|
||||||||
நகர ஆகார வருக்கம் |
||||||||
நாழி யெனும்பெயர் உட்டுளை வடிவும்
அளக்கு நாழியும் பூரட் டாதியும்
நாழிகைப் பெயரு நவின்றனர் புலவர். ....959
நாக மெனும்பெயர் நன்மத யானையும்
வெற்புங் கடவுள ருலகுங் காரியமும்
ஒருமரப் பெயரும் குரங்கும் பாம்பும்
நற்றூசும் புன்னைப் பெயரு நவிலுவர். ....960
நாவிதன் எனும்பெயர் பூர நாளும்
கார்த்திகை நாளு மயிர்வினை ஞனுமாம். ....961
நாஞ்சில் எனும்பெயர் கலப்பைப் படையும்
எயிலு றுப்புமென வியம்பப் பெறுமே. ....962
நாட்ட மெனும்பெயர் நயனமும் வாளும்
பண்ணின் விகற்பமும் பகரப் பெறுமே. ....963
நாரி யெனும்பெயர் நறவும் பன்னாடையும்
பெண்ணுஞ் சிலைநாண் பெயரும் பேசுவர். ....964
நாப்பண் எனும்பெயர் நடுவட் டேரும்
நடுவு மெனவே நவிலப் பெறுமே. ....965
நான மெனும்பெயர் ஞானமும் பாசமும்
பூசு வனவும் புனலா டுதலும்
கத்தூ ரியுமெனக் கருதப் பெறுமே. ....966
நாடி யெனும்பெயர் நாழிகை நரம்புமாம். ....967
நாகெனும் பெயரே யீனா விளமையும்
இளமரக் கன்றும் சங்கும் நத்தையும்
ஒருசார் விலங்கின் பெண்பாலு மோதுவர். ....968
நாணுனும் பெயரே மாதர் மங்கலமும்
பூணு மிலச்சையுங் கயிறும் புகலுவர். ....969
நாரெனும் பெயரே அன்பும் கயிறுமாம். ....970
நாறுதல் எனும்பெயர் உண்டாதல் மணமுமாம். ....971
நான்முகன் எனும்பெயர் அருகனும் பிரமனும். ....972
நாழி யெனும்பெயர் உட்டுளை வடிவும் அளக்கு நாழியும் பூரட் டாதியும் நாழிகைப் பெயரு நவின்றனர் புலவர். ....959
நாக மெனும்பெயர் நன்மத யானையும் வெற்புங் கடவுள ருலகுங் காரியமும் ஒருமரப் பெயரும் குரங்கும் பாம்பும் நற்றூசும் புன்னைப் பெயரு நவிலுவர். ....960
நாவிதன் எனும்பெயர் பூர நாளும் கார்த்திகை நாளு மயிர்வினை ஞனுமாம். ....961
நாஞ்சில் எனும்பெயர் கலப்பைப் படையும் எயிலு றுப்புமென வியம்பப் பெறுமே. ....962
நாட்ட மெனும்பெயர் நயனமும் வாளும் பண்ணின் விகற்பமும் பகரப் பெறுமே. ....963
நாரி யெனும்பெயர் நறவும் பன்னாடையும் பெண்ணுஞ் சிலைநாண் பெயரும் பேசுவர். ....964
நாப்பண் எனும்பெயர் நடுவட் டேரும் நடுவு மெனவே நவிலப் பெறுமே. ....965
நான மெனும்பெயர் ஞானமும் பாசமும் பூசு வனவும் புனலா டுதலும் கத்தூ ரியுமெனக் கருதப் பெறுமே. ....966
நாடி யெனும்பெயர் நாழிகை நரம்புமாம். ....967
நாகெனும் பெயரே யீனா விளமையும் இளமரக் கன்றும் சங்கும் நத்தையும் ஒருசார் விலங்கின் பெண்பாலு மோதுவர். ....968
நாணுனும் பெயரே மாதர் மங்கலமும் பூணு மிலச்சையுங் கயிறும் புகலுவர். ....969
நாரெனும் பெயரே அன்பும் கயிறுமாம். ....970
நாறுதல் எனும்பெயர் உண்டாதல் மணமுமாம். ....971
நான்முகன் எனும்பெயர் அருகனும் பிரமனும். ....972
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|