|
||||||||
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் - குறிக்கோள்கள் |
||||||||
1. தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பைத் தொடர்ந்து, 1330 திருக்குறளையும் மனனம் செய்யும் மாணவர்களை அதிக அளவில் உருவாக்கி, அறம் சார்ந்த, பொருள் வளம்மிக்க நல்லிணக்க சமுதாயத்தைக் கட்டமைத்தல். 2. பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் இணைந்து செயல்பட்டு ஆர்வமும் மனனம் செய்யும் திறனும் மிக்க மாணவர்களை இனம் கண்டு, அவர்களுக்குத் திருக்குறள் முற்றோதல் மனனப் பயிற்சி அளித்தல். 3. வயதுக்கு ஏற்ப, திருக்குறளின் பொருளை முற்றோதல் முடித்த அனைவரும் கல்லூரி செல்வதற்கு முன்பு முழுமையாக அறிந்துகொள்ள வழிசெய்தல். 4. திருக்குறள் முற்றோதல் பயிற்றுவிக்க தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தகுதியான, அறம் சார்ந்த, அனுபவமும் ஆர்வமும் மிக்க முற்றோதல் முடித்த பயிற்சியாளர்களை அடையாளம் கண்டு, பொறுப்பாளர்களாக நியமித்தல். 5. ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் நாளில், திருக்குறள் முற்றோதல் முடித்தவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட திருவள்ளுவர் சிலையின் முன் நின்று முற்றோதல் செய்து கற்றதை மறந்துவிடாமல் தொடர் பயிற்சி செய்தல். 6. குறள் முற்றோதல் முடித்த அனைவரின் விவரங்களையும் இணையத்தில் பட்டியலிட்டு, வரிசை எண் கொடுத்து அவர்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சியை, வெற்றியைப் பெற துணைநிற்றல். 7. குறள் முற்றோதல் முடித்த அனைவரும் ஒருவருக்கொருவர் துணை நின்று கல்வி, வேலைவாய்ப்பு, மகிழ்ச்சியான , நிறைவான வாழ்க்கையை வாழவும், தொழிலில் வெற்றிபெறவும் முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு உரிய உதவிகளை ஒட்டு மொத்த உலகத் தமிழர்கள் தங்களது ஒருங்கிணைந்த தலையாய பொறுப்பாக ஏற்று செயலபட வழிவகுத்தல். |
||||||||
by Swathi on 07 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|