LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

நடையில் நின்றுயர் நாயகர்

1962-67 ஆண்டுகளில் அமைச்சர் பொறுப்பேற்ற இவருக்குப் பல்வேறு துறைகள் ஒதுக்கப்பட்டதை முன்பே கண்டோம் . அத்துறைகளுள் மதுவிலக்குத் துறையும் ஒன்று . மதுவிலக்கு நடைமுறையில் இருந்த காலமாதலால் அரசிடம் அனுமதி பெற்றே மது அருந்த வேண்டும் என்ற நிலை இருந்தது .

மது அருந்துவதையே அன்றாட பொழுது போக்காகக் கொண்ட பல பெரும்புள்ளிகள் அரசிடம் விண்ணப் பித்திருந்தனர் . அந்த விண்ணப்பங்களில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு தொடர்புடைய ஒருவரின் விண்ணப்பமும் ஒன்று . அவரது விண்ணப்பத்தைக் கீழ்மட்ட அதிகாரிகள் முறையாகப் பரிசீலனை செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர் .

சமுதாய ஒழுக்கக்கேடுகள் ஐந்தனுள் ஒன்றான ‘கள்ளுண்டல்’ என்பதை மிகப்பெரிய குற்றமாகக் கருதிக் கள்ளுண்ணாமையைக் கடைப்பிடித்து வந்தார் கக்கன் .

‘உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்

எண்ணப்பட வேண்டா தார்’

என்ற வள்ளுவரின் வாக்கை வாழ்க்கையின் கொள்கையாகக் கொண்டிருந்தார் . அதனால் அவரும் கள்ளுண்ணுவதில்லை , பிறர் கள்ளுண்ணுவதையும் அவர் ஏற்றுக் கொள்வதில்லை . இவ்வளவு கொள்கைப் பிடிப்புடையவராக இருந்ததால் மது அருந்த அனுமதி கேட்டுவரும் கோப்பினைப் பார்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை . அதனால் அண்ணாமலை பல்கலைக் கழகத் தொடர்புடையவரின் கோப்பும் கிடப்பில் கிடந்தது .

பல அதிகாரிகள் நினைவூட்டியும் அந்தக் கோப்பினைப் பார்க்கவே இல்லை . இதைத் தெரிந்து கொண்ட ‘அவர்’ தொலைபேசியில் தொடர்பு கொண்டார் . அன்புடன் பேசி , சொன்ன செய்தியையும் கேட்டுக் கொண்டார் . அவரின் வேண்டுகோளை நடைமுறைப்படுத்தப் பலர் காத்துக் கொண்டிருக்கும் போது கக்கன் மட்டும் செவி சாய்க்க மறுத்துவிட்டார் .

தமிழக அரசியலில் அவருக்கு என்று தனி மரியாதை உண்டு . எந்தக் கட்சியிலும் தொடர்பு கொள்ளாமல் இருப்பதால் அனைத்துக் கட்சிகளும் அவருக்கு ஒரு தனி மரியாதை செலுத்தி வந்தன . இதைக் கக்கன் உணர்ந்திருந்தாலும் மது அருந்த அனுமதி வழங்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது . இதை நினைவூட்டிக் கேட்ட அரசியல்வாதிகளிடம் ‘அந்த அவர்’ மீது கொண்ட அன்பினால் தான் அனுமதி வழங்கவில்லை என்று கூறினாராம் . எப்படியோ கக்கன் மதுவிலக்குத்துறை அமைச்சராக இருந்தவரை அனுமதி வழங்கவுமில்லை . அதன்பின் தமது வாழ்நாள் முழுவதும் எந்த உதவிக்கும் அவரை அணுகவுமில்லை .

எனவே கொண்ட கொள்கையில் எந்நாளும் எவருக்காகவும் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காத மனவலிமை கொண்டு தமக்கென்று ஒரு பாதையை அமைத்துக் கொண்டு வாழ்ந்தார் என்பதை உணரமுடிகிறது .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.