LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : காலை பானம் – 17

சென்ற வாரம் காலை உணவு பற்றி பார்த்தோம். சிலர் தொடர்பு கொண்டு காலை 4.30 மணிக்கு எழுந்தவுடன் என்ன பானம் பருகலாம் ? என வினவினர். காலை எழுந்த பின்பு உணவிற்கு முன்பாக என்ன பானம் பருகலாம் என்பதை இந்த வாரம் பார்க்கப் போகின்றோம்.

காலை எழுந்தவுடன் காபி அல்லது தேனீர் அருந்துவதைப் பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். காபி என்றால் நல்ல அடர்த்தியான கொதி நீருடன் ( Strong decoction ) வெள்ளைச் சீனி ( White Sugar ) போட்டு பால் கலந்து ( உண்மையான பால் கூட அல்ல. ஒரு வெள்ளை திரவத்தைக் கலந்து ) அருந்துகிறார்கள். இது நிச்சயமாக உடல் நலத்திற்குத் தீங்கை விளைவிக்கும். பலருக்கு காலையில் இது கேடு என்று தெரிந்தாலும் இது போன்ற இனிப்பு அதிகம் கலந்த காபி அல்லது தேனீர் குடித்தால்தான் பலருக்கு அன்றைய வேலைகள் ஒழுங்காக நடக்கும்.

காலை எழுந்தவுடன் உள்ளே செல்லும் பானம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. காலை பானத்தின் முக்கியத்துவத்தை நீராகாரம் என்ற தலைப்பிலும், காலையில் நீர் அருந்துதல் என்ற தலைப்பிலும் பார்த்திருக்கிறோம். என்னென்ன பானங்கள் பருகினால் உடல் நலம் காக்கப்படும் ? என்பதைப் பார்க்கலாம். நீரும், நீராகாரமும் சிறப்பானது என்பதை ஏற்கனவே அறிந்திருக்கிறோம்.

1. இஞ்சிச்சாறு

இஞ்சி தோல் நீக்கியது 10கி, காய்ந்த திராட்சை 10, மல்லி விதை ( தனியா ) – 5கி, சீரகம் 5கி ஆகியவற்றை நன்றாக அரைத்து தேன் அல்லது பனைவெல்லப் பாகுடன் கலந்து வெந்நீர் சேர்த்துப் பருகலாம்.

உடலின் நச்சுக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டு புதிய இளம் செல்கள் உற்பத்தி வேகமாகும். இதனால் இளமை பாதுகாக்கப்படும். மூன்று உயிராற்றல்களும் ( வளி, அழல், ஐயம் – விளக்கம் முன்பே பார்த்துள்ளோம் ) தத்தம் இயற்கை அளவுகளுடன் சமச்சீராக செயல்பட்டு நோய் இல்லா நிலையில் உடல் பாதுகாக்கப் படும்.

2. கரிசலாங்கண்ணிச் சாறு

கரிசாலை, பொன்னாங்காணி, வல்லாரை, முருங்கை, கறிவேப்பிலை, புதினா போன்ற ஏதேனும் ஒரு கீரைச் சாறுடன் தேங்காய்ப்பால், பனைவெல்லம், ஏலக்காய் சேர்த்து பருகலாம்.

மூளை செயல்பாடு சீராகி புத்திக் கூர்மையுண்டாகும். இரத்த ஓட்டம் சீராகி அதி இரத்த அழுத்தம் ( Hyper tension ) கட்டுப்படும். இரத்த சோகை ( Anemia ) சரியாகும்.

3. நெல்லிக்காய்ச் சாறு

நெல்லிக்காய்ச் சாறு 50 மி.லி. இஞ்சிச்சாறு 10 மி.லி. தேன் அல்லது பனங்கற்கண்டு தேவையான அளவு சேர்த்துப் பருகலாம்.

உடல் வலிமையாகும். வயிறு குடல் பகுதிகள் பலப்படும். வயிற்றுப்புண் விரைவில் சரியாகும். கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், இதயம், மூளை, எலும்பு, மச்சை ( Bone marrow )  இரத்தம் இவற்றை பலப்படுத்தும் ஓர் அற்புத பானம்.

4. காய்ச்சாறு

வாழைத்தண்டு, பூசணி, முட்டைக்கோசு, பாகற்காய், கோவைக்காய் போன்ற இளம் பச்சைக் காய்களை தனியாகவோ பலவற்றை கலந்தோ சிறிதாக வெட்டி அதனுடன் இஞ்சி, பூண்டு, பெருங்காயம் கலந்து அரைத்து அந்த விழுதுடன் மோர், கல் உப்பு கலந்து பருகலாம்.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதனையே அதிகம் தயாரித்து 2 அல்லது 3 முறை குடித்து ( மொத்தம் 1  லிட்டர் ) காலை உணவினைத் தவிர்க்கலாம். அப்படிச் செய்தால் வேகமாக எடை குறையும். இதற்கு எதிர் கலோரி பானம் ( Negative calorie drink ) என்று பெயர். இந்த பானம் செரிமான மாவதற்கு நம் உடலிலிருந்து சக்தியினை எடுத்துக் கொள்வதால் உடல் எடை வேகமாகக் குறையும்.

5. வெந்தயச் சாறு

வெந்தயத்தை நீரில் ஊற வைத்து முளைகட்டி   ( 12  மணி நீரில் ஊறவிட்டு நீரினை வடித்து விட்டு Hot Box – ல் போட்டு இறுக்கமாக மூடி வைத்தால் முளைத்து விடும் ) அதனுடன் தேங்காய், நீர் சேர்த்து அரைத்து மிளகுத்தூள், உப்பு கலந்து பருகலாம் அல்லது ஏலக்காய் பனை வெல்லம் கலந்தும் பருகலாம்.
          
இந்த பானத்தாலும் எடை குறையும். சர்க்கரை நோய் கட்டுப்படும். உடலிற்கு ஊட்டம் தரும். பெண்களுக்கு கர்ப்பப்பை பலப்படும். மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும்.

6. கேழ்வரகுக் கூழ்


கேழ்வரகை முந்தின நாள் இரவே கஞ்சிபோல் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் மூடி வைத்திருந்து மறு நாள் காலை உப்பு, மோர் சிறிய வெங்காயம் போட்டு குடிக்கலாம்.

அப்போதே கேழ்வரகு, ஏலக்காய், சுக்கு, பனைவெல்லம் போட்டுக் காய்ச்சியும் பருகலாம்.

இது போன்றே நவதானியங்களையும் தனித்தனியேயும் ஒன்றாகச் சேர்த்தும் கஞ்சியாகச் செய்து தேங்காய்ப் பால் சேர்த்தும் பருகலாம்.

உடல் வலுவாகும். ஏழு உடற்கட்டுக்களுக்கும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

7. இஞ்சி, எலுமிச்சை, புதினாச் சாறு

இஞ்சி தோல் நீக்கி 10 கி, எலுமிச்சைச்சாறு 10 மி.லி., புதினா 15 கி நன்றாக அரைத்து தேன், வெந்நீர் சேர்த்து அருந்தலாம்.

இது பசியினைத் தூண்டும். குடலை சுத்தப்படுத்தி பலப்படுத்தும். வயிற்றில் தங்கியுள்ள வாயுவை வேகமாக வெளியேற்றும். மூளையை பலப்படுத்தி மனதிற்கு உற்சாகத்தைத் தரும். சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீர்த்தாரை ( Kidney bladder, Ureter, Urethra ) போன்றவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தி உருவாகும் சிறுநீரினை வேகமாக வெளியேற்றும்.

8. இஞ்சி, வெங்காயச் சாறு

இஞ்சி, வெங்காயம் இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்து தேன், வெந்நீர் கலந்து பருகலாம்.

நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும். குளிர் காலங்களில் தொடர்ச்சியாக பயன்படுத்தினால் தொடர் தும்மல், மூக்கடைப்பு, தலைபாரம், மூச்சுப்பாதை கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

9. துளசிச் சாறு

துளசிச் சாறு, மிளகு, தேன் கலந்து காலையில் பருகினால் மன அமைதியும் உற்சாகமும் ஏற்படும். மன அழுத்தமும், பதற்றமும் தேவையற்ற கவலையும் நீங்கும். மூச்சுப்பாதை சீராகும். குளிரினாலோ, தூசியினாலோ, கிருமிகளாலோ, நச்சுக் காற்றினாலோ ஏற்படும் தும்மல், மூக்கடைப்பு, மார்புச்சளி, சுரம், ஏற்படாமல் தடுக்கும். சீரணம் சீராகும். கருவுற்ற பெண்கள் குழந்தைப் பேற்றிற்கு முன்பாக 21 நாட்கள் தொடர்ச்சியாக பருகினால் மகப்பேறு எளிதாகும். மகப்பேற்று வலியைத் தாங்கும் ஆற்றலை உடலுக்குக் கொடுக்கும்.

10. மல்லிக் குடிநீர்

மல்லி விதை ( தனியா ), சீரகம், ஏலக்காய், சுக்கு, பனைவெல்லம் கலந்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி பருகலாம். காபி, தேநீரை விட வேண்டும் என எண்ணுபவர்கள் இந்த பானத்தை முயற்சிக்கலாம்.

தேனும் வெந்நீரும் மட்டுமோ, எலுமிச்சைச் சாறு வெந்நீர் மட்டுமோ கலந்து பருகலாம்.

மேலே குறிப்பிட்ட பானங்களுக்குத் தனித்தனியான பலன்கள் இருந்தாலும் அவை யாவும் உடலிற்கு ஊட்டமளிக்கும். உடலின் அமிலத்தன்மையை மாற்றி காரத்தன்மைக்குக் கொண்டு செல்லும் ( Acid pH to Alkali pH ). உடலின் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும். சீரண மண்டலத்தை ( Digestive System ) சீர்படுத்தும். தோலின் தன்மையை வளப்படுத்துவதால் இளமைத் தோற்றமுண்டாகும். சீரான எடை உண்டாகும்.

வேதி பொருளினாலான பானங்களிலிருந்து விடுபட்டு இயற்கையான மூலிகைகளாலான பானங்களைப் பருகி உடல் நலத்தினைப் பாதுகாப்போம்.

நலப் பயணம் தொடரும்.........

by Swathi   on 05 Jan 2015  0 Comments
Tags: Siddha Maruthuvam   சித்த மருத்துவம்   காலை பானம்   Marning Drinks           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44 நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.