LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51

அளவிற்கு அதிகமான உடற்பயிற்சி தீமை உண்டாக்கும் 

முறையான வழிகாட்டுதல் இல்லாமல் செய்யப்படும் தொடர் பயிற்சிகள், தொடர் ஓட்டம் (Multiple marathons) போன்றவை உடலிற்குக் கேட்டினை உண்டாக்கும். உள் உறுப்புகளின் தசை பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக இதயத் தசை இயக்க மாறுபாடுகள் ஏற்படும்.

காவல்துறை, பாதுகாப்புத் துறைகளில் ஈடுபட விரும்புவோர் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுவார்கள். அவர்கள் முறையான ஆலோசனையோடு போதுமான ஓய்வு எடுத்து பயிற்சி செய்தல் வேண்டும். குறுகிய காலத்தில் அளவிற்கதிகமாக பயிற்சி செய்யக் கூடாது. படிப்படியாக பயிற்சியினைக் கூட்டி உடலிற்குப் பழக்கப்படுத்த வேண்டும். இல்லாவிடில் உடல் எதிர்ப்பாற்றல் குறைவு, அடிக்கடி மார்புச்சளி பிடித்தல், சுரம் போன்றவை ஏற்படும். இதற்கு வருத்தும் உடற்பயிற்சியினால் ஏற்படும் நோய்நிலை (Over Training Syndrome) என்று பெயர்.

இது போன்று தொடர் பயிற்சியில் ஈடுபடும் போது அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களின் அறிவுரையும் மருத்துவ அறிவுரையும் அவசியம்.

மிதமாகச் செய்யப்படும் நடைபயிற்சி, தோட்டப் பராமரிப்பு, நீச்சல் போன்றவற்றால் பாதிப்புகள் ஏற்படும் என்கிற அச்சம் தேவையில்லை.

ஒரு  நாளில் தொடர்ச்சியாகப் பணிபுரிவதால் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் மன அழுத்தங்களையும் நீக்குவதாக உடற்பயிற்சி அமைய வேண்டும். உடல் உழைப்பின்றி அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு (Sedentary Lifestyle) உடற்பயிற்சி அவசியம். அது அளவிற்கு அதிகமாகச் சென்று உடலை வருத்துவது போன்றிருக்கக் கூடாது.

எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

வயதிற்குத் தகுந்தாற்போலும் உடல் உழைப்பிற்குத் தகுந்தாற்போலும் உடல் வாகிற்குத் தகுந்தாற்போலும் (Age, work and body constitution) உடற்பயிற்சி நேரம் மாறுபடும்.

6 வயது முதல் 18 வயது வரை.

ஓடி விளையாடும் பருவம். ஒரு நாளிற்குக் குறைந்த பக்கம் 1 மணி நேரம் மாலை வெயிலில் விளையாட வேண்டும். அதில் ஓடுதல், தாண்டுதல், துள்ளிக் குதித்தல், உயரம் ஏறுதல் (கயிறு பிடித்து ஏறுதல்) போன்றவற்றை அடக்கிய விளையாட்டுக்களாக இருத்தல் வேண்டும். உடல்  உழைப்புடன் மூளைக்கு வேலையும் கொடுப்பது போன்ற விளையாட்டுக்களை மாணவர்கள் விளையாடுவதால் அவர்களின் கற்கும் திறன் பல மடங்கு மேம்படும். மேலும் அவர்களுக்குப் பிற்காலத்தில் சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, உடல் பருமன், இதய நோய்கள், புற்று நோய்கள் வரும் வாய்ப்பு பெருவாரியாகக் குறையும்.

தொலைக்காட்சி, சினிமா, மின்சாதன விளையாட்டுக்கள் போன்றவற்றைத் தவிர்த்து விடுதல் வேண்டும். அவற்றை பொழுது போக்காகக் கொண்டு விட்டால் பல கேடுகள் தொடரும்.

19 வயது முதல் 60 வயது வரை:

ஒரு நாளிற்கு குறைந்த பக்கம் 20 – 30  நிமிட உடற்பயிற்சி அவசியம். 40 வயதைத் தாண்டியவர்கள் உடல்நிலையைப் பொருத்து பயிற்சிக் கால அளவினைக் கூட்டிக் கொள்ளலாம். எந்த உடல் பிரச்சனைகளும் இல்லையெனில் 20 நிமிட துரிதப் பயிற்சியே போதுமானது. இரவு உறங்கும் முன் 15 நிமிட குறு நடை (சிறிய எட்டு வைத்து மெதுவாக நடத்தல்) அவசியம்.

61 வயதிற்கு மேல்

20 நிமிடத் துரிதப் பயிற்சியும் நடைபயிற்சியும் அவசியம். 40 நிமிடத்திலிருந்து 50 நிமிடம் மெதுவாக நடந்தால் போதுமானது.

படி ஏறும்போதோ உயரமான பகுதிகளில் ஏறும்போதோ மார்பு வலி, பெருமூச்சு, அதிக வியர்வை, மயக்கம் ஏற்பட்டால் உடனடியான மருத்துவ ஆலோசனை அவசியம்.

உடற்பயிற்சியால்

1. மாரடைப்பு வருவதை 35% தடுத்துவிட முடியும்,

2. சர்க்கரை நோயினை 50% தடுத்துவிட முடியும்,

3. மூட்டுக்களில் ஏற்படும் நோய்களை (Arthritis) 85% தடுத்தவிட முடியும்,

4. மார்பகப் புற்றுநோயை (Breast cancer) 20% தடுத்தவிட முடியும்,

5. குடல் புற்றுநோயை 50% தடுத்தவிட முடியும்,

6. எலும்பு முறிவுகளை (எலும்பு பலப்படுவதால்) 60% தடுத்தவிட முடியும்,

7. மன அழுத்தத்தையும் நினைவு குறைவையும் (Depression and Dementia) 30% தடுத்தவிட முடியும்,

என ஓர் ஆய்வு நமக்குத் தெரிவிக்கின்றது.

தகுந்த அனுபவ அறிவின் துணையோடு செய்யப்படும் உடற்பயிற்சி பல நோய்களைத் தடுப்பதோடு நீண்ட நலமான ஆயுளைக் கொடுக்கும்.

 

 

by Swathi   on 14 Sep 2015  0 Comments
Tags: Exercise   Exercise Benefits   உடற்பயிற்சி   சித்த மருத்துவம்   Siddha Maruthuvam   Over Exercising   Udarpayirchi  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44 நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.