LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : உறக்கம் – 20

உறக்கம்


மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு காலத்தை நாம் உறக்கத்திற்காக நாம் செலவிடுகிறோம் என்பது நமக்குத் தெரியும்.


அந்த நேரத்தில் ஒழுங்கான உறக்க முறையினைப் பின்பற்றினால் மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு காலத்தில் ஆக்கப்பூர்வமான பலவற்றை சிறப்பாகச் செய்ய முடியும். உடல்நலமும் பாதுகாக்கப்படும்.


உடலின் உள் உறுப்புகள் தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு புத்துணர்ச்சி பெற ஒழுங்கான உறக்க முறை அவசியமாகின்றது.


உறக்கத்தைப் பற்றி ஒரு சித்தர் பாடல்

                   ஐந்திந் திரியங்களசவுக் கியமகலும்

                        நைந்த மனதிற் குற்சாக நண்ணுங்காண் – பைந் தொடியே

                        மேனீட்டு மாயுளுறும் மெய்யினயர் வொழியுங்

                        கானீட்டிப் பள்ளி கொள்ளுங்கால்

எனக் கூறுகின்றது.

 

இந்திரியங்கள் என்பவை இரண்டு வகைப்படும். மெய், வாய், கால், கை, நீர்வாயில், மலவாயில் என்கிற கன்ம இந்திரியங்களும் (உணர்வு உறுப்புகளும் இயக்க உறுப்புகளும் – (Sensory and motor Organs) உறக்கத்தால் புத்துணர்ச்சி அடையும். மனம் உற்சாகமடையும். ஆயுள் நீளும் என்று அந்த சித்தர் பாடல் கூறுகின்றது. இதிலிருந்து உடலும் மனமும் இயல்பாக இயங்க ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பது தெரிகின்றது.

 

எவ்வளவு நேரம் உறங்க வேண்டும்?


இளம் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு அதிக நேரம் உறக்கம் அவசியம்.


                        பிறந்த குழந்தை – 16-20 மணி நேரம்

                        3 மாதத்திலிருந்து ஒரு வயது வரை – 15 மணி நேரம்

                        ஒரு வயது முதல் மூன்று வயது வரை – 14 மணி நேரம்

                        மூன்று வயது முதல் ஏழு வயது வரை – 12 மணி நேரம்

                        ஏழு வயது முதல் பத்து வயது வரை – 10 மணி நேரம்

                        பத்து முதல் பதினேழு வயது வரை – 7-9 மணி நேரம்

                        17 வயதிற்கு மேல் – 7 மணி நேரம்


உறக்கம் அவசியமாகின்றது. பதிமூன்று வயதிற்கு மேலாக பிராணாயாமத்தின் மூலமாகவும் ஓக இருக்கைகளின் (யோகாசனங்கள்) மூலமாகவும் உறக்க நேரத்தினைக் குறைத்துக் கொள்ளலாம்.


எப்படி உறங்க வேண்டும்?

 

சித்த மருத்துவத்தில் பல வகையான படுக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு தனித்துவம் உண்டு. சிறப்பு உண்டு. உதாரணமாக கோரைப் பாயினால் உடல் சூடு தணியும். காச நோய் உள்ளவர்களின் உடல் வன்மை பெருகும். இடையீடு இல்லாத உறக்கம் உண்டாகும். இது போன்ற ஏதேனும் ஒரு படுக்கையினைத் தேர்ந்தெடுத்து இடது பக்கமாகச் சரிந்து படுக்க வேண்டும். அதாவது இடது கையை மடித்துத் தலையணையை ஒட்டியோ, தலைக்குக் கீழோ வைத்துக் கொண்டு இடது காலை மடித்துக் கொண்டு வலது காலை நீட்டிக் கொண்டு வலது கையை நீட்டி வலது காலிற்கு மேல் வைத்துக் கொள்ளல் வேண்டும். இப்படி உறங்கினால்தான் உறக்கத்தின் முழுபலனை அடைய முடியும் எனச் சித்தர்கள் கூறுகின்றனர்.

 

வலது பக்கமாகவோ, மல்லாந்தோ, குப்புறப்படுக்கவோ, கைகளையும் கால்களையும் விரித்தோ தூங்கக் கூடாது.


எந்தத் திசையில் தலை வைக்க வேண்டும்?

 

கிழக்குத் திசையில் தலை வைத்துப் படுத்தல் சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. இப்படிப் படுப்பதால் உடல் உள் உறுப்புகள் வலிமையடையும். கூரிய அறிவு உண்டாகும். தெற்குப் பக்கம் தலை வைத்தால் உடல் நலம் பெறும். ஆயுள் நீளும். மேற்குப் பக்கம்  தலை வைத்தால் கனவு அதிகம் உண்டாகும். ஆழந்த உறக்கத்திற்குத் தடை ஏற்படும். உடல் அயர்ச்சி உண்டாகும். வேறு வழி இல்லை என்றால் மட்டுமே மேற்குப் பக்கம் தலை வைக்க வேண்டும். வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கவே கூடாது. நரம்புத் தளர்ச்சி, உயிர் ஆற்றல் இழப்பு ஏற்பட்டு நோய்கள் உடலைத் தாக்கும். ஆயுள் குறையும்.


எந்த நேரம் உறங்க வேண்டும்?

 

இரவு ஒன்பது மணியிலிருந்து காலை ஐந்து மணிக்குள்ளாக 6 அல்லது 7 மணி நேரம் உறங்க வேண்டும். அந்த நேரத்தில் உறங்கினால் மட்டுமே உடல் நன்மைகள் கிடைக்கும்.


பகல் உறக்கம் கூடாது.

 

பகலுறக்கமும் மேலே குறிப்பிட்ட நேரம் தவறிய வேறு நேரத்திலான உறக்கமும் உடலிற்குக் கேடு விளைவிக்கும் என சித்தர்கள் கூறுகின்றனர். பகலில் உறங்கினால் உடலின் இயல்பான சுழற்சி இயக்கம் பாதிக்கப்பட்டு பல நோய்கள் ஏற்படும்.

 

அதிக உறக்கம்

 

அதிக நேரம் உறங்க்க் கூடாது. அதிக நேரம் உறங்கினால் மயக்கம், தலைவலி, மூக்கு நீர் வடிதல் (Sinusitis), உடல் சூடு கூடுதல், போன்றவை ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படும்.

 

குறைந்த உறக்கம் அல்லது உறக்கமின்மையால் ஏற்படும் தீமைகள்


                        சித்தி மயக்கஞ் செறியும் ஐம்புலத் தயக்கம்

                        மெத்த பயமனலம் மந்தமிவை – நித்தமுற

                        அண்டுஞ் சிலரை நாயாய் பன்னோய் கவ்வுமிராக்

                        கண்டுஞ்சி லாரை நம்பிக் காண்


என சித்தர் பாடல் கூறுகின்றது.


இரவில் உறக்கம் இல்லாவிட்டால் புத்தி தெளிவின்மை, ஐந்து புலன்களுக்குச் சோர்வு, மயக்கம், பய உணர்வு, படபடப்பு, மனத் தளர்ச்சி, பசிக்குறைவு, மலச்சிக்கல் போன்றவை ஏற்பட்டு நாளடைவில் பல நோய்கள் உடலை வாட்டுவதற்குக் காரணமாகும்.

 

உறக்கம் பற்றிய மேலும் சில தகவல்கள், உற்கமின்மைக்கான எளிய தீர்வுகள் போன்றவற்றை இனி பார்க்கலாம்.

 

நலப் பயணம் தொடரும்.......

by Swathi   on 27 Jan 2015  0 Comments
Tags: Sleeping   Siddha Maruthuvam   உறக்கம்   சித்த மருத்துவம்           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
இரவு தூக்கம் வரவில்லையா.. இந்த முத்திரையை முயற்சி செய்துபாருங்கள்... இரவு தூக்கம் வரவில்லையா.. இந்த முத்திரையை முயற்சி செய்துபாருங்கள்...
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : சோர்வினை அடக்கினால் வரும் துன்பங்கள் – 45 நலம் காக்கும் சித்த மருத்துவம் : சோர்வினை அடக்கினால் வரும் துன்பங்கள் – 45
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.