பதாகவும் மகாராஷ்டிரா அரசு குற்றம் சாட்டியது. நடன விடுதிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 70,000 பெண்கள் நடன விடுதிகளில் நடனமாடி வந்ததாகவும் அரசின் உத்தரவால் அவர்கள் வேலை இழந்து விட்டதாகவும் இதில் பலர் தற்கொலை செய்து கொண்டதாக வும் தெரிவிக்கப்பட்டது. மக்களை மகிழ்விக்கும் வகையில் நடன நிகழ்ச்சிகள் நடத்துவது அனுமதிக்க கூடியதுதான் என்றும் கூறப்பட்டது.இதை விசாரித்த தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நீதிபதி எஸ். எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் கொண்ட பெஞ்ச், உயர் நீதிமன்ற 
உத்தரவு சரிதான் என்று கூறி, நடன விடுதிகள் செயல்பட அனுமதி அளித்து தீர்ப்பளித்தது.  

by Swathi   on 16 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.