தன் அண்ணன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி தற்போது, தனி ஒருவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக முதன் முறையாக நயன்தாரா நடிக்கிறார்.
இந்த படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்க இருப்பது நாம் அறிந்ததே.
தற்போதைக்கு இந்த படம் பற்றிய புதிய செய்தி என்னவென்றால், இந்த படத்தில் முதல் முறையாக நயன்தாரா போலீஸாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
என் முந்தைய படங்களை காட்டிலும் இந்த படம் தனித்தன்மையுடன் இருக்கும். மேலும் இது தன் மனம் கவர்ந்த கதை என சமூக வலைத்தளமான ட்விட்டரில் ட்விட் செய்துள்ளார் அதன் இயக்குனர் ராஜா.
|