|
||||||||
49ஓ-வுக்கு என் முதல் வாக்கு - சேயோன் யாழ்வேந்தன் |
||||||||
பெண்பார்க்க வந்தபோது
மாப்பிள்ளை என்ன செய்கிறார் என்று கேட்டதற்கு
சும்மாதான் இருக்கிறேனென்று சொன்னதால்தான்
பரவாயில்லை என்று சம்மதம் சொன்னாளாம்,
கவிதை எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தால்
கல்யாணமே நடந்திருக்காதாம்.
என்னிடம் வாக்குக் கேட்ட இருவரில்
யாருக்குச் சம்மதம் சொல்வதென்று தெரியாமல்
49ஓவுக்கு வாக்களித்ததுபோல்தான்
நான் சொன்ன சம்மதம் என்று
சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு நான் பதிலடி தந்தது
நல்லவேளை இன்றுவரை இவளுக்குப் புரியவில்லை.
- சேயோன் யாழ்வேந்தன் |
||||||||
by Swathi on 25 Nov 2015 0 Comments | ||||||||
Tags: 49 O 49 O Kavithai Kavithai about 49 O 49 O Tamil Kavithai 49 ஓ முதல் வாக்கு ஓட்டு கவிதை | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|