LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1257 - கற்பியல்

Next Kural >

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது.) பேணியார் காமத்தாற் பெட்பசெயின் - நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவில்; நாண் என ஒன்றோ அறியலம் - நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம். ('பேணியார்' எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. விரும்பியன - வேட்கை மிகலினாற் கருதியிருந்த கலவிகள். நாண் - பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணுதல். 'ஒன்று' என்பது ஈண்டுச் 'சிறிது' என்னும் பொருட்டு. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. நிறையழிவான் அறியாது கூடிய தன் குற்றம் நோக்கி, அவளையும் உளப்படுத்தாள்.)
மணக்குடவர் உரை:
நாணென்பதொன்று அறியார் மகளிர், காமம் காரணமாக விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வாராயின். அவர் விரும்புமாறு செய்வாராயின் நாணமுண்டாகா தென்றவாறு.
தேவநேயப் பாவாணர் உரை:
(பரத்தையிற் பிரிந்துவந்தவனாகக் கருதப்பட்ட தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகளை , நோக்கி நீ புலவாமைக்குக் . கரணியம் யாதென்ற தோழிக்குச் சொல்லியது) . பேணியார் காமத்தால் பெட்ப செயின்- நம்மால் விரும்பப்ட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யும்போது ; நாண் என ஒன்றோ அறியலம்- நாண் என்று ஒன்றை அறியமாட்டாதிருந்தேம். ஆசிரியர் ஒருமனை(வி)மணத்தையே இவ்வின்பத்துப் பாலிற் கூறுவதாலும் , இது தலைசிறந்த தமிழறநூலாதலாலும் , கோவைகளிற்போலப் பரத்தை கூற்றாக இங்கு ஒன்றுங் கூறப்படாமையாலும் , ' பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனோடு ' என்று பரிமேலழகர் .கொளுவிற் கூறியிப்பது பொருந்தாது . ' ஒன்று ' என்பது ஒரு தனிப்பொருள் என்னும் பொருட்டு . ஒகாரம் பிரிநிலை . ' அறியலம் ' என்பது உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாயின் , தன் குற்றத்தைக் குறைத்தற்குத் தோழியையும் உளப்படுத்திக் கொண்டதாகக் கொள்க . செயப்பாட்டு வினைமுதல் ' பேணியார் ' எனச் செய்வினை முதல் வடிவில் நின்றது . ' நாண் ' பரத்தையர் தோய்ந்ததாகக் கருதப்பட்ட மார்பைத் தோய்தற்கு நாணுதல் . 'பெட்ப' வேட்கை மிகுதியாற் கருதியிருந்த கலவிவினைகள் . ' அறியலர் ' . 'பெட்பச் செயின் ' எனபன மணக்குடவ பரிப்பெருமாளர் கொண்ட பாடம் .
கலைஞர் உரை:
நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.
Translation
No sense of shame my gladdened mind shall prove, When he returns my longing heart to bless with love.
Explanation
I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).
Transliteration
Naanena Ondro Ariyalam Kaamaththaal Peniyaar Petpa Seyin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >