LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் – 37

கதிரவனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயணம்) தெற்கு நோக்கிய நகர்வு (தட்சிணாயணம்) காலங்களில் உடல் நலம்

 

கதிரவனின் நகரும் திசையினை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆண்டினை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். கதிரவன் கிழக்கு திசையில் ஒவ்வொரு நாளும் சிறிது மாறுபட்ட இடத்திலேயே உதிக்கும். பூமியின் சுழற்சியே இதற்கு அடிப்படை. இவ்வாறு ஒவ்வொரு நாளும் கதிரவன் உதிக்கும் இடம் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தால் அது வடநோக்கிய நகர்வு காலம் (உத்தராயணம்) என்றும் அதுவே தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தால் தெற்கு நோக்கிய நகர்வு (தட்சிணாயணம்) காலம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆகிய ஆறு மாதங்களும் கதிரவனின் வடநோக்கிய நகர்வு காலமாகும். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்களும் கதிரவனின் தெற்கு நோக்கிய நகர்வு காலமாகும்.

 

கதிரவனின் வடக்கு நோக்கிய காலத்தின் தன்மை:

             “ வடக்குச் செலவாய் வழங்கும் பொழுதில்

               திடமுடன் ஞாயிறு தீய்க்கும் – உடலுரம்போம்

               ஈர்த்திடும் பூசார மெல்லா மதனால்

               ஓர் போக்கிக் கால முரம்”

கதிரவனின் வட நோக்கிய நகரும் காலம் அனல் மிகுந்திருக்கும் காலமாகும். இக்காலத்தில் சுற்றுப் புறத்தில் சூடுடன் காற்றும் மிகுந்து இருக்கும். இதனால் உடல் வலிமை மிகவும் குறையும். உடல் வறட்சி கூடும். இக்காலத்தில் உயிரினங்களின்  வலிமையும் குறையும்.

 

என்ன செய்ய வேண்டும் ? 

 

1. மார்கழி மாதத்திலேயே (தட்சிணாயன முடிவு) உடலைப் பாதுகாக்கத் தொடங்குதல் வேண்டும். உடல் வலிமையைக் குறைய விடாத முயற்சிகளை அம்மாதத்திலேயே செய்ய வேண்டும்.  

 

2. மார்கழி மாதம் கண்டிப்பாக அதிகாலை 4.30 மணிக்குத் துயிலெழுதல் வேண்டும். 

 

3. ஓகப் (யோகப்) பயிற்சிகளை அதிகாலையிலேயே செய்தல் வேண்டும். அவற்றில் முக்கியமானது வளிநிலைப் பயிற்சி (பிராணாயாமம்) 

 

4. ஏதேனும் ஒரு காய கல்ப மூலிகையினை உடலிற்கு ஏற்றாற்போல் எடுத்துக் கொள்ள வேண்டும். காட்டாக துளசி, வேம்பு, வில்வம், கரிசாலை, பொன்னாங்கண்ணி.  

 

5. எண்ணெய்க் குளியல்: அந்தந்த சிறு பொழுது காலத்திற்கு ஏற்றார்போல மூலிகைகள் கலந்து காய்ச்சிய எண்ணெய் பயன்படுத்த வேண்டும். 

 

6. கதிரவனின் வடக்கு நோக்கிய நகர்வு காலத் தொடக்கத்தில் வாந்தி மருத்துவம் மேற்கொள்ளல் வேண்டும். 

 

7. பசி ஆர்வம் இக்காலங்களில் குறைந்திருக்கும். அதனால் முக்குற்ற சமப்பொருட்களை (வளி, அழல், ஐயம் - என்கிற உயிராற்றலை சமப்படுத்தும் பொருட்களாகிய சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், ஏலக்காய் போன்றவை) அதிகம் பயன்படுத்த வேண்டும். 

 

8. எண்ணெய் கொப்புளித்தல் வாரம் 2 முறை செய்தல் வேண்டும். (வாய்த் தூய்மைப் பகுதியைக் காண்க) 

 

9. வாரம் 2 முறை எண்ணெய் அல்லது மூலிகைச் சாற்றினை விடுதல் வேண்டும் (கண் பாதுகாப்பு என்ற பகுதியினைக் காண்க) 

 

10. இக்காலங்களில் இளம் வெயிலில் நடை பயிற்சி, ஓகப் பயிற்சி போன்ற பயிற்சிகளை செய்வதால் உடல் வன்மை மிகும். வெயிலும் காற்றும் அதிகமாக இருக்கும் நேரங்களில் பாதுகாப்பான இடங்களில் தங்குதல் வேண்டும்.

 

கதிரவனின் தெற்கு நோக்கிய காலத்தின் தன்மை :

                   “தென் திசைப் போக்கெனச் செப்பிடுங் காலத்தில்

                    துன்றிய கார்முகில் தூற்றலால் – பொன் திகழ்

                    ஞாயிற்றின் வெம்மையும் நானிலங் கால் சூடும் போய்

                    ஆயிடும் தட்பமறி”

இக்காலத்தில் எல்லா வகையான நிலங்களிலும் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்) உள்ள சூடு மாறி குளிர்ச்சி யடையும்.

 

பூமியில் கதிரவனின் வெப்ப ஆட்சி மாறி நிலவின் ஆட்சி ஓங்கி யிருக்கும்.

 

இக்காலத்தில் உடலின் வலிமை மேம்பட்டிருக்கும். அது போலவே எல்லா உயிரினங்களின் வலிமையும் உயர்ந்திருக்கும். ஏதேனும் ஒரு காரணத்தால் மனித உடலின் வலிமை குறைந்திருந்தால் ஏற்படக்கூடிய நோய்களின் வலிமையும் மிகுந்திருக்கும். எனவே பிற நுண்ணுயிர்களின் மூலம் பரவும் நோய்கள் தொற்றாதவாறு பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். (நுண்ணுயிர்களின் வலிமையும் இக்காலத்தில் மிகுந்திருக்கும்)

 

வடக்கு நோக்கிய நகர்வு காலத்தில் தொற்றாத நோய்கள் (Non – Communicable diseases) பரவும். தெற்கு நோக்கிய காலத்தில் தோற்றும் நோய்கள் (Infectious diseases) அதிகம் பரவும். எனவே தோற்று நோய்த் தடுப்பு முறைகளை மட்டும் இக்கால கட்டத்தில் பின்பற்ற வேண்டும். மேலும் பொதுவான கால ஒழுக்கங்களை அந்தந்த காலத்திற்குத் தகுந்தாற் போன்று கடைபிடிக்க வேண்டும்.

 

நலப்பயணம் தொடரும்........

by Swathi   on 25 May 2015  0 Comments
Tags: உத்தராயணம்   தட்சிணாயணம்   Siddha Maruthuvam   சித்த மருத்துவம்           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44 நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.