|
|||||
முஷரப்பின் மூன்றாவது வேட்பு மனு ஏற்கப்பட்டது ! |
|||||
பாகிஸ்தானில் அடுத்த மாதம் 11–ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப் இஸ்லாமாபாத், கராச்சி, ஷித்ரால், காசூர் ஆகிய நான்கு
தொகுதிகளில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். முஷரப் மீது நான்கு வழக்குகள் பதிவாகி இருப்பதால் அவர் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி
தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. முஷரப் மனுவுக்கு எதிராக தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் பலர் ஆட்சேபனை தெரிவித்தார்கள். கடந்த வெள்ளிக்கிழமை காசூர் தொகுதிக்கு முஷரப்
தாக்கல் செய்திருந்த வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டாவதாக கராச்சி தொகுதியிலும் முஷரப்பின் வேட்பு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே ஷித்ரால் தொகுதியில்
முஷாரப்பின் மனு ஏற்கப்பட்டதாக அத்தொகுதியின் தேர்தல் அதிகாரி நேற்று அறிவித்தார். இன்னும் முஷரப்பின் நான்காவது வேட்புமனு இஸ்லாமாபாத் தொகுதியில் பரிசீலனையில் இருப்பது
குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் அடுத்த மாதம் 11–ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப் இஸ்லாமாபாத், கராச்சி, ஷித்ரால், காசூர் ஆகிய நான்கு தொகுதிகளில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். முஷரப் மீது நான்கு வழக்குகள் பதிவாகி இருப்பதால் அவர் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. முஷரப் மனுவுக்கு எதிராக தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் பலர் ஆட்சேபனை தெரிவித்தார்கள். கடந்த வெள்ளிக்கிழமை காசூர் தொகுதிக்கு முஷரப் தாக்கல் செய்திருந்த வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டாவதாக கராச்சி தொகுதியிலும் முஷரப்பின் வேட்பு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே ஷித்ரால் தொகுதியில் முஷாரப்பின் மனு ஏற்கப்பட்டதாக அத்தொகுதியின் தேர்தல் அதிகாரி நேற்று அறிவித்தார். இன்னும் முஷரப்பின் நான்காவது வேட்புமனு இஸ்லாமாபாத் தொகுதியில் பரிசீலனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
|
|||||
by Swathi on 08 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|