LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : காலை உணவு – 16

காலை உணவு

உடல் நலத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பது உணவு. நோய் இன்றி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஒழுக்கமான உணவு முறை அவசியம். திருவள்ளுவர் மருந்து எனும் அதிகாரத்தில் மொத்தமுள்ள பத்து பாடல்களில் ஆறு பாடல்கள் உணவு பற்றியே இயற்றியுள்ளார். உணவு பற்றி முழுமையாகவும் தெளிவாகவும் நாம் வேறு ஒரு அத்தியாயத்தில் பார்க்கப் போகின்றோம். இப்போது நாள் ஒழுக்கம் என்கிற தலைப்பில் ஒரு நாள் முழுவதும் நாம் செய்ய வேண்டிய செயல்களில் காலை உணவின் முக்கியத்துவம் பற்றி மட்டும் இங்கே பார்க்கப் போகின்றோம்.

காலை உணவு பற்றி பல தவறான கருத்துக்கள் மக்களிடையே உள்ளன. சரியான தகவல்கள் பலருக்குத் தெரிந்திருந்தாலும் வேலை, சூழ்நிலை காரணமாக அவற்றை செயல்படுத்த முடிவதில்லை. காலை உணவினைப் பற்றிய தெளிவான கருத்துக்களை இங்கே பார்க்கலாம்.

காலை உணவினை யாரும் தவிர்க்கக் கூடாது. உண்ணா நோன்பு (விரதம்) இருக்கும் காலம் தவிர்த்துக் கொள்ளலாம்.


காலை உணவு எப்போது சாப்பிட வேண்டும் ?


சூரியன் உதயமான நேரத்திலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள்ளாகக் காலை உணவு சாப்பிட வேண்டும். சூரிய உதயத்திலிருந்து 6 மணி நேரத்திற்குள் நமக்கு செரிமான ஆற்றல் அதிகமாக இருக்கும் என சித்தர்கள் கூறியுள்ளார்கள். அந்த நேரத்தில் உடலிற்கு ஊட்டமளிக்கும் சத்தான உணவுகளை உண்ண வேண்டும். சிலர் இரவு நேர வேலை காரணமாக தாமதமாக உறங்கச் சென்று தாமதமாக எழுவார்கள். அது போன்ற வேளைகளில் உறங்கி எழுந்த பின்பு இரண்டு மணி நேரத்திற்குள் உண்ண வேண்டும். ஒரு வேளை இரவு முழுவதும் வேலை பார்க்க வேண்டிய சூழல் இருந்தால் வேலை முடிந்ததும் குளித்துவிட்டு உணவு உண்ண வேண்டும். பின் குறைந்தது ஒன்றரை மணி நேரம் கழித்து உறங்க வேண்டும். அதிகாலையிலேயே வேலைக்குச் செல்பவர்கள் கஞ்சி, பழச்சாறு, காய்ச்சாறு, மோர், நீராகாரம் போன்ற திரவ உணவுகளை அருந்தலாம்.


காலை உணவு விடுபடக் காரணம் என்ன ?

1. உடல் எடை குறைப்பதற்காகச் சிலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். காலை உணவைத்  தவிர்ப்பதால் எடை குறைவதற்குப் பதிலாகக் கூடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

2. தாமதமாக விழிப்பதால் காலையில் பசி ஏற்படுவதில்லை. துயில் எழுதல் என்ற தலைப்பில் கூறியபடி அதிகாலையிலேயே எழுவதால் காலை பசி ஏற்படுவதுடன் உணவின் ஊட்டச்சத்துகள் முழுமையாக உடலில் சேரும்.

3. படபடப்பு, மனப்பதற்றம் ( Anxiety Disorders ) போன்ற நிலையில் பசி ஆர்வம் குறையும். குறிப்பாக காலை பசி இருக்காது. யோகப் பயிற்சிகளால் பதற்ற நிலையினை நீக்கிய பின்பே இயல்பாகப் பசி ஏற்படும்.

4. வேலை, படிப்பு போன்ற ஏதோ காரணங்களைச் சொல்லி உணவைத் தவிர்த்தல் பலருக்கு வழக்கமாக் உள்ளது. காலை உணவிற்காக் 20 நிமிடங்கள் கண்டிப்பாக ஒதுக்கிவிடல் வேண்டும். உண்ணும் போதும் வேலைகளைப் பற்றி எண்ணாமல் உணவில் முழு கவனத்தை வைத்து நன்றாக சுவைத்து உண்ணல் வேண்டும்.

5. காலை உணவைத் தவிர்ப்பதற்கு சோம்பல் ஒரு காரணமாக உள்ளதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இயங்க காலை உணவு முக்கியம் என்ற எண்ணத்தோடு சோம்பலை நீக்கி விடல் வேண்டும்.

பல நோய் நிலைகள் இதற்குக் காரணமாக உள்ளன. அவற்றிற்குத் தகுந்த மருத்துவம் செய்வது இந்த நிலையினை மாற்றும்.

என்ன சாப்பிட வேண்டும் ?

1. காலை உணவில் கொழுப்பு, எண்ணெய் இல்லாமலோ அல்லது மிகக் குறைந்த அளவிலோ இருக்க வேண்டும். அதிகக் கொழுப்பு, மந்தம் ஏற்படுத்தும் பொருட்கள் காலையில் இருந்தால் மூளை செயல்பாடு குறையும். மனக்குவிப்புத் திறனையும் குறைக்கும்.

2. முளைகட்டிய பயிறு வகைகள், பழங்கள், கீரை, காய், தேங்காய் போன்றவற்றாலான உணவுகள் அதிகம் இருக்க வேண்டும்.

3. அதிகமான நார்ச்சத்தும் ஊட்டச்சத்துக்களும் இருக்க வேண்டும். உணவில் குறைந்த அளவு கலோரி இருக்க வேண்டும். பழங்கள், பாதம், தேங்காய், இஞ்சி, கீரைகள் கலந்து அரைத்த கூழ்மக் கலவை மிகச்சிறந்த காலை உணவாகும்.

4. முளைகட்டிய பாசிப் பயிறுடன் பச்சைப்பயிறு, இஞ்சி, பூண்டு, சிறிய வெங்காயம், நாட்டுத்தக்காளி, சீரகப்பொடி, சிறிது உப்பு, மோர் கலந்து அரை நேரம் ஊறவைத்து உண்ணலாம். இது எல்லாமே பச்சையாக வேக வைக்காமல் இருப்பதால் முதலில் குறைந்த அளவே உண்ண வேண்டும். படிப்படியாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம்.

5. எடை குறைக்க விரும்புபவர்கள் தேங்காய், பழம், கீரைச்சாறு, மட்டும் காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

6. உளுந்து, வெந்தயம், சுக்கு, பூண்டு, பனைவெல்லம், தேங்காய்ப்பால் கலந்து செய்த கஞ்சி சிறந்த காலை உணவாகும்.

7. இட்லி, தோசை போன்றவை செய்வதாக இருந்தால் தோலுடன் உளுந்தை ( கறுப்பு உளுந்து ) ஊறவைத்து வெந்தயம் சேர்த்து அரைத்து பயன்படுத்த வேண்டும். கட்டாயம் வேகவைத்த காய், தேங்காய் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.

8. பாசிப்பருப்பு, அரிசி, இஞ்சி, சீரகம், நல்லெண்ணெய் சேர்த்து செய்யும் பொங்கலுடன் தேங்காய் சட்னி வேக வைத்த காய் சேர்த்து ஊட்டமான காலை உணவை செய்து கொள்ளலாம்.

9. 3 அல்லது 4 விதமான பழங்களை வெட்டிப்போட்டு தேன், இஞ்சித்துண்டுகள், ஊறவைத்த வேர்க்கடலை, தேங்காய்த்துருவல், மிளகுத்தூள், சிறிது உப்புத்தூள் கலந்து 15 நிமிடம் ஊறவிட்ட பின்பு சாப்பிடலாம்.

10. நவதானியக் கஞ்சியுடன் ஏலக்காய், கிராம்பு, பனைவெல்லம், தேங்காய்த் துருவல், பழத்துண்டுகள் கலந்து சாப்பிடலாம்.

11. ஊட்டமுள்ளதாகவும் மந்தம் ஏற்படுத்தாததாகவும் உள்ள தமிழர் உணவுகள் ஏராளம் உள்ளன. அவற்றை நம் பெரியோர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டு பயன்படுத்தல் வேண்டும்.

காலை உணவின் பலன்கள்


1. நாள் முழுவதும் நலமுடன் வேலை செய்வதற்குக் காலை உணவு முக்கியக் காரணமாக அமைகிறது.

2. சிறந்த நினைவாற்றல் ஏற்படவும், மூளை சுறுசுறுப்புடன் செயல்படவும் மனதின் ஆற்றல் மேம்படவும் முக்கியமான முடிவுகளை விரைவாக எடுப்பதற்கும் சிறந்த காலை உணவு உதவுவதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

3. பசி உணர்வு சீராக இருப்பதற்கும், சீரண மண்டலம் சிறப்பாகச் செயல்படவும் வளர்சிதை மாற்ற நிகழ்வுகள் இயல்பாக நடக்கவும் காலை உணவு உதவுகின்றது.

4. காலை உணவு உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்கின்றது. காலையில் ஊட்டமான உணவு உண்பதால் பசி உணர்வு சீராகி மதியம் இரவு உணவின் அளவு கட்டுப்பட்டு உடல் எடை கூடுவது கட்டுப்படுகிறது. தொப்பை ஏற்படுவதும் ( வயிறு மட்டும் பெரிதாவது ) தடுக்கப் படுகின்றது. காலை உணவு குறைந்தால் அல்லது சாப்பிடாமல் விட்டால் மதிய உணவு அதிகம் உண்ண வேண்டிய அவசியம் உடலிற்கும் மனதிற்கும் ஏற்படுகின்றது. இதனால் சீரான செரிமானமும் வளர்சிதை மாற்ற நிகழ்வுகளும் பாதிக்கப் படுகின்றது. வயிறு குடல் பகுதிகளில் காற்று தங்கி வயிற்று உப்புசம் ( Floating Abdomen ) ஏற்படுகின்றது. பல அடுக்கு ஆய்வுகள் காலை உணவின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. அவற்றில் முக்கியமானது உடல் பருமன் கட்டுப்படுவது. காலை உணவினை நார்ச்சத்துடனும் ஊட்டத்துடனும் உண்பதால் கட்டுடல் ஏற்படுவது பல ஆய்வுகளில் உறுதி செய்யப் பட்டுள்ளது.

5. காலையில் தொடர்ச்சியாக கீரை உணவினை உண்பதால் ஒருவரின் செயல் மேம்படுகின்றது. வாழ் நாள் முழுவதும் ஊக்கத்துடன் செயல்பட முடிகிறது. உயர்ந்த குறிக்கோளை அடைய அது வழி வகுக்கிறது.

6. நீண்ட நாட்கள் நோயின்றி வாழ வழியாகின்றது.

7.முறையான காலை உணவால் இரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். பல ஆய்வுகள் ஊட்டமான காலை உணவால் சர்க்கரை நோய் கட்டுபடுவதை உறுதி செய்கின்றது. இன்சுலின் ( Insulin ) செயல்பாடு மேம்படுவதற்கும் இது உதவியாகின்றது ( Prevents Insulin resistance ).

8. இரத்த ஓட்டம் சீராகி அதிக இரத்த அழுத்தம் ( Hyper tension ) கட்டுப்படுவதற்கு காலை உணவு உதவுகிறது. இதனால் இதய நோய் மூளை பாதிப்பு வருவது தடுக்கப் படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் பல நோய்கள் வருவதைக் காலை உணவு தடுக்கின்றது. ஒவ்வொரு நாளும் உண்ணும் ஊட்டமான காலை உணவு வாழ் நாள் முழுமையும் நம்மைக் காக்கும்.


நலப்பயணம் தொடரும்........

by Swathi   on 29 Dec 2014  0 Comments
Tags: Siddha Maruthuvam   சித்த மருத்துவம்   காலை உணவு   Break Fast   Kaalai Unavu   Kalai Unavu     

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44 நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.