|
|||||||||||||||||||
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -18 , நாகேஸ்வரி அண்ணாமலை,நியூ ஹாம்ஷயர் ,அமெரிக்கா |
|||||||||||||||||||
பெயர் : நாகேஸ்வரி அண்ணாமலை உலக அரசியலைப் பற்றித் தமிழில் நூல் எழுதும் ஒன்றிரண்டு தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான நாகேஸ்வரி அண்ணாமலை சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் நிலைமைகளை ஊன்றிக் கவனிப்பதிலும் வேறுபட்ட பண்பாடுகளை ஒப்பிட்டு ஆராய்வதிலும் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஜப்பான், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஜெர்மனி போன்ற நாடுகளில் சில காலம் வாழ்ந்த அனுபவம் பெற்ற இவர் ஓர் அபுனைவு (non-fiction) எழுத்தாளர். ஆணித்தரமான வாதங்களுடனும், தரவுகளோடும் கூடிய காத்திரமான இவருடைய நூல்களில் உள்ள அடிநாதம் உலகில் பலநிலைகளில் நிலவும் நியாயமின்மையை எடுத்துக்காட்டுவதே ஆகும். அவருடைய நூல் பட்டியல் கீழே. நூல்கள்:
தீவிர ஆர்வத்துடன் களத்திலிருந்து கிடைத்த தகவல்களைக் கொண்டு பிரச்சினைகளை அலசி எழுதப்படும் சில தமிழ் நூல்களுள் இவருடையவை முதன்மையானவை. இயல்பான தமிழில் தொய்வில்லாத நடையில் எழுதுவது இவருடைய தனித் தன்மை. வாசகர்கள் நேரில் இருந்து கேட்பதைப் போன்ற உணர்வைத் தரும் தன்மை உடையவை. இவர் முகநூலிலும் (facebook.com/a.nageswari), டுவிட்டரிலும் (twitter.com/a_nageswari) தம்முடைய கருத்துக்களை வாசகர்களுடன் பகிந்துகொள்கிறார். ஓர் ஆண்டில் சில மாதங்கள் அமெரிக்காவில் கணவருடனும் (சிகாகோ பலகலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்) மகள்களுடனும் வாழ்கிறார். பிற மாதங்களில் மைசூரில் வாசம்.
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் குறித்த விவரங்களை, படைப்புகளை வலைத்தமிழில் வெளியிட உங்கள் நூல்கள் குறித்த விவரங்களை Magazine@ValaiTamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். |
|||||||||||||||||||
by Swathi on 19 Nov 2022 0 Comments | |||||||||||||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|