LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : பருவகால ஒழுக்கங்கள் – அறிமுகம் – 31

பருவகால ஒழுக்கங்கள் – அறிமுகம்


தமிழர்கள் பன்னிரண்டு மாதங்கள் கொண்ட ஓர் ஆண்டை ஆறு பருவங்களாக பிரித்திருக்கின்றனர். ஒவ்வொரு பருவங்களும் இரண்டு மாதங்களைக் கொண்டது.

 


ஈராறு திங்களையும் இவ்விரண்டாய் வில் முதலாய்

ஓராறிருதுவாய் ஓதுவரே – சீரார்

இரும் பொழுதின் பேர் தான் இருபணி வேனில்

கருமுகில் கூதிரெனக் காண்.

-      மருத்துவத் தனிப்பாடல்

 

1.   இளவேனில் காலம் – சித்திரை, வைகாசி (April 14 – June 13)

2.  முதுவேனில் காலம்  – ஆனி, ஆடி (June 14 – August 13)

 3.  கார் காலம்          - ஆவணி, புரட்டாசி (August 14 – October 13)

4.  கூதிர் காலம் – ஐப்பசி, கார்த்திகை (October 14 – December 13)

5.  முன்பனிக் காலம் – மார்கழி, தை (December 14 – February 13)

6.  பின்பனிக் காலம் – மாசி, பங்குனி (February 14 – April 13)

 

தமிழகத்தில் நிலவும் பருவ மாற்றங்களின் அடிப்படையில் இந்த ஆறு பருவ காலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆறு பருவங்களும் சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது சூரியனின் தெற்கு நோக்கிய அல்லது வடக்கு நோக்கிய இயக்கத்தினை (பூமியின் சுழற்சியை) அடிப்படையாகக் கொண்டவை. இந்த ஒவ்வொரு பருவங்களிலும் நடக்கும் இயற்கை நிகழ்வுகள் வேறுபடும். ஒவ்வொரு பருவத்திற்கென தனி குணங்கள் உண்டு. பருவகாலங்களின் நிகழ்வுகளில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. ஆனால் இலக்கியங்களில் எழுதப்பட்ட காலம் முதல்  இன்று வரை அந்த பருவத்திற்கான தனி குணங்களில் பெரிய மாற்றங்களில்லை.

 

உதாரணமாக கார்கால நிகழ்வுகளின் இந்திர கோபப் பூச்சி மகிழ்தலும், காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குவதும் பல இடங்களில் காணாமல் போய்விட்டன. ஆனால் கார் காலத்தின் தனி குணமான குளிர் காற்று வீசுதலும் அதனைத் தாங்குவதற்காக உடல் வெப்பம் தொலிற்குச் சென்று விடுவதால் உயிர் வெப்பம் (உள்வெப்பம்) குறைவதுமான அடிப்படை குணங்களில் மாற்றங்களில்லை.

 

கால மாற்றங்களுக்கேற்றவாறு உடலும் தம்மை மாற்றி அமைத்துக் கொள்ள முயற்சி செய்யும். அந்த முயற்சிகளுக்கு துணை செய்வது போன்ற செயல்களை நாம் செய்தால் பருவ மாற்றங்களால் உடலும் மனமும் பாதிப்படையாதவாறு காப்பாற்றிக் கொள்ளலாம். பருவ மாற்றத்தால் நிகழும் சில உடல் மாற்றங்கள்:

 

பருவ மாற்றத்தால் உடல் எடை மாற்றம் நிகழும். உறக்கத்தில் மாற்றம் நிகழும். சோர்வு அல்லது புத்துணர்ச்சி கூடும். பசி ஆர்வம் கூடும் அல்லது குறையும்.

 

மனதைப் பொருத்துவரை இனம்புரியாத அச்சமோ மகிழ்வோ உண்டாகும். மன அழுத்தம் அல்லது பதற்றம் கூடும்.

 

இதே போன்று பருவ மாற்றங்களினால் காரணமில்லா உடல் மற்றும் மன பிரச்சனைகள் ஏற்படுவதாக பல இக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

இந்த கால மாற்றங்களுக்கு ஏற்ற உணவுகள் செயல்களை சித்தர் நூல்கள் கூறியுள்ளன. அவற்றை முறையாக பின்பற்றினால் அக்காலங்களில் வரும் நோய்களை மட்டுமின்றி பிற பருவ காலங்களிலோ வாழ்வின் வேறு ஒரு காலத்திலோ உடலைத் தாக்கும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

 

நோய் எதிர்பாற்றலை  பொறுத்த வரையில் முன்பனி, பின்பனி காலங்களில் (December 14 to April 13) உயர்ந்த நிலையில் இருக்கும். மனிதர்கள் மட்டுமின்றி பிற உயிர்களும் தாவரங்களும் உயர்ந்த ஆற்றலுடன் இருக்கும்.

 

இளவேனில் காலத்திலும் கூதிர் காலத்திலும் (April 14 to June 13 & October 14 to December 13) உயிர்களின் எதிர்ப்பாற்றல் மத்திம நிலையில் இருக்கும்.

 

முதுவேனில் காலத்திலும் கார் காலத்திலும் (June 14 to October 13) உயிர்களின் ஆற்றல் மிகவும் குறைந்த நிலையில் இருக்கும். அந்தந்த காலங்களில் உடல், உயிர் ஆற்றல்களை உயர்த்திக் கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு.

 

எந்தெந்த காலங்களில் என்னென்ன செய்ய வேண்டும் ? என்னென்ன செய்யக் கூடாது என இனி வரும் வாரங்களில் பார்க்கலாம்.

 

 நலப்பயணம் தொடரும்.........................

 

 

 

by Swathi   on 13 Apr 2015  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள் பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள்
மனித உடல் என்கிற அதிசயம்... மனித உடல் என்கிற அதிசயம்...
ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும் ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்... சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்...
வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும். வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.
சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி
ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள் ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள்
சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4 சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.