LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

நாயோடு சம்பாசித்தல்

 

இன்னும் வண்டி வரவில்லை
நிற்கிறேன் நிற்கிறேன் நிற்கிறேன்
தெருவில்.
கண்ணெதிரே ஒரு மரம்
நான் பார்த்திருக்கத் துளிர்விட்டது.
அதன் கன்னி
பூவாக மலர்ந்தது.
இனி காய்க்கலாம் பழுக்கலாம் பழத்தின் விதையும்
நிலத்தில் விழுந்து இன்னொரு மரமும்
முளைக்கலாம், முளைக்கிறது-
எனக்கான வண்டி இன்னும் இல்லை.
நான் நிற்கும் இடத்தில்
எனது குதிகாலில்
வேர் எழுகிறது இனி நானும் தளைக்க.
நாயே!
நான் நிற்கின்ற இடத்திற்கு பக்கத்தில் படுக்கின்ற
அநாதரவான பிராணியே!
நான் நடக்க முடியாது தளைத்தால்
நீ காவல் செய்.
சிலநேரம் என்னில் ஒருவிதப் பூப்பூக்கும்
நீயே பறித்து முகர்ந்துகொள்
என் காயை
அது முதிர்ந்து கனியை
நீயே புசி. 
இந்த மனிதன்
தினமும் தொழிலுக்காய்ப் பயணித்த பிறவி
வாகனம் காத்து நின்று தளைத்தான்
என்பதை நீ
குரைத்தாவது ஊருக்கு விளக்கு.
இனி மக்கள்
கால்களுக்கு சக்கரம் பூட்டிப் பயணிக்கும்
தலைமுறையும் வந்துவிடும்,
என் வண்டிதான் வராது.
எந்த மலையோடு மோதிப் புரண்டதோ?
கண்கெட்ட பாதை விழுங்கி
மலமாகத் தள்ளியதோ?
என் தலையில் குருத்து.
நிலத்தில் ஆணிவேர்.

 

இன்னும் வண்டி வரவில்லை

நிற்கிறேன் நிற்கிறேன் நிற்கிறேன்

தெருவில்.

 

கண்ணெதிரே ஒரு மரம்

நான் பார்த்திருக்கத் துளிர்விட்டது.

அதன் கன்னி

பூவாக மலர்ந்தது.

இனி காய்க்கலாம் பழுக்கலாம் பழத்தின் விதையும்

நிலத்தில் விழுந்து இன்னொரு மரமும்

முளைக்கலாம், முளைக்கிறது-

 

எனக்கான வண்டி இன்னும் இல்லை.

நான் நிற்கும் இடத்தில்

எனது குதிகாலில்

வேர் எழுகிறது இனி நானும் தளைக்க.

 

நாயே!

நான் நிற்கின்ற இடத்திற்கு பக்கத்தில் படுக்கின்ற

அநாதரவான பிராணியே!

நான் நடக்க முடியாது தளைத்தால்

நீ காவல் செய்.

 

சிலநேரம் என்னில் ஒருவிதப் பூப்பூக்கும்

நீயே பறித்து முகர்ந்துகொள்

என் காயை

அது முதிர்ந்து கனியை

நீயே புசி. 

 

இந்த மனிதன்

தினமும் தொழிலுக்காய்ப் பயணித்த பிறவி

வாகனம் காத்து நின்று தளைத்தான்

என்பதை நீ

குரைத்தாவது ஊருக்கு விளக்கு.

 

இனி மக்கள்

கால்களுக்கு சக்கரம் பூட்டிப் பயணிக்கும்

தலைமுறையும் வந்துவிடும்,

என் வண்டிதான் வராது.

எந்த மலையோடு மோதிப் புரண்டதோ?

கண்கெட்ட பாதை விழுங்கி

மலமாகத் தள்ளியதோ?

என் தலையில் குருத்து.

நிலத்தில் ஆணிவேர்.

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.