LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

2 தமிழக ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது

 

தமிழகத்​தில் 2 ஆசிரியர்​கள் உட்படத் தேசிய அளவில் 45 பேர் தேசிய நல்​லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

ஆசிரிய​ராக பணி​யாற்றி குடியரசுத் தலை​வ​ராக உயர்ந்த டாக்​டர் ராதாகிருஷ்ணனை போற்​றும் வகை​யில் மத்​தி​ய-​மாநில அரசுகள் சார்​பில் ஆண்​டு​தோறும் நல்​லாசிரியர் விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன.

அந்தப் வகை​யில், மத்​திய கல்வி அமைச்​சகம் சார்​பில் இந்​திய அளவில் சிறந்த ஆசிரியர்​களுக்கு தேசிய நல்​லாசிரியர் விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்​கப்​பரிசு, வெள்​ளிப்​ப​தக்​கம், பாராட்​டுச்​ சான்​றிதழ் ஆகிய​வற்றை உள்​ளடக்​கியது. டெல்​லி​யில் செப்​டம்​பர் 5-ம் தேதி நடை​பெறும் ஆசிரியர் தின விழா​வின்​போது இவ்​விருது வழங்​கப்​படும்.

இந்​நிலை​யில், 2025-ம் ஆண்​டுக்​கான தேசிய நல்​லாசிரியர் விருதுக்கு தேர்​வுசெய்​யப்​பட்ட ஆசிரியர்​களின் பட்​டியலை மத்​திய கல்வி அமைச்​சகத்​தின் பள்​ளிக்​கல்​வித்​துறை வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, தேசிய அளவில் மொத்​தம் 45 பேர் தேசிய நல்​லாசிரியர் விருதுக்கு தேர்​வுசெய்​யப்​பட்​டுள்​ளனர். அந்த பட்​டியலில் தமிழகத்​தில் இருந்து 2 ஆசிரியைகள் இடம்​பெற்​றுள்​ளனர்.

சென்னை மயி​லாப்​பூர் பி.எஸ்​.சீனியர் செகண்​டரி பள்ளி (சிபிஎஸ்இ பள்​ளி) ஆசிரியை ரேவதி பரமேஸ்​வரன், திருப்​பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பார​தி​யார் நூற்​றாண்டு அரசு பெண்​கள் மேல்​நிலைப்​பள்ளி ஆசிரியை எம்​.​விஜயலட்​சுமி ஆகியோர் தேசிய நல்​லாசிரியர் விருதுக்கு தேர்​வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

அதே​போல், புதுச்​சேரி​யில் தில்​லை​யாடி வள்​ளி​யம்மை அரசு உயர்​நிலைப்​ பள்ளி ஆசிரியர் வி. ரெக்ஸ் என்ற ராதாகிருஷ்ணனுக்கு தேசிய நல்​லாசிரியர் விருது கிடைத்​துள்​ளது. டெல்​லி​யில் செப்​டம்​பர் 5-ல் நடை​பெறும் ஆசிரியர் தின​விழா​வில் குடியரசு தலை​வர் திர​வுபதி முர்மு தேசிய நல்​லாசிரியர் விருதுகளை ஆசிரியர்​களுக்கு வழங்கி கவுரவிக்​கிறார்.

 

 

by hemavathi   on 27 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜி.எஸ்.டி வரி சீரமைப்பு - விலை குறையும், உயரும் பொருள்களின் பட்டியல் ஜி.எஸ்.டி வரி சீரமைப்பு - விலை குறையும், உயரும் பொருள்களின் பட்டியல்
இந்தியாவில் 10 ஆண்டுகளில்  குழந்தைகள் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்தது இந்தியாவில் 10 ஆண்டுகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்தது
இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள அனுமதி இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள அனுமதி
ஹைத​ரா​பாத், அமராவ​தி, சென்னை, பெங்​களூருவை இணைக்கும் புல்லட் ரயில்- சர்வே பணிகள் தொடக்கம் ஹைத​ரா​பாத், அமராவ​தி, சென்னை, பெங்​களூருவை இணைக்கும் புல்லட் ரயில்- சர்வே பணிகள் தொடக்கம்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக உர்ஜித் பட்டேல் நியமனம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக உர்ஜித் பட்டேல் நியமனம்
நதிநீர் இணைப்பும்.  உயரும் இந்தியப் பொருளாதாரமும் - நதிகளை இணைப்பதால் உள்ள லாப நட்ட கணக்கு! நதிநீர் இணைப்பும். உயரும் இந்தியப் பொருளாதாரமும் - நதிகளை இணைப்பதால் உள்ள லாப நட்ட கணக்கு!
ராமேஸ்வரம் விமான நிலையத்துக்காக அரசு அடையாளம் கண்டுள்ள 5 இடங்கள் ராமேஸ்வரம் விமான நிலையத்துக்காக அரசு அடையாளம் கண்டுள்ள 5 இடங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.