LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

முண்டாசுப்பட்டி - திரை விமர்சனம் !!

இயக்கம் : ராம்குமார்


தயாரிப்பு : சி.வி.குமார்


ஒளிப்பதிவு : பி.வி.சங்கர்


இசை : ஷான் ரோல்டன்


நடிப்பு : விஷ்ணு, நந்திதா


கதை : ராம்குமார்


திரைக்கதை : ராம்குமார்

இயக்கம் : ராம்குமார்
தயாரிப்பு : சி.வி.குமார்
ஒளிப்பதிவு : பி.வி.சங்கர்
இசை : ஷான் ரோல்டன்
நடிப்பு : விஷ்ணு, நந்திதா
கதை : ராம்குமார்
திரைக்கதை : ராம்குமார்
முண்டாசுப்பட்டி, இயக்குனர் ராம்குமாரின் புது முயற்சி. இப்படத்தில் நடிகர் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிகை நந்திதா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் கதை இருவேறு காலகட்டங்களில் நடக்கிறது. 
முண்டாசுப்பட்டி கிராமத்துக்கு 1947-ம் வருடம் வெள்ளைக்காரர் ஒருவர் வருகிறார். அவர் போட்டோ எடுப்பதில் ஆர்வமுடையவர். எனவே, அங்கிருக்கும் மக்களை போட்டோ எடுத்துக்கொண்டு செல்கிறார். அவர் போட்டோ எடுத்துவிட்டு சென்றதும் அங்கு வாழும் மக்கள் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். வெள்ளைக்காரர் போட்டோ எடுத்ததனால்தான் மக்கள் இறந்தனர் என நினைத்து அன்றுளிருந்து ஊருக்குள் வந்து போட்டோ எடுப்பதை தவிர்கின்றனர் அங்கு வாழும் மக்கள்.
ஊருக்குள் மக்கள் வழிபடும் குல தெய்வ சிலையை ஒரு திருட்டு கும்பல் திருடிசெல்கிறது. அவர்கள் செல்லும் வழியில் ஊர்மக்கள் 
அவர்களை சுற்றி வளைக்கின்றனர். அந்த சமையம் வானத்தில் இருந்து ஒரு எரிகள் பூமியில் உள்ள இவர்கள் குலதெய்வம் இருக்கும் இடத்தில் விழுகிறது. இதை கண்ட திருட்டு கும்பல் அங்கிருந்து தப்பியது.
அதை கண்ட மக்கள் இது நமது குல தெய்வம் தான் என்று நினைத்து அன்றுளிருந்து அந்த கல்லை தெய்வமாக வணங்கி வருகின்றனர் அந்த கிராமத்து மக்கள். அதன்பிறகு அந்த ஊர் நோய், நொடியற்ற செழிப்பான கிரமாக மாறுகிறது.
எரிகல் விழுந்த செய்தியை அறிந்த வெள்ளைக்காரர் அங்கு மீண்டும் வருகிறார். அதை கண்ட மக்கள் அவர் மீண்டும் போட்டோ எடுக்க தான் வந்திருக்கிறார் என்று நினைத்து அவரை ஊரை விட்டு அடித்து தொரத்துகின்றனர். போகும் 
வழியில் எரிகல் துண்டை ஒன்று எடுத்து செல்கிறார். அந்த கல்லை ஆராய்ந்த வெள்ளைக்காரர் அது ஒரு விலைமதிக்க முடியாத கல் என்று கண்டுபிடிக்கிறார்.
இதற்க்கு பிறகு கதை 1983 காலகட்டத்திற்கு நகர்கிறது
இந்த காலகட்டத்தில் கதாநாயகன் விஷ்ணு போட்டோ கடை வைத்திருப்பவராக என்ட்ரி ஆகிறார். போட்டோக் கடை வைத்திருக்கும் விஷ்ணுவுக்கு ஒருநாள் பள்ளிக்கூடத்தில் குரூப் போட்டோ எடுக்கவேண்டும் என்ற ஆர்டர் வருகிறது. அப்போது தனது நண்பன் காளிவுடன் அங்கு செல்கிறார் விஷ்ணு, அங்கு நந்தித்தாவை பார்கிறார். சிறு வயதிலிருந்தே போட்டோ எடுப்பதை விரும்பாத நந்திதா குரூப் போட்டோவுக்கு வராமல் வகுப்பறையிலேயே தனியாக இருக்கிறாள். அவளிடம் சென்று விசாரிக்கும் விஷ்ணுவிடம் சாக்கு போக்கு சொல்லி போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் தப்பிக்கிறாள் நந்திதா.
அடுத்த நாள் கதாநாயகன் விஷ்ணு மீண்டும் நந்திதவை காண பள்ளிக்கூடம் வருகிறார். ஆனால் நந்திதாவின் தோழிகள் விஷ்ணுவிடம் அவளுக்கு திருமணம் ஆகப்போகிறது. அதனால்தான் அவள் பள்ளிக்கு வரவில்லை என்று கூறுகின்றனர். அதை கேட்கும் விஷ்ணு அவளை பிரிந்து தவிக்கிறான்.
இதற்கிடையே, முண்டாசுப்பட்டி கிராமத்திலிருந்து பெரியவர் ஒருவர் விஷ்ணுவை தேடி வருகிறார். அவர் விஷ்ணுவிடம் எங்கள் ஊர் தலைவர் மரண படுக்கையில் இருக்கிறார். எனவே,
அவர் இறப்பதற்கு முன் அவரை போட்டோ எடுக்க வேண்டும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக்கொள் என்கின்றார். இதனை கேட்ட கதாநாயகன் விஷ்ணு முண்டசுப்பட்டி கிராமத்துக்கு தனது நண்பர் காளிவுடன் முன்டாசுப்பட்டி கிராமத்துக்கு செல்கிறார்.
அங்கு சென்றதும் ஊர் தலைவர் பேத்தி தான் நந்திதா என்று விஷயத்தை அறிகிறார். நந்திதாவின் தாத்தாவை அவர் இறப்பதற்கு முன் போட்டோ எடுத்துக்கொண்டு செல்கிறார் விஷ்ணு. அவர் சென்றதும் நந்திதாவின் தாத்தா இறந்து விடுகிறார். போட்டோ எடுத்து சென்ற விஷ்ணு போட்டோவை பிரிண்ட் போடுகிறார். ஆனால், அந்த போடவில் பிரிண்ட் சரியாக விழவில்லை. இதனை கண்ட விஷ்ணு அதிர்ச்சியடைந்தார். என்ன செய்வது என்ற நிலையில் இருந்த விஷ்ணுவுக்கு ஒரு யோசனை வருகிறது, அவர் கடைக்கு அடிக்கடி வரும் முனீஸ்காந்த், ஊர் தலைவர் போன்ற தோற்றத்தில் இருப்பதை கண்டு முனீஸ்காந்திடம் படத்தில் நடிக்க ஆள் தேவை என ஆசை வார்த்தைகளை கூறி, அவனை போட்டோ எடுத்து நந்திதாவின் வீட்டாரிடம் கொடுக்கிறார். 
அதை பார்த்த நந்திதாவின் வீட்டார் மிகுந்த சந்தோசம் அடைகின்றனர், அதுமட்டுமில்லாமல் விஷ்ணுவை சாப்பிட்டு விட்டு போகும்படி கூறுகின்றனர். அப்போது, அங்கு வரும் முனீஸ்காந்தை பார்த்ததும் விஷ்ணுவும், காளியும் அதிர்ச்சியடைகின்றனர். அவர்தான் இறந்துபோன ஊர் தலைவரின் தம்பி மகன் என்பது அவர்களுக்கு தெரிய வருகிறது. 
இதன்பிறகு, விஷ்ணுவும், காளியும் முனீஸ்காந்திடம் மாட்டிக் கொண்டார்களா? அல்லது தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை. மொத்தத்தில் முண்டாசுப்பட்டி ரசிகர்களை வைருகுலுங்க சிரிக்க வைக்கும் கலகலப்பான கிராமம் தான். 

 

முண்டாசுப்பட்டி, இயக்குனர் ராம்குமாரின் புது முயற்சி. இப்படத்தில் நடிகர் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிகை நந்திதா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் கதை இருவேறு காலகட்டங்களில் நடக்கிறது. 


முண்டாசுப்பட்டி கிராமத்துக்கு 1947-ம் வருடம் வெள்ளைக்காரர் ஒருவர் வருகிறார். அவர் போட்டோ எடுப்பதில் ஆர்வமுடையவர். எனவே, அங்கிருக்கும் மக்களை போட்டோ எடுத்துக்கொண்டு செல்கிறார். அவர் போட்டோ எடுத்துவிட்டு சென்றதும் அங்கு வாழும் மக்கள் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். வெள்ளைக்காரர் போட்டோ எடுத்ததனால்தான் மக்கள் இறந்தனர் என நினைத்து அன்றுளிருந்து ஊருக்குள் வந்து போட்டோ எடுப்பதை தவிர்கின்றனர் அங்கு வாழும் மக்கள்.


ஊருக்குள் மக்கள் வழிபடும் குல தெய்வ சிலையை ஒரு திருட்டு கும்பல் திருடிசெல்கிறது. அவர்கள் செல்லும் வழியில் ஊர்மக்கள் அவர்களை சுற்றி வளைக்கின்றனர். அந்த சமையம் வானத்தில் இருந்து ஒரு எரிகள் பூமியில் உள்ள இவர்கள் குலதெய்வம் இருக்கும் இடத்தில் விழுகிறது. இதை கண்ட திருட்டு கும்பல் அங்கிருந்து தப்பியது.


அதை கண்ட மக்கள் இது நமது குல தெய்வம் தான் என்று நினைத்து அன்றுளிருந்து அந்த கல்லை தெய்வமாக வணங்கி வருகின்றனர் அந்த கிராமத்து மக்கள். அதன்பிறகு அந்த ஊர் நோய், நொடியற்ற செழிப்பான கிரமாக மாறுகிறது.


எரிகல் விழுந்த செய்தியை அறிந்த வெள்ளைக்காரர் அங்கு மீண்டும் வருகிறார். அதை கண்ட மக்கள் அவர் மீண்டும் போட்டோ எடுக்க தான் வந்திருக்கிறார் என்று நினைத்து அவரை ஊரை விட்டு அடித்து தொரத்துகின்றனர். போகும் வழியில் எரிகல் துண்டை ஒன்று எடுத்து செல்கிறார். அந்த கல்லை ஆராய்ந்த வெள்ளைக்காரர் அது ஒரு விலைமதிக்க முடியாத கல் என்று கண்டுபிடிக்கிறார்.


இதற்க்கு பிறகு கதை 1983 காலகட்டத்திற்கு நகர்கிறது


இந்த காலகட்டத்தில் கதாநாயகன் விஷ்ணு போட்டோ கடை வைத்திருப்பவராக என்ட்ரி ஆகிறார். போட்டோக் கடை வைத்திருக்கும் விஷ்ணுவுக்கு ஒருநாள் பள்ளிக்கூடத்தில் குரூப் போட்டோ எடுக்கவேண்டும் என்ற ஆர்டர் வருகிறது. அப்போது தனது நண்பன் காளிவுடன் அங்கு செல்கிறார் விஷ்ணு, அங்கு நந்தித்தாவை பார்கிறார். சிறு வயதிலிருந்தே போட்டோ எடுப்பதை விரும்பாத நந்திதா குரூப் போட்டோவுக்கு வராமல் வகுப்பறையிலேயே தனியாக இருக்கிறாள். அவளிடம் சென்று விசாரிக்கும் விஷ்ணுவிடம் சாக்கு போக்கு சொல்லி போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் தப்பிக்கிறாள் நந்திதா.


அடுத்த நாள் கதாநாயகன் விஷ்ணு மீண்டும் நந்திதவை காண பள்ளிக்கூடம் வருகிறார். ஆனால் நந்திதாவின் தோழிகள் விஷ்ணுவிடம் அவளுக்கு திருமணம் ஆகப்போகிறது. அதனால்தான் அவள் பள்ளிக்கு வரவில்லை என்று கூறுகின்றனர். அதை கேட்கும் விஷ்ணு அவளை பிரிந்து தவிக்கிறான்.


இதற்கிடையே, முண்டாசுப்பட்டி கிராமத்திலிருந்து பெரியவர் ஒருவர் விஷ்ணுவை தேடி வருகிறார். அவர் விஷ்ணுவிடம் எங்கள் ஊர் தலைவர் மரண படுக்கையில் இருக்கிறார். எனவே,அவர் இறப்பதற்கு முன் அவரை போட்டோ எடுக்க வேண்டும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக்கொள் என்கின்றார். இதனை கேட்ட கதாநாயகன் விஷ்ணு முண்டசுப்பட்டி கிராமத்துக்கு தனது நண்பர் காளிவுடன் முன்டாசுப்பட்டி கிராமத்துக்கு செல்கிறார்.


அங்கு சென்றதும் ஊர் தலைவர் பேத்தி தான் நந்திதா என்று விஷயத்தை அறிகிறார். நந்திதாவின் தாத்தாவை அவர் இறப்பதற்கு முன் போட்டோ எடுத்துக்கொண்டு செல்கிறார் விஷ்ணு. அவர் சென்றதும் நந்திதாவின் தாத்தா இறந்து விடுகிறார். போட்டோ எடுத்து சென்ற விஷ்ணு போட்டோவை பிரிண்ட் போடுகிறார். ஆனால், அந்த போடவில் பிரிண்ட் சரியாக விழவில்லை. இதனை கண்ட விஷ்ணு அதிர்ச்சியடைந்தார். என்ன செய்வது என்ற நிலையில் இருந்த விஷ்ணுவுக்கு ஒரு யோசனை வருகிறது, அவர் கடைக்கு அடிக்கடி வரும் முனீஸ்காந்த், ஊர் தலைவர் போன்ற தோற்றத்தில் இருப்பதை கண்டு முனீஸ்காந்திடம் படத்தில் நடிக்க ஆள் தேவை என ஆசை வார்த்தைகளை கூறி, அவனை போட்டோ எடுத்து நந்திதாவின் வீட்டாரிடம் கொடுக்கிறார். 


அதை பார்த்த நந்திதாவின் வீட்டார் மிகுந்த சந்தோசம் அடைகின்றனர், அதுமட்டுமில்லாமல் விஷ்ணுவை சாப்பிட்டு விட்டு போகும்படி கூறுகின்றனர். அப்போது, அங்கு வரும் முனீஸ்காந்தை பார்த்ததும் விஷ்ணுவும், காளியும் அதிர்ச்சியடைகின்றனர். அவர்தான் இறந்துபோன ஊர் தலைவரின் தம்பி மகன் என்பது அவர்களுக்கு தெரிய வருகிறது. 


இதன்பிறகு, விஷ்ணுவும், காளியும் முனீஸ்காந்திடம் மாட்டிக் கொண்டார்களா? அல்லது தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை. மொத்தத்தில் முண்டாசுப்பட்டி ரசிகர்களை வைருகுலுங்க சிரிக்க வைக்கும் கலகலப்பான கிராமம் தான். 

by Swathi   on 14 Jun 2014  0 Comments
Tags: Mundasupatti Movie Review   முண்டாசுப்பட்டி விமர்சனம்                 
 தொடர்புடையவை-Related Articles
முண்டாசுப்பட்டி - திரை விமர்சனம் !! முண்டாசுப்பட்டி - திரை விமர்சனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.