LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தி மருத்துவம் – 25

வாந்தி மருத்துவம்


நாம் ஏதேனும் வித்தியாசமான உணவு உண்டு விட்டால் அது உடலிற்கு ஒத்துக் கொள்ளாமல் செரிக்காமல் வயிற்றிலேயே தங்கி பல துன்பங்களை விளைவிக்கும். அச்சமயத்தில் ஏற்படும் தலைவலி, மயக்கம், கண் இருளல், சுரம் போன்ற துன்பங்கள் வாந்தி ஏற்பட்டவுடன் சரியாவதை நம்மில் பலர் அனுபவித்திருக்கிறோம். இது நமக்குத் தெரிந்த மேலோட்டமான நிகழ்வு. இது போன்ற துன்பங்கள் வெளியே தெரியாத நிலையிலும் வாந்தி மருத்துவத்தை மேற்கொள்ளவதால் பல நன்மைகள் உடலுக்குக் கிடைப்பதாக சித்தர்கள் கூறுகின்றனர். அதாவது அன்றாட உடல் இயங்கியல் நிகழ்வுகளில் குடலில் தங்கும் நச்சுகளை வெளியேற்ற பேதி மருத்துவம் எப்படி பயன்படுகிறதோ அது போன்றே வாந்தி மருத்துவம் மேல் வயிறு, மார்பறை, மூச்சுப்பாதைகளில் தங்கும் நச்சு, கோைழ    ( சளி ) மற்றும் உடலிற்கு ஒவ்வாத பொருட்களை வேகமாக வெளியேற்றி உடலின் அழல் என்கிற ஆற்றலை ( பித்தம், சூடு, வெப்பம் ) இயல்பு நிலைக்குக் கொண்டு வரும்.

 

“ ஆறு திங்கட் கொரு தடவை வமன மருந்தயில்வோம் “ என்கிற சித்தர் பாடலால் 6 மாதத்திற்கு ஒரு முறை நாம் வாந்தி செய்விக்கக் கூடிய மருத்துவ முறையை மேற்கொள்ளல் வேண்டும் என அறிய முடிகின்றது.

 

வாந்தி மருத்துவத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று ஏதேனும் உடலில் துன்பம் ஏற்பட்டிருக்கும் போது வாந்தி செய்விப்பது. மற்றொன்று உடலிற்குத் துன்பம் நேராமல் தடுக்கும் பொருட்டு 6 மாதத்திற்கு கொருமுறை வாந்தி செய்வித்து உடலைப் பாதுகாப்பது.

 

நோய் வரமால் தடுக்கும் பொருட்டு வாந்தி செய்விக்க பல பொருட்கள் பயனுள்ளதாய் விளங்குகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.  

 

1. உப்புக் கரைசல்

200 மி. லி நீருடன் 20 கிராம் கல் உப்பு கலந்து கரைத்து அக்கரைசலை ஒரே நேரத்தில் குடிக்க வேண்டும். 5 வயது நிரம்பிய சிறு குழந்தை என்றால் இக்கரைசலில் ¼ பங்கு அதாவது 50 மி. லி. தரலாம். சிறிது நேரத்தில் வாந்தியாகும்.   

 

2. படிகாரம்

2 கிராம் படிகாரம் (சீனாக்காரம்) எடுத்து 30 மி. லி. நீருடன் கலந்து பருகினால் வாந்தியுண்டாகும்.   

 

3. கடுகு

1 தேயிலை கரண்டி யளவு கடுகு எடுத்து பொடி செய்து 50 மி.லி. வெந்நீருடன் கலந்து அருந்தினால் வாந்தியாகும்.     

 

4. ஆடாதோடை இலை

ஆடாதோடை இலைச்சாறு அல்லது இலையை வேகவிட்ட பிழிந்த சாறு 10  -  25  மி. லி. அளவுடன் தேன் கலந்து பருகினால் வாந்தியாகும். 1 வயதுடைய சிறு குழந்தைகளாயின் 10 சொட்டு அளவு தேனுடன் கொடுக்க வேண்டும். மார்பு, மூச்சுப்பாதையில்  நுட்பமாகக் கட்டியிருக்கும் கோைழ வெளியாக இக்கலவை உதவும். இது போன்றே துளசி, கரிசாலை, முசு முசுக்கை, வேலிப்பருத்தி போன்ற பல மூலிகைகளை பயன்படுத்தலாம். இவையாவும் எவ்விதப் பக்கவிளைவும் ஏற்படுத்தாத வாந்தி மருத்துவ முறைகளாகும். சித்த மருத்துவ ஆலோசனையுடன் உடலிற்குத் தேவையான வாந்தி மருத்துவத்தை மேற்கொள்ளலாம்.

 

வாந்தி மருத்துவம் மேற்கொண்ட  அன்று என்ன சாப்பிட வேண்டும் ?

      தானியக் கஞ்சி, தேன் கலந்த நீர், மோர், பழச்சாறு போன்ற வயிற்று இயக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தாத உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். பசி ஏற்படுவதற்குத் தகுந்தாற்போல் அடிக்கடியும் பருகலாம். இது அருந்தும் போது மீண்டும் வாந்தியானலோ, வயிறு இலேசாக வலித்தாலோ வியர்வை ஏற்பட்டாலோ அச்சப்படத் தேவையில்லை.

 

என்ன பயன் ?

  

1. பேதி மருத்துவத்திற்க்கான பயன்கள் இதற்கும் பொருந்தும்.

  

2. வயிறு, சிறுகுடலின் முதல் பகுதி, கல்லீரல், கணையம், மண்ணீரல் இவற்றின் இயக்கங்கள் சீராகும். பசி ஆர்வம் மேம்படும். சீரணம் சீராகும். உணவின் நுண் ஊட்டச்சத்துகள் முழுமையாக உட்கிரகிக்கப்படும்.

  

3. நுரையீரல், மூச்சுப் பாதைகளின் இயக்கம் சீராகும். மூக்கிலிருந்து நுரையீரல் வரையுள்ள பகுதிகளில் கரையாமல் நுட்பமாக தங்கியுள்ள சளி, நுட்பமான மலினங்கள் வெளிப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மூலிகை வாந்தி மருத்துவத்தால் மூச்சுப் பாதை கோளாறுகளை வராமல் தடுத்துவிட முடியும்.

  

4. உடலின் அழல் ( பித்தம், சூடு, வெப்பம் ) என்கிற உயிராற்றல் இயல்பு நிலைக்கு வருவதால் உடல் இயக்கம் சீராகும். குறிப்பாக மூளையின் செயல்பாடுகள் மேம்படும். புத்திக் கூர்மை உண்டாகும். களைப்பு நீங்கி உடல் சுறுசுறுப்பாகும்.

 

தற்போது தனியாக வாந்தி மருத்துவத்தை நாங்கள் வழங்குவதில்லை. 4 மாததிற்க்கொரு முறை வழங்கும் பேதி மருந்துகளே வாந்தியையும் உண்டாக்குகின்றன. காட்டாக அகத்தியர் குழம்பு, சித்தாதி எண்ணெய் போன்றவையாகும். சிறு குழந்தைகளுக்கு மார்பில் கோைழ கட்டு, பசி மந்தம் போன்ற நிலைகளில் மட்டும் தனியாக வாந்தி மருத்துவத்தை வழங்குகின்றோம். நோய் வராமல் தடுக்க பேதி மருத்துவத்தோடு வாந்தி மருத்துவத்தையும் வழங்குவதே வழக்கத்தில் உள்ளது. தகுந்த மருந்து ஆலோசனைக்குப் பின் உங்கள் உடம்பிற்கு ஏற்ற மருத்துகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும்.

நலப்பயணம் தொடரும்......

by Swathi   on 02 Mar 2015  0 Comments
Tags: Siddha Maruthuvam   Vomiting Treatment   சித்த மருத்துவம்   வாந்தி மருத்துவம்           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44 நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.