LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் – பகுதி 2

உடம்பினை பற்றி சித்தர்கள் ௬றும் கருத்துகள் மிகவும் நுட்பமானவை. இக்கால ஆய்வு அறிவியலால் முழுவதும் விளக்க முடியாத அளவிற்கு ஆழமானவை. இக்கால அறிவியல் துணை அணுத் துகள் (Sub Atomic Particle) அளவிற்கு மிகவும் நுட்பாமக உடலினைப்பிரித்து ஆய்வு செய்தாலும் பல உடல் இயங்கியல் நிகழ்வுகளுக்கு (Physiological functions )  அதனால் விளக்கமளிக்க இயலவில்லை.

 

 சித்தர்கள் ௬றியுள்ள உடல் கட்டமைப்பினைப்பற்றிய கருத்துக்களும்  உடல் இயக்கத்தினைப் பற்றிய கருத்துக்களும் (Structural &Functional) மிக மிக ஆழமானவை மற்றும் விரிவானவை. இந்தத் தொடருக்குத் தேவையான மிகவும் சுவையான தகவல்கள் மட்டும் இங்கு காணலாம். அதற்கு சட்டமுனி என்கிற சித்தரின் எளிய பாடலை அனைவரும் தெரிந்திருத்தல் வேண்டும்.

 

“அண்டத்திலுள்ளதே பிண்டத்திலும்

பிண்டத்திலுள்ளதே அண்டத்திலும்

அண்டமும் பிண்டமும் ஒன்றே

அறிந்துதான் பார்க்கும் போதே”

 

பூமி ( உலகம் ), பிற கோள்கள், சூரியன், பால்வீதி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் பிற நட்சத்திர மண்டலங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதே அண்டம் என சித்தர் ௬றுகிறார்.

 

உடலினைப் பிண்டம் எனக் ௬றுகின்றார். உடம்பினைச் சுற்றியுள்ள அனைத்து பொருட்களிலும் இருக்கும் அடிப்படைப் பொருட்கள்தான் உடம்பிலும் உள்ளன. அந்த அடிப்படைப் பொருட்களுக்கு பஞ்ச பூதங்கள் என்று பெயர். மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐந்து பொருட்களும் மிக மிக நுட்பமான முறையில் உலகில் உள்ள பொருட்களிலும் உடலில் உள்ள உறுப்புகளிலும் கலந்துள்ளன. உடலில் உள்ள இந்த ஐந்து பூதங்களும் அதனதன் அளவில் இல்லாமல் ௬டியோ குறைந்தோ காணப்பட்டால் அது நோயாக உருவாகும். இந்த ஏற்ற இறக்கங்களை உலகில் உள்ள பொருட்களை கொண்டு சீராக்குவதுதான் சித்த மருத்துவம். இதற்கு உடலினை பற்றிய முழு அறிவும் உலக பொருட்களை பற்றிய முழு அறிவும் வேண்டும். அவற்றை முழுமையாகப் பெற்ற ஞானிகளே சித்தர்கள்.

 

இப்போது உடலிற்கு வருவோம். உடலில் இந்த ஐந்து பூதங்களும் அடிப்படைக் கட்டமைப்பிற்கும் இயக்கத்திற்கும் (Structure and Functions) காரணமாகின்றன.

 

உடல் கட்டமைப்பு

சித்தர்கள் கருத்துப்படி ஏழு விதமான அடிப்படைத் திசுக்களால் உடல் கட்டப்பட்டுள்ளது. அவை சாரம் என்கிற நீர்த்துவமான பொருள், இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, சுக்கிலம், (ஆண்களுக்கு விந்து, பெண்களுக்கு சூல் முட்டை) என்பவைதான். எப்படி ஒரு கட்டடத்திற்கு செங்கல், மணல், கம்பி, சிமெண்ட், நீர் போன்றவை அடிப்படை கட்டுமான பொருட்களோ அதே போன்று நம் உடலிற்கான கட்டுமான பொருட்கள்தான் இந்த ஏழு அடிப்படைத் திசுக்கள். இந்த ஏழு திசுக்களுக்கும் அடிப்படையாக இருப்பது பஞ்ச பூதங்கள்தான். இந்த பஞ்ச பூதங்களும் மிக மிக நுட்பமான நிலையில் (Subtle State) வெவ்வேறு வடிவங்களும் பண்புகளும் நிறங்களும் பெற்றவை. உதரணமாக சிலவற்றை பார்ப்போம். மண் கடினமானது. நீர் தளர்ச்சியும் குளிர்ச்சியுமுடையது. தீ கூர்மையும வறட்சியுமுடையது. காற்று நுட்பமும் உலர்த்தும் தன்மையுமுடையது. இது போன்ற பல்வேறு நுட்பமான பண்புகளால் உடலில் தோல், தசை, எலும்பு, மூளை, போன்ற அடிப்படைத் திசுக்களை உருவாக்குகின்றன என்பது சித்தர்களின் கருத்து.

 

ஏழு உடற்கட்டுகளின் அடிப்படை பண்புகளையும் நாம் தெரிந்து கொள்ளல் வேண்டும். இவை இங்கே விளக்கப் படுவதற்குக் காரணம் என்னவெனில் உடல்நலம் காக்க சித்தர்கள் ௬றும் வழிகளை நாம் முறையாகப் பின்பற்ற இந்த அடிப்படைக் கருத்துகள் உதவியாகும். உதாரணமாக எண்ணெய் குளியலின் போதும் உடலை சுத்தம் செய்வதற்கான முறைகளைப் பின்பற்றும் போதும் உடல் கட்டமைப்பு எவ்விதம் சீராகின்றது உடல் இயக்கம் எப்படி ஒழுங்கு படுத்தப் படுகின்றது  என்பதை சித்தர்கள் வழியில் நாம் புரிந்துகொள்ள இந்தப் பகுதிகள் முக்கியமானவை என நான் கருதுகின்றேன்.

 

இந்த உடற்கட்டுக்கள் உடலில் குறைவுபட்டலோ மிகுதியாக விரிவு பட்டாலோ உடலில் தோன்றும் பிரச்சினைகளும் இங்கே விவரிக்கப் படுகின்றன. உடற்கட்டுக்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு உணவு மற்றும் செயல்களால் உடலில் ஏற்படக்கூடிய ஐந்து பூதங்களின் ஏற்ற இறக்கங்களே  காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இனி ஒவ்வொரு உடற்கட்டாக பார்ப்பதற்கு உடலிற்குள் நாம் பயணப்படலாம்.

 

சாரம் என்கிற நீர்த்துவமான பொருள் மற்ற திசுக்களுக்கு பொருளாகும். உண்ணும் உணவினுடைய சத்து நேரடியாக முதலில் சாரம் என்கிற பொருளை சென்றடைகின்றது.

 

ஏழு அடிப்படை திசுக்களும் ஒன்றிற்கொன்று பிரிக்க முடியாமல் உடலில் பின்னிப் பிணைந்துதிருந்தாலும் விளக்கும் வசதிக்காக நமக்குத்   தெரிந்த உடல் பொருள்களோடு ஒப்பிட்டுப் பார்க்கப் படுகின்றது. உமிழ்நீர், மூச்சுப்பதையில் சுரக்கும் நீர் ( மூச்சுப்பாதையில் தூசு, நுண்கிருமிகள், நச்சுப் பொருட்கள் முதலியவற்றை நீக்கும் பொருட்டு உருவாகும் நீர் ) விந்தணுக்களை சுமந்து செல்லும் நீர்மம் ( Seminal fluid )  உறுப்புகளிலிருந்து வரும் கசிவுகள் மற்றும் கண்ணீரும் கூட சாரம் என்கிற உடல் அடிப்படை பொருளாகும். உணவு செரிமானத்திற்குப் பின்பு சிறுகுடலில் உள்ள நுண் குழல்கள் ( Lacteals ) மூலம் உறிஞ்சப்படக்கூடிய திரவமும் சாரம் எனப்படும். உடல் இயக்கங்கள் சீராக நடக்கும் பொருட்டு உடலில் சுரக்கும் அனைத்து நீர்மங்களும் சாரத்தின் பிரிவுகளே.

 

இந்த சாரம் உடலில் குறைந்து போனால்  தோல் வறட்சி, கண் எரிச்சல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், உடல் சோர்வு மற்றும் வலி, உடல் மெலிந்து போதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதே சாரம் உடலில் மிகுந்து போனால் பசி குறைவு, உணவில் வெறுப்பு, உடல் பருமன் ஏற்படும்.

 

இரண்டாவது உடல் கட்டு இரத்தம். இந்த இரத்தம் உடலில் இயல்பாக இருக்கும் போது சிறந்த அறிவு, உடல் உறுதி, உடலின் ஒளி, தெளிவான குரல் போன்றவை நிலைத்திருக்கும் என சித்தர்கள் ௬றுகின்றனர். சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள், உயிர் வேதி பொருட்கள் (Red Blood Cells, White Blood Cells, Platelets, Bio Chemical elements) போன்றவற்றோடு இவையனைத்தின் ஊடகமாக செயல்படும் நீர்மம் (Plasma) அடங்கிய இரத்தம் என இக்கால அறிவியல் ௬றுகின்றது.

 

எல்லா வகையான பிற உடல்திசுக்களுக்கும் உயிர்க்காற்று (Oxygen) மற்றும் ஊட்டச்சத்துக்களை செலுத்தி அவற்றிலிருந்து உருவாகும் கழிவுகளை வெளியேற்றுதல், நோய் எதிர்பாற்றலை உருவாக்குதல், உடலில் அமில – கார சமன்பாடினை (Acid – base balance) சீராக வைத்திருத்தல், உடல் வெப்பநிலையை சூழலுக்குத் தகுந்த வாறும் உடல் உள் அமைப்பிற்குத் தகுந்த வாறும் மாற்றியமைத்து உடலைப் பாதுகாத்தல் என்பவை இரத்தத்தின் முக்கிய செயல்களாக இக்கால அறிவியல் மேலும் தெரிவித்து சித்தர்களின் கருத்துக்களுக்கு வலுவூட்டுவதாக அமைகின்றது.

 

இரத்தம் என்கிற உடற்கட்டு அளவில் குறைந்து காணப்பட்டாலோ செயல்பாடு குறைந்தாலோ உடல் ஒளி குறைந்து வெளுப்பு நிறம் ஏற்படும். தெளிவற்ற கருத்துக்களும் புத்தி தடுமாற்றமும் உண்டாகும். உடல் சோர்வு மிகுந்து கண் இருளல், மயக்கம், குமட்டல் வாந்தி உண்டாகும். உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் முழுவதும் உட்கிரகிக்கப்படாத நிலை, தேவையான உடல் உருப்புகளுக்குச் செலுத்தப்படாத நிலை தோன்றும். எனவே உடல் உறுதி படிப்படியாகக் குறையும். தெளிவற்ற மெல்லிய குரல் ஏற்படும்.

 

இரத்தம் அதிகப்பட்டலோ செயல்பாடு மிகுந்தாலோ கண் சிவப்பு, தலை வலி, தோலில் சிவப்பான திட்டுக்கள், கட்டிகள் போன்றவை தோன்றும்.

 

பிற உடல் கட்டுக்களாகிய தசை, கொழுப்பு, எலும்பு, மூளை, சுக்கிலம் ஆகியவற்றையும் உடல் இயக்கத்திற்கு அடிப்படையான சக்தி எவ்வாறு செயல்படுகின்றது என்பது பற்றியும் அடுத்த வாரம் பார்க்கலாம். 


தொடரும்.....

by Swathi   on 22 Sep 2014  0 Comments
Tags: Siddha Maruthuvam   Selva Shunmugam   சித்த மருத்துவம்   சித்த மருத்துவ குறிப்புக்கள்   சித்தர்கள் குறிப்புகள்   Siddha Maruthuva Kurippugal     

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44 நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.