LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மணல் கொள்ளையை தடுக்க - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு !

இந்தியாவின் எந்த இடத்திலும், முறையான உரிமம் பெறாமல் அல்லது சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், ஆற்றிலும் மணல் அள்ளக் கூடாது. என தேசிய பசுமை தீர்ப்பாயம், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்,  மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு முளுவதும் உள்ள ஆற்றுப் படுகைகளில், முறையான உரிமம் பெறாமல், சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகின்றன. மணல் கடத்தல்காரர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். எடுத்து காட்டாக சமீபத்தில் உத்திர பிரதேசத்தில் பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்காவை , அம்மாநில அரசு, "சஸ்பெண்ட்' செய்துள்ளது. மற்றொரு இடத்தில், மணல் கடத்தல்காரர்களுக்கு எதிராக குரல் கொடுத்த ஒருவரை, அவரின் வீட்டில் வைத்தே, பட்டப் பகலில், மணல் கொள்ளையர்கள் கொலை செய்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள ஆறுகளில், தினம்தோறும் லட்சக்கணக்கான டன் மணல், சட்ட விரோதமாக அள்ளப்படுகிறது. இதனால், மத்திய, மாநில அரசுகளுக்கு, பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு,  இயற்கை வளம் சீர்கெடுவதுடன், கொள்ளையடிக்கப்படுகிறது என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர்குமார் தலைமையிலான பெஞ்ச், இந்த மனு மீது விசாரணை நடத்தி அதிரடி உத்தரவை பிறப்பித்தது. உத்தரவில் கூறியிருப்பதாவது, முறையான அனுமதியின்றி, சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், நாட்டின் எந்த ஆற்றிலும் மணல் அள்ளக் கூடாது. இந்த உத்தரவு, உத்திர பிரதேச மாநிலத்துக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள எல்லா மாநிலத்திற்கும் பொருந்தும். மணல் குவாரிகளை கண்காணிக்கும் அதிகாரிகள், அனைத்து மாநில போலீஸ் அதிகாரிகள், இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும். இது தொடர்பாக, அனைத்து மாநில அரசுகளும், இம்மாதம், 14ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

by Swathi   on 05 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.