LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : உயிர் – 4

உயிர் 

இதுவரை உடலின் ஏழு அடிப்படைத் திசுக்களைப் பற்றி அறிந்தோம். இவைதான் உடலின் கட்டமைப்பு என்று பார்த்தோம். இந்த வாரம் இவை அடங்கிய உடலை இயக்குவிக்கும் ஆற்றலை அறிய உள்ளோம். அந்த ஆற்றல்தான் உயிர் என்று சித்தர்கள் கூறுகின்றார்கள். இக்கால அறிவியல்படி எளிமையாக விளக்குவதென்றால் உடல் என்பது பொருள் (Matter) உயிர் என்பது ஆற்றல் (Energy) என ஒப்பு நோக்கலாம். கருப்பையில் உடல் உருவாகும்போது எப்படி உயிர் வந்து இணைகிறது என்பதும் இறக்கும் போது இதே உயிர் எப்படி வெளியேறுகிறது என்பதும் திருமூலர், சிவவாக்கியர் போன்ற சித்தர்களால் திறம்பட விளக்கப்பட்டுள்ளது. அவை எல்லாவற்றையும் வேறு ஒரு தருணத்தில் நாம் பார்க்கலாம். இப்போது உயிர் என்கிற ஆற்றலைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். உயிர்தான் உடலில் எல்லா வேலைகளையும் செய்விக்கின்றது. எப்படி ஒரே ஆற்றல் எல்லாச் செயல்களுக்கும் அடிப்படையாகின்றது? ஒரு சிறு உதாரணத்துடன் விளக்கலாம். ஒரே மின்ஆற்றல் எப்படி குளிர் ஆற்றலாகவும் சூடு ஆற்றலாகவும் ஒளியாற்றலாகவும் பல்வேறு இயக்கங்களாகவும் மாறுகின்றதோ அப்படியே ஒரே உயிர் ஆற்றல் உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு அடிப்படையாகின்றது.


            உடலின் பல்வேறு இயக்கங்கள் நடந்து கொண்டிருந்தாலும் அவை எல்லாவற்றையும் சித்தர்கள் மூன்று பெரும் பிரிவுகளுக்குள் அடக்கியுள்ளார்கள். அவை வளி (வாதம், ஊதை, காற்று, வாயு) அழல் (பித்தம், சூடு, அனல், வெப்பம்) ஐயம் (கபம், கோழை, குளிர்ச்சி) ஆகியனவாகும். இதனையே வள்ளுவர்


                        மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்

                         வளி முதலா எண்ணிய மூன்று   -        குறள் 941


எனக் குறிப்பிடுகின்றார். இந்த அடிப்படை உயிர் ஆற்றல்களாகிய வளி, அழல், ஐயம் என்கிற மூன்றும் ஏதேனும் ஒரு காரணத்தினால் தம் அளவை விட உயர்ந்தாலோ அல்லது குறைந்தாலோ நோயினை உண்டாக்கும். இதுதான் நோய் என்பதற்கான மிக மிக எளிய விளக்கமாகும். வளி என்கிற வாதம் உடலில் இயற்கையாக செயல்பட்டால் என்னென்ன நிகழ்வுகள் உண்டாகும் என்பதைச் சித்தர்கள் கூறியவற்றில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.


வளி ஆற்றல் இயல்பு நிலை

  1. மூச்சு விடுவது, மூச்சு வாங்குவது (சுவாச நிகழ்வு) இயல்பாக நிகழும்.
  2. மனம் புத்துணர்ச்சியுடன் இயங்கி எப்போதும் மகிழ்ச்சியே மனதில் நிரம்பியிருக்கும்.
  3. ஏழு அடிப்படைத் திசுக்களும் ஒன்றிற்கொன்று ஒத்த இயக்கத்தினைக் கொண்டிருக்கும்.
  4. கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்கிற ஐந்து உயர்நிலை உணர்வுகளுக்குக் காரணமாக இருக்கும்.
  5. உடலில் உருவாகும் கழிவுகள் முழுமையாக வெளியேறக் காரணமாக இருக்கும்.
  6. கை, கால் மற்றும் பிற மூட்டுக்களின் இயக்கங்கள் சீராக நடக்கக் காரணமாக இருக்கும்.

இந்த உயிராற்றல் உணவு மற்றும் நமது செயல்பாடுகளால் கூடினாலோ குறைந்தாலோ என்னென்ன குறிகுணங்கள் உடலில் தோன்றுமெனப் பார்க்கலாம்.


வளி உடலில் மிகுதியாகச் செயல்பாட்டால் ஏற்படும் முக்கியக் குறிகுணங்கள் 

  1. உடல் மெலிந்து கறுப்பு நிறமாகி விடும்.
  2. உடல் நடுக்கம்
  3. வயிறு உப்பிசம் (Flatulence)
  4. மலக்கட்டு (Constipation)
  5. உடல் வன்மை (பலம்) குறைதல்
  6. சூடாக உள்ள பொருட்களையே விரும்பி உண்ணல்.
  7. தூக்கக் குறைவு.
  8. கண், காது, மூக்கு, நாக்கு, தோல் இவற்றில் உயர்நிலை உணர்வுகள் குறைதல்.
  9. மனத் தடுமாற்றல், தலைசுற்றல்

 

வளி குறைந்தால் ஏற்படும் குறிகுணங்கள் 

  1. உடல் வலி
  2. குரல் ஒலி குறைந்து போதல்
  3. அறிவு மங்கிப் போதல்
  4. உடலின் பொதுவான செயல்பாட்டு மந்தம் ஏற்படுதல்

காற்று என்கிற வளி ஆற்றல் உடலில் இயங்கும் விதத்தை வைத்து சித்தர்கள் பத்து விதமாகப் பிரித்துள்ளனர்.

  1. உயிர்க்காற்று (பிராணன்)
  2. கீழ்நோக்குக் காற்று (அபானான்)
  3. மேல்நோக்குக் காற்று (உதானன்)
  4. பரவு காற்று (தொழிற்காற்று, வியானன்)
  5. நிரவு காற்று (நடுக்கால் – சமானன்)
  6. தும்மல் காற்று (நாகன்)
  7. விழிக்காற்று (கூர்மன்)
  8. கொட்டாவிக் காற்று (கிருகரன்)
  9. இமைக்காற்று (தேவதத்தன்)
  10. வீங்காற் காற்று (தனஞ்செயன்)

 

இவை ஒவ்வொன்றிற்க்கும் தனித்தனியாக செயல்பாடுகள் உண்டு. அவற்றை சீர்படுத்தும் வழிமுறைகளும் சித்தர் நூல்களில் கூறப்பட்டுள்ளன.


இரண்டாவது ஆற்றல் அழல் இது உடலில் இயல்பாகச் செயல்பட்டால்


  1. சீரண ஆற்றல் இயல்பாக இருக்கும்.
  2. நாவின் சுவை, நீர்வேட்கை உணர்வு சீராக இருக்கும்.
  3. கண் பார்வை, இயக்கம் தெளிவாக இருக்கும்.
  4. புத்திக் கூர்மைக்கு இந்த ஆற்றலே காரணமாகும்.
  5. உடலின் ஆற்றல் பொதுவாகச் சீராகித் தோல் ஒளியுடன் (பளபளப்பாக) திகழும்.

 

அழல் ஆற்றல் உடலில் கூடிவிட்டால் 

  1. பசி, தாகம் அதிகப்படும்
  2. உடல் முற்றிலும் காந்தல் எரிச்சல் உண்டாகும்
  3. தூக்கம் குறைந்து படபடப்பு ஏற்படும்
  4. கண் எரிச்சல் ஏற்படும்
  5. மிகவும் அதிகமாகி விட்டால் மஞ்சள் காமாலை போன்ற குறிகுணங்கள் ஏற்படும்.

 

அழல் ஆற்றல் குறைவுபட்டால் 

  1. பசிமந்தம் ஏற்படும்
  2. உடல் ஒளி குன்றும்
  3. பார்வை மந்தம் உண்டாகும்
  4. உடல் பருமன், உடல் மந்தம் ஏற்படும். எந்த வேலையைச் செய்வதிலும் தாமதம் தயக்கம் உண்டாகும்.
  5. யோசிக்கும் ஆற்றல் குன்றும்.

 

மூன்றாவது ஆற்றலாகிய ஐம் உடலில் இயல்பாகச் செயல்பட்டால்

  1. உறுதியான உடல் அமைப்பினை உண்டாக்கும்.
  2. எலும்புகள் இணையும் மூட்டுக்களின் இயக்கம் சீராக இருக்கும்.
  3. பசி, தாகம், தூக்கம், துன்பம், வெப்பம், குளிர்ச்சி போன்றவற்றைத் தாங்கும் ஆற்றலைத் தரும்.
  4. தோல் நெய்ப்புத் தன்மையுடன் வழவழப்புடனிருக்கும்.
  5. உள் உறுப்புக்களின் இயக்கம் காரணமாக ஏற்படும் உராய்வினைத் தடுக்கும்.

 

ஐயம் உடலில் அதிகப்பட்டால்

  1. உடலின் சூடு, பசி, தாகம், செரிப்புத்தன்மை குறையும்
  2. உமிழ் நீர் அதிகம் சுரக்கும்
  3. உடலின் இயல்பான ஊக்கம் குறையும்
  4. உடலின் எடை அதிகமாவதோடு குளிர்ச்சியாகவும் இருக்கும்
  5. இருமல், நெஞ்சில் கோழை கட்டல், மூச்சு இரைப்பு, தும்மல், தலைபாரம், இவை உண்டாகும்.
  6. அதிக தூக்கம் உண்டாகும்.

 

ஐயம் உடலில் குறைவுபட்டால்

 

  1. தலைசுற்றல், வாந்தி, மயக்கம், படபடப்பு ஏற்படும்
  2. மூட்டுக்களின் இயக்கம் தடைபட்டு மூட்டு அழற்சி, வீக்கம் ஏற்படும்.
  3. மார்பு படபடப்பு, அதிக வியர்வை உண்டாகும்.
  4. புத்தி தெளிவில்லாத நிலை ஏற்படும்.

உயிர் ஆற்றல் வகைகளையும் அவை கூடினால் குறைந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் இதுவரை பார்த்தோம்.

ஏற்கனவே உடல் திசுக்களுக்கும் (Matter) உயிர் ஆற்றலுக்கும் (Energy) பஞ்ச பூதங்களே அடிப்படை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஐந்து பூதங்களுக்கும் ஏழு உடற்திசுக்களுக்கும் உயிர் ஆற்றலுக்கும் உள்ள தொடர்பினை இப்போது பார்க்கலாம்.


உடல் திசு                               பஞ்சபுதம்

சாரம்                          -           நீர்

குருதி (இரத்தம்)        -             நீர் + தீ

ஊன் (தசை)               -            மண் + நீர்

கொழுப்பு                   -             நீர்  + மண்

எலும்பு                       -             மண் + காற்று

மூளை                         -           நீர்  + காற்று

சுக்கிலம்                     -            தீ  + காற்று


உயிர் ஆற்றல்                             பஞ்சபுதம்

வளி                            -         காற்று  + ஆகாயம்

அழல்                          -         தீ

ஐயம்                          -          மண்  + நீர்


ஏழு உடற்கட்டுக்கள் மற்றும் மூன்று உயிர் ஆற்றல்கள் மட்டுமே உடல் அல்ல.  மொத்தம் 96 நுட்பமான தத்துவங்கள் அடங்கியதே இந்த உடல் என்பது சித்தர்கள் கருத்து.  இவற்றை தொடரில் அவ்வப்போது விளக்கலாம்.


இனி இவ்விதமாக போற்றத்தக்க உடலை நம் முறையான வாழ்க்கை முறையினால் எவ்விதம் பாதுகாக்கவும் என்பதை அடுத்த வாரம் முதல் பார்க்கப்போகிறோம்.  அதில் முதல் கட்டமாக நாள் ஒழுக்கம் அதாவது காலை எழுந்த்து முதல் இரவு உறங்கப் போகும் வரை நாம் பின்பற்றவேண்டிய ஒழுக்க முறைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கப்போகிறோம்.  உடல் நலம் காக்க நம் பயணம் தொடரும்.

 

 

by Swathi   on 07 Oct 2014  0 Comments
Tags: Siddha Maruthuvam Kurippugal   Siddha Maruthuvam Tamil   Dr.Selva Shunmugam   Siddha Maruthuvar   Siddha Maruthuvar Thodar Tamil   சித்த மருத்துவம்   சித்த மருத்துவ குறிப்புகள்  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44 நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.