LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தெக்கத்தி மண்ணின் படைப்பாளி இரா.நாறும்பூநாதன் காலமானார்.

 

தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரும், தமுஎகச நிர்வாகியுமான இரா.நாறும்பூநாதன் (64) காலமானார்.


தமிழாசிரியர் ராமகிருஷ்ணன்- சண்முகத்தம்மாள் தம்பதியின் மகனான நாறும்பூநாதன் கழுகுமலையில் பிறந்தார். இவரது மனைவி சிவகாமசுந்தரி, தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாறும்பூநாதன் நெல்லையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகன் ராமகிருஷ்ணன், கனடாவில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.


நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது நாறும்பூநாதனுக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக நெல்லை வண்ணாரபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இவரது மறைவு எழுத்தாளர்கள், வாசகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாரத ஸ்டேட் வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற நாறும்பூநாதன் த.மு.எ.க.ச மாநில துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எழுதியுள்ள இவர், நெல்லையை மையமாக வைத்துப் பல படைப்புகளைத் தந்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலையில், 1960-இல் பிறந்தவர் நாறும்பூநாதன். கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவரான இவர், வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். மனைவி, சிவகாமசுந்தரி தலைமை ஆசிரியை ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகன் தீபக் கனடாவில் பொறியாளராக உள்ளார்.


திருநெல்வேலியைச் சுற்றி வாழ்ந்த சாதாரண மக்கள் முதல் புகழ் பெற்றவர்கள்வரை பலரைப் பற்றிய சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட இவரது ‘கண் முன்னே விரியும் கடல்’ ஒரு முக்கியமான தொகுப்பு நூல். திருநெல்வேலியைப் பற்றி இவர் எழுதியிருக்கும் ‘திருநெல்வேலி: நீர்-நிலம்-மனிதர்கள்’ மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த நூல்.
நாறும்பூநாதனின் ’கனவில் உதிர்ந்த பூ’ என்ற சிறுகதை பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா தன்னாட்சிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. இவரது சில கட்டுரைகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.


திருநெல்வேலி மக்களின் இலக்கிய முகமாக இருப்பவர் எழுத்தாளர் நாறும்பூநாதன். அவருக்குத் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு உ.வே.சா. விருது வழங்கிக் கௌரவித்தது. நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் பத்துக் கட்டுரைத் தொகுப்புகளும் இவரது இலக்கியப் பங்களிப்பாகப் பார்க்கப்படுகிறது. இவரின் மறைவுக்கு இலக்கியச் செயல்பாட்டாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்திய ஸ்டேட் வங்கியில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். இவர் எழுதிய சிறுகதைகள் ‘கனவில் உதிர்ந்த பூ’, ‘ஜமிலாவை எனக்கு அறிமுகப்படுத்திவன்’, ‘இலை உதிர்வதைப்போல’, ‘மரத்துப்போன சொற்கள்’ என்று தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. ‘கண் முன்னே விரியும் கடல்’, ‘கடன் எத்தனை வகைப்படும்’, ‘யானைச் சொப்பனம்’, ‘ஒரு பாடல் ஒரு கதை’, ‘திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள்’, ‘வேணுவன மனிதர்கள்’, ‘பால்வண்ணம்’, ‘ஒரு தொழிற்சங்கப் போராளியின் டைரிக்குறிப்புகள்’, ‘மகாகவி பாரதி’ உள்படப் பல முக்கியக் கட்டுரைகளை இவர் எழுதியிருக்கிறார்.


திருநெல்வேலியின் பெருமைகளை விவரிக்கும் வகையில் இவர் எழுதிய ‘திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள்’ என்ற நூல் பல ஆயிரம் பிரதிகள் விற்று சாதனை படைத்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக வருபவர்கள், தங்களுடைய விருந்தினர்களுக்கு இந்த நூலையே பரிசளிக்கும் வழக்கம் இருக்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முக்கியப் பொறுப்புகளிலிருந்து செயல்பட்டுவந்த நாறும்பூநாதன், திருநெல்வேலி புத்தகத் திருவிழாவிலும், பொருநை இலக்கியத் திருவிழாவிலும் முக்கியப் பங்கு வகித்தவர். 
இவரது ‘யானைச் சொப்பனம்’, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இளங்கலை முதலாண்டு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.


கல்லூரிக் காலத்தில்  ’மொட்டுகள்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்திய நாறும்பூநாதன், ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, உள்ளிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை அதில் வெளியிட்டிருக்கிறார். சாகித்திய அகாடமி விருதுபெற்ற மேலாண்மை பொன்னுச்சாமி, கந்தர்வன் ஆகியோரைத் தனது இலக்கிய முன்னோடிகளாகக் குறிப்பிடுவார் நாறும்பூநாதன்.


கரிசல் இலக்கியத்தின் தந்தையான கி.ராஜநாராயணன் தொடங்கி, ச.தமிழ்ச்செல்வன், வண்ணதாசன், கலாப்ரியா, நாஞ்சில் நாடன் உள்ளிட்ட புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நெருங்கிய நட்பு வட்டத்திலிருந்துவந்த நாறும்பூநாதன், சிறந்த சமூகச்செயற்பாட்டாளராகவும் விளங்கினார்.

நாறும்பூநாதனின் இழப்பு தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு! 

 

by hemavathi   on 17 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா! 'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா!
தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று  - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழறிஞர் உதவித்தொகை உயர்வு - குறமகள் இளவெயினிக்கு திருவுருவச்சிலை -  மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிப்பு தமிழறிஞர் உதவித்தொகை உயர்வு - குறமகள் இளவெயினிக்கு திருவுருவச்சிலை - மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிப்பு
மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கக் குழு மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கக் குழு
கடலூர் பெண்  குரூப் -1 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை கடலூர் பெண் குரூப் -1 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை
பிரதமர் திறந்துவைத்த பாம்பன் புதிய ரயில் பாலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? பிரதமர் திறந்துவைத்த பாம்பன் புதிய ரயில் பாலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்குக் காமராஜர் பெயர் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்குக் காமராஜர் பெயர் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
1500 பாடல்கள் எழுதிய கவிஞர் முத்துலிங்கத்துக்கு பாராட்டு விழா! 1500 பாடல்கள் எழுதிய கவிஞர் முத்துலிங்கத்துக்கு பாராட்டு விழா!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.