|
||||||||
நகர அகர வருக்கம் |
||||||||
நந்தி யெனும் பெயர் ஈசனு மிடபமும்
சிறுபே ரிகையொடு செக்கான் பெயருமாம். ....932
நலமெனும் பெயரே நல்லுப காரமும்
சுகமும் விருச்சிக ராசியும் சொல்லுவர். ....933
நவமெனும் பெயரே யொன்பதுங் கேண்மையும்
புதுமையுங் கார்கா லமுமெனப் புகலுவர். ....934
நடையெனும் பெயரே வழியு மொழுக்கமும். ....935
நகமெனும் பெயரே மரப்பொதுப் பெயரும்
உசிரு மலையும் உரைக்கப் பெறுமே. ....936
நவிர மெனும்பெயர் மலையி னுச்சியும்
மலையும் புன்மையும் வகுத்தனர் புலவர். ....937
நயந்தோ னெனும்பெயர் நட்புடை யோனும்
கணவனு மெனவே கருதப் பெறுமே. ....938
நகையெனும் பெயரே மகிழ்ச்சியும் ஒளியும்
எயிறும் சிரிப்பும் இயம்புவர் புலவர். ....939
நவிரெனும் பெயரே யாண்பான் மயிரும்
தக்கேசி யிசையு மருதயாழ்த் திறமும்
வாளா யுதமும் வழங்கப் பெறுமே. ....940
நனையெனும் பெயரே பூவின் முகையும்
நறவு மெனவே நவிலுவர் புலவர். ....941
நவிய மெனும்பெயர் மழுவும் குடாரியும். ....942
நயமெனும் பெயரே நன்மையுஞ் சுகமுமாம். ....943
நரையெனும் பெயரே ஆனி னேறும்
வெண்ணிறக் குதிரையு மிகுபெறு நாரையும்
கவரியுந் தவள நிறமும் கருதுவர். ....944
நளியெனும் பெயரே சீதமுஞ் செறிவும்
பெருமையு முரைப்பர் பெரிது ணர்ந்தேரே. ....945
நரந்த மெனும்பெயர் நாரத்தை மரமும்
கத்தூ ரியுமெனக் கருதப் பெறுமே. ....946
நந்தெனும் பெயரே நத்தையுஞ் சங்குமாம். ....947
நடலை யெனும்பெயர் வஞ்சமும் பொய்யுமாம். ....948
நந்த லெனும்பெயர் ஆக்கமும் கேடுமாம். ....949
நகரெனும் பெயரே நகரமும் வீடுமாம். ....950
நத்த மெனும்பெயர் நகரின் கெடுதியும்
இரவும் பணிலமு மிருளும் இயம்புவர். ....951
நன்றெனும் பெயரே நன்மையும் பெரிதுமாம். ....952
நட்ட மெனும்பெயர் நடனமும் கேடுமாம். ....953
நவிலல் எனும்பெயர் பண்ணுதல் சொல்லுதல். ....954
நக்க லெனும்பெயர் நகையுந் தின்றலும். ....955
நக்க னெனும்பெயர் சிவனும் அருக்கனும்
நின்மா ணியுமென நிகழ்த்துவர் புலவர். ....956
நன்பெனும் பெயரே அகலமுந் தெளிவுமாம். ....957
நயனெனும் பெயரே இன்பமும் மகிழ்வும்
பயனு நன்மையும் பகரப் பெறுமே. ....958
நந்தி யெனும் பெயர் ஈசனு மிடபமும் சிறுபே ரிகையொடு செக்கான் பெயருமாம். ....932
நலமெனும் பெயரே நல்லுப காரமும் சுகமும் விருச்சிக ராசியும் சொல்லுவர். ....933
நவமெனும் பெயரே யொன்பதுங் கேண்மையும் புதுமையுங் கார்கா லமுமெனப் புகலுவர். ....934
நடையெனும் பெயரே வழியு மொழுக்கமும். ....935
நகமெனும் பெயரே மரப்பொதுப் பெயரும் உசிரு மலையும் உரைக்கப் பெறுமே. ....936
நவிர மெனும்பெயர் மலையி னுச்சியும் மலையும் புன்மையும் வகுத்தனர் புலவர். ....937
நயந்தோ னெனும்பெயர் நட்புடை யோனும் கணவனு மெனவே கருதப் பெறுமே. ....938
நகையெனும் பெயரே மகிழ்ச்சியும் ஒளியும் எயிறும் சிரிப்பும் இயம்புவர் புலவர். ....939
நவிரெனும் பெயரே யாண்பான் மயிரும் தக்கேசி யிசையு மருதயாழ்த் திறமும் வாளா யுதமும் வழங்கப் பெறுமே. ....940
நனையெனும் பெயரே பூவின் முகையும் நறவு மெனவே நவிலுவர் புலவர். ....941
நவிய மெனும்பெயர் மழுவும் குடாரியும். ....942
நயமெனும் பெயரே நன்மையுஞ் சுகமுமாம். ....943
நரையெனும் பெயரே ஆனி னேறும் வெண்ணிறக் குதிரையு மிகுபெறு நாரையும் கவரியுந் தவள நிறமும் கருதுவர். ....944
நளியெனும் பெயரே சீதமுஞ் செறிவும் பெருமையு முரைப்பர் பெரிது ணர்ந்தேரே. ....945
நரந்த மெனும்பெயர் நாரத்தை மரமும் கத்தூ ரியுமெனக் கருதப் பெறுமே. ....946
நந்தெனும் பெயரே நத்தையுஞ் சங்குமாம். ....947
நடலை யெனும்பெயர் வஞ்சமும் பொய்யுமாம். ....948
நந்த லெனும்பெயர் ஆக்கமும் கேடுமாம். ....949
நகரெனும் பெயரே நகரமும் வீடுமாம். ....950
நத்த மெனும்பெயர் நகரின் கெடுதியும் இரவும் பணிலமு மிருளும் இயம்புவர். ....951
நன்றெனும் பெயரே நன்மையும் பெரிதுமாம். ....952
நட்ட மெனும்பெயர் நடனமும் கேடுமாம். ....953
நவிலல் எனும்பெயர் பண்ணுதல் சொல்லுதல். ....954
நக்க லெனும்பெயர் நகையுந் தின்றலும். ....955
நக்க னெனும்பெயர் சிவனும் அருக்கனும் நின்மா ணியுமென நிகழ்த்துவர் புலவர். ....956
நன்பெனும் பெயரே அகலமுந் தெளிவுமாம். ....957
நயனெனும் பெயரே இன்பமும் மகிழ்வும் பயனு நன்மையும் பகரப் பெறுமே. ....958
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|