LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

நடுநிலைமை போற்றிய நாயகர்

சிலர் நடுநிலைமையோடு நடப்பதாக நடிப்பார்கள் . தங்கள் சுயநலத்தை அதில் கலந்து விடுவார்கள் . ஒரு வீட்டில் குழந்தை பிறந்தது . அதற்கு என்ன பேர் வைப்பது என்பதில் பெற்றோருக்குள்போட்டி வந்துவிட்டது . தனது தந்தையின் பெயராகிய சிவசாமி என்பதைத் தான் வைக்க வேண்டும் என்று குழந்தையின் தாய் விரும்பினாள் . தனது தந்தையின் பெயராகிய கிருஷ்ணசாமி என்பதைத்தான் வைக்க வேண்டுமென்று அப்பா விரும்பினார் . இருவருக்கும் வாக்குவாதம் முற்றிவிட்டது . எதிர்த்த வீட்டுக்காரர் சமாதானப்படுத்த வந்தார் . இருவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நடுநிலைமையோடு தீர்ப்புச் சொல்வதாக சொன்னார் . இருவரும் சம்மதித்தார்கள் . குழந்தைக்கு சிவராமகிருஷ்ணன் என்று பேர் வைத்தார் . அம்மாவின் அப்பா பெயரிலுள்ள சிவசாமியில் சிவனும் , அப்பாவின் அப்பா பெயரிலுள்ள கிருஷ்ணசாமியில் கிருஷ்ணனும் இருந்தது . பெற்றோருக்கு திருப்தி ஏற்பட்டது . ஆனாலும் ஒரு சந்தேகம் எழுந்தது . இடையில் ராமன் என்று வருகிறதே … என்று இழுத்தார்கள் . அது என்னோட அப்பாவின் பெயர் என்றார் தீர்ப்புக் கூறியவர் .

நடுநிலைமை தவறாது நடப்பது நல்ல தலைவனுக்கு மகுடமாக அமையும் . இதனை ஜனநாயக பாரம்பரிய கருத்தோடு பேணியவர் பெருந்தலைவர் காமராசர் . பகைவனுக்கும் அருள்வாய் என்ற ஆன்மீக நெறியை அரசியலுக்கும் ஆக்கிக் காட்டியவர் அவர் . 1954 க்குப் பிறகு கட்சித் தலைமைக்குத் தலைவர் காமராசருக்கும் , சி . சுப்பிரமணியம் அவர்களுக்கும் போட்டி ஏற்பட்டது . காமராசரே வெற்றி பெற்றார் . அவருக்கு 93 வாக்குகளும் சி . எஸ் . அவர்களுக்கு 41 வாக்குகளும் கிடைத்தன . ஆனால் கொஞ்சநாளில் அந்தப் போட்டி முனைப்புகளையெல்லாம் பெருந்தலைவர் மறந்தார் . 8 பேர் அடங்கிய தமது அமைச்சரவையில் சி . சுப்பிரமணியம் அவர்களையும் சேர்த்துக்கொண்டார் . அது மட்டுமல்ல , அந்தப்போட்டியில் சி . எஸ் . அவர்களை முன்மொழிந்த பக்தவச்சலம் அவர்களையும் சேர்த்துக்கொண்டார் .

தந்தை பெரியாரோடு கொள்கை அடிப்படையில் கருத்து வேற்றுமை இருந்த போதும் , அவரோடு நல்லுறவு கொண்டிருந்தார் . காமராஜ் என்றிருந்த பெருந்தலைவரின் பெயரை மேடைகள் தோறும் காமராசர் என்ற நல்ல தமிழில் குறிப்பிட்டு அப்பெயரை மக்கள் நடுவே புழக்கத்தில் கொண்டு வந்தவர் பெரியார் . பச்சைத்தமிழன் ன்று அவரைக் குறிப்பிட்டார் பெரியார் . ஊர்மேடைகளில் வேறுபட்டு நின்றாலும் உள்ள மேடைகளில் ஒன்றாய் விளங்கினார்கள் அறிஞர் அண்ணாவும் , பெருந்தலைவரும் . அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே மூன்றுபடி அரிசி கேட்டுப் போராட்டம் வெடித்தது . புது அரசாங்கத்திற்கு 6 மாத கால அவகாசம் போதுமானதல்ல . திட்டங்களை நிறைவேற்ற மக்கள்மேலும் அவகாசம் தர வேண்டும் ன்னு அறிக்கை விட்டுப் போராட்டத்திற்கு முடிவு கண்டார் பெருந்தலைவர் . போட்டியாக வந்தவர் என்ற பொறாமைக் குணம் பெருந்தலைவரிடம் தோன்றவே இல்லை .

தமர் எனக்கோல் கோடாது

பிறர் எனக்குணங்கொள்ளாது

செயல்படுவது சிறந்த நடுநிலையாளருக்கு அழகு என்று புறநானூறு கூறும் . அதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.