LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

நல்லவர்களை கடவுள் காப்பான்!

     குருசேத்திரப் போரில் அர்ச்சுனனின் அம்புகளினால் அடிபட்டுக் கீழே கிடந்தார் பிதாமகர் பீஷ்மர். அவரைச் சுற்றி கவுரவர்கள் நின்றனர். அவர்கள் பேசி விட்டு விடைபெற்றுச் சென்றவுடன் பாண்டவர்கள் வந்து அவரைச் சுற்றி நின்றனர்.


     அப்போது பீஷ்மரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. இதைக் கவனித்தான் அர்ஜுனன். “பிதாமகரே! நீங்கள் கண்ணீர் வடிக்கக் காரணம் என்ன?” என்று ஆத்திரத்துடன் கேட்டான் அவன்.


     “பாண்டவர்களாகிய நீங்கள் நல்லவர்கள் என்பதை நான் அறிவேன்! நீங்கள் இதுவரை பட்ட சிரமங்களும், துன்பங்களும், அடைந்த துயரங்களும் என் கண் முன் இப்போது நிழலாடுகின்றன. அதனால் என்னை அறியாமல் என் கண்கள் கண்ணீரைப் பொழிவிக்கின்றன. அதே சமயத்தில் இன்னொரு நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. நல்லவர்களுக்குத் துணையார் தெரியுமா? கடவுள் தான்! அவன் எப்போதும் அவர்களை நீங்காமல் காப்பான்.


     “அந்த நல்லவர்கள் பதவி ஆசையில்லாமல், பணத்தின் மேல் எந்தவித மோகமும் இல்லாமல் வாழ்ந்து வரும் போது, வாழ்க்கையின் நன்மைகளைக் கடவுள் அவர்களுக்கு முடிவிலே கொண்டு வந்து கொடுப்பான். இதை இந்த வேளையில் நான் பார்க்கிறேன், உணர்கிறேன். கெட்டவர்களை நிச்சயம் அழிப்பார். நல்லவர்களை வாழ வைப்பார் என்று எண்ணிய போது என் கண்களில் நீர் சுரந்தது!” என்றார் அவர். இதைக் கேட்டதும் பாண்டவர்கள் மிகவும் நெகிழ்ந்து போயினர்.

by parthi   on 09 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.