LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தமிழச்சியின் கத்தி

முற்றிய பேச்சு

தென்பாங்கு -- கண்ணிகள்

'உண்மையைச் சொல்லிடுவாய்! - எவன்தான்
    உன்னை அனுப்பிவைத்தான்?
    மண்ணிடை மாண்டானே - தெரியா
    மனிதன் உன்உறவா?
    எண்ணும்என் ஆட்சியிலே - செய்ததேன்
    இந்தக் கலகமடீ?
    திண்மை உனக்குளதோ?' - என்றந்தத்
    தேசிங்கு சொன்னவுடன்,

    'பொய்யினைச் சொல்வதில்லை - தமிழர்
    பொய்த்தொழில் செய்வதில்லை.
    மெய்யினைச் பேசுதற்கும் - தமிழர்
    மெய்பதைத் திட்டதில்லை.
    கையினில் வாளாலே - உனது
    காவல் தலைவன்தலை
    கொய்தவர் யார்எனிலோ - எனையே
    கொண்டவர் என்றறிவாய்!

    யாரும் அனுப்பவில்லை - எமையே
    இட்டுவந் தான்ஒருவன்
    சேரியில் ஓர்குடிசை - தந்துமே
    தீய இருமாதர்
    கோரிய வேலைசெய்வார் - எனவே
    கூட இருக்கவிட்டான்.
    சீரிய என்துணைக்கே - அவன்ஓர்
    சிப்பாய் உடைகொடுத்தான்.

    கோட்டைக் கழைத்தேகித் - திரும்பக்
    கூட்டிவ ராதிருந்தான்.
    வீட்டில்என் சோற்றினிலே - மயக்கம்
    மிஞ்சும் மருந்தையிட்டான்.
    ஆட்டம் கொடுத்ததுடல் - உணர்வும்
    அற்ற நிலையினிலே
    காட்டு மனிதன்அவன் - எனது
    கற்பை அழித்தானே!

    கற்பை அழித்தானே - தன்னைத்தான்
    காத்துக்கொள் ளும்திறமை
    அற்பனுக் கில்லைஅன்றோ! - திறமை
    ஆருக்கி ருக்கவில்லை?
    வெற்பை இடித்துவிடும் - உனது
    வீரத்தை யும்காணும்
    நிற்க மனமிருந்தால் - நின்றுபார்
    நெஞ்சைப் பிளக்கும்என்கை!

    குற்றம் புரிந்தவர்யார்? - உனது
    கோலை இகழ்ந்தவர்யார்?
    கற்பை இகழ்ந்தவர்யார்? - உனது
    கருத்தை மேற்கொண்டவன்!
    சொற்கள் பிழைபுரிந்தாய் - 'அடியே'
    என்றெனைச் சொல்லுகின்றாய்.
    நற்றமிழ் நாட்டவரை - இகழ்தல்
    நாவுக்குத் தீமை' என்றாள்.

    'சென்றஉன் கற்பினுக்கே - எத்தனை
    சிப்பாய்க ளைமடித்தாய்?'
    என்று வினவலுற்றான் - அதற்கே
    ஏந்திழை கூறுகின்றாள்:
    'என்னருங் கற்பினுக்கே - உன்னரும்
    இன்னலின் ஆட்சியையும்
    உன்னரும் ஆவியையும் - தரினும்
    ஒப்பில்லை' என்றுரைத்தாள்.

    'இந்த வடக்கத்தியான் - செஞ்சியினை
    ஆள்வதை ஏனிகழ்ந்தாய்?
    இந்து மதத்தவன்நான் - மதத்தின்
    எதிரி நானல்லவே!
    சொந்த அறிவிழந்தாய் - பிறரின்
    சூதையும் நீஅறியாய்.
    இந்தத் தமிழ்நாட்டில் - பிறரின்
    இன்னல் தவிர்ப்பவன்நான்.'

    சொல்லினன் இம்மொழிகள் - சுப்பம்மா
    சொல்லுகின் றாள்சிரித்தே:
    'தில்லித் துருக்கரையும் - மற்றுமொரு
    திப்புவின் பேரினையும்
    சொல்லிஇத் தென்னாட்டைப் - பலபல
    தொல்லையில் மாட்டிவிட்டார்;
    மெல்ல நுழைந்துவிட்டார் - தமிழரின்
    மேன்மைதனை அழித்தார்.

    அன்னவர் கூட்டத்திலே - உனைப்போல்
    ஆரும் தமிழ்நாட்டில்
    இன்றும் இருக்கவில்லை - பிறகும்
    இருக்கப் போவதில்லை.
    அன்று தொடங்கிஇந்தத் - தமிழர்
    அன்புறு நாடுபெற்ற
    இன்னலெல் லாம்வடக்கர் - இழைத்த
    இன்னல்கள்' என்றுரைத்தாள்.

    'ஆளும் நவாபினையோ - தமிழர்
    ஆரும் புகழுகின்றார்;
    தேளென அஞ்சுகின்றார் - செஞ்சியின்
    தேசிங்கின் பேருரைத்தால்!
    நாளும் வரும்;வடக்கர் - தொலையும்
    நாளும் வரும்;அதைஎம்
    கேளும் கிளைஞர்களும் - விரைவில்
    கிட்டிட வேண்டும்'என்றாள்.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.