LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாம்பூலம் – வெற்றிலை போடும் பழக்கம் – 30

தாம்பூலம் – வெற்றிலை போடும் பழக்கம்

தமிழர்களின் முக்கியமான பல பழக்கங்களில் தாம்பூலம் தரித்தலும் (வெற்றிலை போடுதல்) ஒன்று. திருமணம், திருவிழாக்கள், குழந்தை பிறந்த வீடு, வளைகாப்பு போன்ற தமிழர் விழாக்களில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு இரண்டு வெற்றிலையும் ஒரு கொட்டைப்பாக்கும் கட்டாயம் வழங்கப்படும். விருந்து முடிந்தவுடன் பொதுவான இடத்தில் வெற்றிலை, பாக்கு, சுண்ணம் வைக்கப்படும். பெரியவர்கள் அங்கே கூடி அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டே விழா நிகழ்சிகளையும் உலக நடப்புகளையும் பேசிக் கொண்டிருப்பார்கள். இப்போதும் கூட தென் தமிழகத் திருமண விழாக்களில் இந்தக் காட்சியினைக் காண முடியும்.

வெற்றிலை போடுதல் நல்லதா ? கெட்டதா ? என்கிற விவாதம் இன்னும் பல தளங்களில் பல நிகழ்ந்து கொண்டுள்ளது. சித்தர்கள் கூறிய விதிப்படி வெற்றிலை போடுதல் உடலிற்கு பல நன்மைகளை உண்டாக்கும்.

அதனை விடுத்து தன் விருப்பப்படியோ முறையற்றோ வெற்றிலை போடுவதால் கேடு உண்டாகும்.

பெரு நகரங்களில் வெற்றிலை போடுதல் என்றால் தயாராக வைத்திருக்கும் வெற்றிலைக் கலவையை (வெற்றிலை, பாக்கு, சுண்ணம், செயற்கை இனிப்பு சில வேளை நச்சு வேதிப் பொருட்கள், போதைப் பொருட்கள் கலந்த கலவை) வாயில் போட்டு சுவைத்துக் கொள்ளுதல் என்று தான் பொருள் படுகின்றது. பல இடங்களில் இது அங்கீகரிக்கப்பட்ட போதைப் பொருளாக (பீடா) மக்களிடையே கலந்துள்ளது. சில இடங்களில் பாக்குடன் போதைப் பொருட்கள் கலக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுடன் கலந்து விட்டிருக்கின்றது. இவை தவிர்க்கப் படவேண்டும்.

சித்தர்களின் வெற்றிலை போடும் விதி
    
வெற்றிலை, பாக்கு, சுண்ணம் இவைகளுடன் ஏலக்காய், கிராம்பு, சுக்கு, வால் மிளகு, சாதிக்காய், சாதி பத்ரி, காய்ச்சுக்கட்டி போன்ற பொருட்களில் ஏதேனும் ஒன்றையோ அல்லது எல்லாவற்றையும் கலந்து மென்று சாப்பிடுவதை தாம்பூலம் தரித்தல் எனலாம். இந்த வாசனைப் பொருட்களை பாக்குடன் கலந்து இளம் வறுப்பாக வறுத்தும் பயன்படுத்தலாம்.

இதற்காகத் தேர்ந்தெடுக்கும் பொருட்கள் தரமானதாக இருத்தல் வேண்டும்.

தரமான இளம் வெற்றிலையினால் குரல் கம்மல், வயிறுவலி, வயிற்றில் தங்கியுள்ள காற்று நீங்கும். உயிர் ஆற்றல் (வளி. அழல், ஐயம்) சீராகும். வாயில் நறுமணத்தை உண்டாக்கும்.

பாக்கினைத் தனியாக பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் மார்பில் கோைழ கட்டும். மந்தமுண்டாகும். வெற்றிலையுடன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

முதலில் பாக்கை மென்று தின்று விட்டு பின்பு வெற்றிலையுடன் சுண்ணாம்பு தடவி மெல்லும் பழக்கம் பரவலாக உள்ளது. இது தவறு. இதனால் வாய் மற்றும் சீரணப் பாதையின் நுண்ணிய துவாரங்கள் சுருங்கி நீர் சுரப்பு தடைபடும். மார்பில் காற்றடைத்துக் கொணடது போன்ற உணர்ச்சி ஏற்படும். எனவே முதலில் தனி வெற்றிலையை மென்று பிறகு வெற்றிலை, சுண்ணம், பாக்குக் கலவையை மென்று தின்ன வேண்டும்.

சுண்ணாம்பிற்கு சீரணத்தை மேம்படுத்தும் ஆற்றல் உண்டு. குடலில் நாட்பட தங்கியுள்ள கழிவுகளை நீக்கும். பற்கள், எலும்புகள், பிற உடற்கட்டுகளுக்கு வன்மையைக் கொடுக்கும்.

வெற்றிலையுடன் பயன்படுத்தும் பிற பொருட்களால் மன மகிழ்ச்சியும், முகப்பொலிவும், வாய் தூய்மையும், பல் இறுக்கமும், குடல் தூயமையுண்டகும்.

முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியது.இங்கே கூறப்பட்ட பொருட்கள் கலந்த கலவையான தாம்பூலத்தை மெல்லும் போது உமிழ்நீருடன் கலந்து முதல் முதலில் உருவாகும் நீர் நஞ்சாகும். எனவே அதனைத் துப்பிவிடல் வேண்டும். இரண்டாவதாக ஊறும் நீர் புத்தி மந்தத்தை ஏற்படுத்தும். எனவே அதனையும் துப்பி விடல் வேண்டும். இதற்கு அடுத்த படியாக மூன்றாவது ஊறும் நீர் அமிர்தமாகும் (உடம்பினையும் மனதையும் வலுவாக்கும்). அதனை அப்படியே விளுன்கிவிடல் வேண்டும். நான்காவது ஊறும் நீர் மிகவும் இனிப்பானதாய் இருக்கும். இதுவும் நன்மையுண்டாக்கும். அதன் பின்பாக வாயிலுள்ள கலவையை துப்பிவிட்டு வாய் கொப்பளித்து விடல் வேண்டும். தாம்பூலத்தால் ஏற்படும் உமிழ்நீர்க் கலவையை சித்தர்கள் மிக மிக நுட்பமாக ஆராய்ந்து மேற்கூறிய தெளிவான கருத்துகளை நமக்குத் தெரிவித்திருக்கின்றார்கள். இந்த முறை மாறாமல் தாம்பூலம் தரித்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என ஒரு சித்தர் பாடல் நமக்கு விளக்குகின்றது.


    தக் கோலந் துவரு ரைப்பு கார மாமச்
        சாரங் கடாய மதிற் சில தோடம் போம்
    நிற்காது கிருமி யையந் தாகம் பன்னோய்
        நிறை பசியா மாதா குழா நெருங்கு மேலும்
    மிக்கான சுவை யுதரஞ் சுத்தியாகும்
        விடாய் நீங்கு மறி வொளிருந்     தாதுமுண்டா
    மெக்காலு தரும மெய்துங் தலையுஞ் சேரு
        மெக்கரு மங்கட்கு மிஃது தவுங் காண்.

வெற்றிலை போடும் பழக்கத்தால் உடலின் தோடங்கள் (துன்பங்கள், குற்றங்கள்) நீங்கும். உடலில் நுட்பமாக தங்கி துன்பம் விளைவிக்கும் கிருமிகள் நீங்கும். மார்பில் கட்டியுள்ள சளி, தொண்டைக்கட்டு நீங்கும். நாவறட்சி, தாகம் தீரும். பசி உணர்ச்சி இயல்பாகும். ஆண் பெண் உறவு இன்பத்தை மேம்படுத்தும். நாக்கின் தன்மையை மேம்படுத்தி சுவையுணர்ச்சியை சீர்படுத்தும். வயிறு, குடல் பகுதிகள் தூய்மையாகும். மலச்சிக்கல் தீரும். சிறந்த அறிவு உண்டாகும். தரும குணம் (துன்பப்படும் பிறருக்கு உதவும் குணம்) மேம்படும். ஏழு உடற்கட்டுக்களும் வலிமையடையும் என சித்தர் பாடல் நமக்குத் தெரிவிக்கின்றது.

சித்தர் பாடல் இப்படிக் கூறும் போது பல இக்கால ஆய்வுகள் இதனை பயன்படுத்தக் கூடாது என்ற முறையில் முடிவுகளைத் தெரிவிக்கின்றன. இவற்றை ஆய்ந்து தெளிவது நம் கடமை.

தெளிவு

1. இந்த ஆய்வுகள் எல்லாம் சித்தர் விதிப்படி வெற்றிலை போடும் பழக்கத்தை ஆய்வு செய்ததாகத் தெரியவில்லை.

2. நாம் இங்கே கூறியுள்ள பொருட்கள் யாவும் தனித்தனியே நன்மை பயப்பதாக உள்ளன. பாக்கு ஒன்று மட்டும் தனியாக பயன்படுத்தக் கூடாது என சித்தர்களே கூறியுள்ளனர். அதிலும் வேதிப் பொருள் கொண்டோ போதைப் பொருட்கள் சேர்த்தோ பதப்படுத்தப்பட்ட பாக்கு வாய்ப்புற்றினை உண்டாக்குவதாயுள்ளது. அப்படிப்பட்ட பாக்குதான் கேட்டினை விளைவிக்கும் என பல ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

3. சித்தர் விதிபப்டி முதலில் ஊறும் உமிழ்நீர், இரண்டாம், மூன்றாம் நான்காம் நீர் என பிரித்து எந்த ஆய்வும் நடக்கவில்லை. அந்த கருத்தே இக்கால ஆய்விற்குப் புதிது. பொதுவாக வெற்றிலை போடும் பழக்கமுடையவர்களில் வாய்ப்புற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்ற கருத்து தெரிவிக்கப் படுகின்றது. சித்தர் முறைப்படியான தாம்பூலம் தரிக்கும் பழக்கத்தால் வாய்ப்புற்று, குடல்புற்று ஏற்படுவது தடுக்கப்படும்.

பொதுவாக சித்தர் முறைப்படியான தாம்பூலத்தால் (வெற்றிலை போடுவதால்) ஏற்படும் நன்மைகள்:

1. உமிழ் நீர், சீரண நீர், இயக்கு நீர்களின் உற்பத்தி சீராவதால் சீரணம் தடையில்லாமல் நிகழும். பசி உணர்வு இயல்பாகும். உண்ணும் உணவு முழுவதும் உடலால் உட்கிரகிக்கப்படும்.

2. கழிவு நீக்கம் சீராக நடைபெறும். மலச்சிக்கல் நீங்கும். நாட்பட்ட உடலில் தங்கியுள்ள நஞ்சுகள் நீங்கும். உயிர்வளி யேற்றத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகள் (Oxidative damages) தடுக்கப்படுகின்றன.

3. எப்போதும் வாய் தூய்மையாக இருப்பதற்கு உதவுகின்றது. தாம்பூலத்தில் கலந்துள்ள பொருட்களுக்கு நுண்ணுயிரிகளை அழிக்கும் (Microbial) ஆற்றல் உண்டு. அதே சமயம் நன்மையுண்டாக்கும் உடல் கிருமிகளை பாதுகாக்கும். எனவே வாய் துர் நாற்றம் நீங்குகின்றது. வாய் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். வாய், பல், வயிறு, நாக்கு, தொண்டை தொடர்பான நோய்கள் அணுகாமல் பாதுகாக்கும்.

4. வாய், வயிறு, குடல் புற்றுகளைத் தடுக்கின்றது. தாம்பூலத்தில் கலந்துள்ள பொருட்கள் முற்றுப்பெறா அயனிகளை (Free radicals) வேகமாக வெளியேற்றுவதால் புற்றுக்கள் தடுக்கப் படுகின்றன.

5. வயிற்றுப் புண்கள் ஏற்படுத்தும் காரணிகளை (Toxins, H. Pylori)  நீக்கும் ஆற்றல் தாம்பூலத்திற்கு இருப்பதால் வயிறு பாதுகாக்கப் படுகின்றது.

6. வெற்றிலை போடும் போது திப்பிலி சேர்த்துக் கொண்டால் அது மூச்சுப்பாதைக் கோளாறுகளைத் தடுக்க வழிவகை செய்கிறது. இதனால் தும்மல், மூக்கடைப்பு, மார்புச்சளி, இரைப்பு (Bronchospasm) போன்ற பிரச்சனைகள் விரைவில் தீரும். மார்பில் கற்பூர எண்ணெய் தடவி வெற்றிலையை சூடுபடுத்தி மார்பு முதுகுப் பகுதிகளில் ஒற்றடமிட்டால் பலன் மேலும் கூடும். எந்த மருத்துவம் மேற்கொண்டிருந்தாலும் இதனையும் செய்யலாம்.

7. தூய்மையான சுண்ணாம்பு தாம்பூலத்தில் கலந்திருப்பதால் பல், எலும்பு, தசை, மூளைக்கு பலத்தைக் கொடுக்கும்.

8. தாம்பத்திய இன்பத்தை மேம்படுத்தும். குறிப்பாக புதிதாகத் திருமணமானவர்கள் பயன்படுத்தும் போது ஆரம்பகால தொடர்புத் தடைகளை நீக்க உதவும். ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையையும் (Sperm Count) வீரியத்தையையும் மேம்படுத்தும். பெண்களுக்கு பூப்பு சுழற்சிக் குறைகளை நீக்கி ஆர்வத்தை உயர்த்தும். குழந்தைப் பேற்றினை உண்டாக்கும்.

9. தைராய்டு சுரப்புகளை சீர்படுத்தும்.

10. தாய்ப்பால் சுரப்பினை அதிகப்படுத்தும்.

11. உடல்பருமன், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சித்த மருத்துவர் உதவியுடன் சில மருத்துவப் பொருட்களை சேர்த்து பயன்படுத்தும் போது நன்மை அடையலாம்.

12. மூளையின் ஆற்றல் மேம்படும். புதிய நுண்கலைகளை எளிதாகக் கற்றுக் கொள்ளும் திறன் உயரும். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கச் செய்யும். நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

உலகம் முழுவதும் ஏராளமானோர் வெற்றிலை போடும் பழக்கமுடையவர்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சித்தர்கள் கூறும் நுட்பமான முறையினை அவர்கள் எல்லோரும் பின்பற்றினால் பல நன்மைகளை அடைய முடியும். ஒருநாளில் ஒரு முறை எல்லோரும் தாம்பூலம் தரிக்கலாம். நேரத்தினை அவர்கள் வேலைகளுக்குத் தகுந்தார்போலும் தேவைகளுக்குத் தகுந்தார்போலும் மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

நலப்பயணம் தொடரும்.........................................

by Swathi   on 06 Apr 2015  0 Comments
Tags: Siddha Maruthuvam   Areca nut   Betel Nut Uses   சித்த மருத்துவம்   வெற்றிலை பாக்கு   வெற்றிலை மருத்துவ குணங்கள்   வெற்றிலை பாக்கு மருத்துவ குணங்கள்  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44 நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.