பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷரப் பாகிஸ்தான் நாடாளமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வரும் 24 ம் தேதி பாகிஸ்தான் திரும்ப உள்ளார். தாய்நாடு திரும்பும் அவரை, ஆட்சியில் இருக்கும் போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கில் கைது செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருந்தது. கைது செய்யாமல் இருக்க முஷரப் சார்பில் பாகிஸ்தானிலுள்ள சிந்து மாகாண ஐகோர்ட்டில் முன் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இதில் அவருக்கு பத்து நாள் முன் ஜாமீன் வழங்கி நேற்று நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து அவர் நாளை பாகிஸ்தான் வருகிறார்.
|