நார்வே நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகும் தமிழச்சி கம்சி குணரத்னம்
நார்வே நாட்டில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் தமிழ்ப்பெண்ணாகிய செல்வி கம்சி குணரத்னம்.
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர். நார்வேயில் வாழ்ந்து வந்த தமிழர்.அரசியல் அரங்கில் கம்சி என அறியப்பட்டவர். அப்படியே தன் பெயரை மாற்றம் செய்து கொண்டவர்.
மூன்று வயதில் பெற்றோருடன் நார்வேக்கு அகதியாக வந்த கம்சி, இளையோர் அமைப்பில் இணைந்து அரசியலுக்கு வந்தவர். தொழிற்கட்சி, ஓஸ்லோ இளைஞர் அணியில் இணைந்துள்ளார். 2007-ஆம் ஆண்டு பத்தொன்பதாம் வயதில் ஓஸ்லோ மாநகர சபையின் பிரதிநிதியாக தேர்வானவர்.மாநகர சபையின் துணை மேயராகப் பதவியேற்றிருக்கிறார்.
நார்வேயின் மிகப் பெரிய கட்சியாக உள்ள தொழிற்கட்சி,தலைநகர் ஓஸ்லோவில் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யூனாஸ் கார் ஸ்டூரவுக்கு அடுத்த இடத்தில் கம்சியை நிறுத்தி உள்ளதன் மூலமாக அவரது நாடாளுமன்ற பதவி உறுதியாக்கப்பட்டது.கம்சி குணரத்னம் அவர்களின் தொடர்ந்த அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு அவருக்கு இத்தகைய உயர்வினை வழங்கியுள்ளது எனலாம்.
|