தமிழகத்தைச் சேர்ந்த 2 பேருக்குத் தேசிய நல்லாசிரியர் விருது
மறைந்த குடியரசுத் தலைவர் ராதா கிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் மத்திய அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலில் தேர்வுசெய்யப்பட்ட 45 பேரில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்.சி. சரஸ்வதி> சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலிப் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்குச் செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கி கவுரவிப்பார்.
|